இலங்கை

காணிகளை விடுவிப்பது தொடர்பில் உறுதியான முடிவு கிடைக்கவில்லை: கேப்பாபுலவு மக்கள் விசனம்

தமது காணிகளை விடுவிப்பது தொடர்பில் இதுவரை தனக்கு உறுதியான முடிவு கிடைக்கவில்லை என முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் தெரிவித்ததாக கேப்பாபுலவு மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்கள் தமது காணிகளை விரைவில் விடுவிக்கக்கோரி ஜனாதிபதிக்கும் முல்லைத்தீவு மாவட்ட செயலாளருக்கும் கடந்த 11.03.2024 அன்று முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் ஒன்றினை கையளித்துள்ளனர். இதன்போது குறித்த கடிதத்தை தான் உரிய தரப்புக்களுக்கு அனுப்பி பத்து நாட்களில் ஒரு பதிலை பெற்று வழங்குவதாக தெரிவித்தார் இந்நிலையில் நேற்று […]

இலங்கை

திருகோணமலை – சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்ட பாவனைக்குதவாத உணவுப்பொருட்கள்

  • March 26, 2024
  • 0 Comments

திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்துக்குட்பட்ட பகுதியில் (25) மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின்போது பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், பல வியாபார நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. திருகோணமலை பிராந்திய சுகாதார திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கு அமைவாக உணவகங்கள், பேக்கரிகள்,வியாபார நிலையங்கள், உணவு உற்பத்தி நிலையங்கள் போன்றவற்றில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின்போது குளிர்சாதன பெட்டிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் விடயத்துக்கு பொறுப்பான அதிகாரியொருவர் தெரிவித்தார். இதன்போது எட்டு வியாபார […]

இந்தியா

தினமும் பாடசாலைக்கு குடித்து விட்டு வந்த ஆசிரியர்… மாணவர்கள் செய்த செயல் !

  • March 26, 2024
  • 0 Comments

சத்தீஸ்கர் மாநிலம், பஸ்தர் மாவட்டத்தில் குடிபோதையில் இருந்த ஆசிரியரை மாணவர்கள், செருப்பை வீசி விரட்டியடித்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சத்தீஸ்கரின் பஸ்தர் மாவட்டத்தில் உள்ள பாலிபட்டா தொடக்கப் பள்ளியின் ஆசிரியர் ஒருவர் தினமும் மது அருந்திவிட்டு பள்ளிக்கு வந்துள்ளார். அவர் குழந்தைகளுக்கு பாடம் நடத்தாமல் தரையில் படுத்துத் தூங்கியுள்ளார். குழந்தைகள் பாடம் சம்பந்தமாக ஏதாவது கேட்டால், அவர்களை அந்த ஆசிரியர் திட்டி வந்துள்ளார். இதனால் கோபமடைந்த குழந்தைகள், போதை ஆசிரியருக்கு தகுந்த பாடம் […]

இலங்கை

முல்லைத்தீவில் குருதி கொடை வழங்கும் நிகழ்வு!

  • March 26, 2024
  • 0 Comments

சர்வதேச நீர் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் குருதி கொடை வழங்கும் நிகழ்வு இன்று (26.03)  இடம்பெற்றுள்ளது. தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை மற்றும் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் முல்லைத்தீவு மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் ” ஈடு இணையற்றது நம் உடலில் ஓடும் குருதி !அதை பிறர்க்கும் சிறிது பகிர்ந்தளிக்க ஏற்போம் இந்தநாளில் உறுதி ! எனும் தொனிப் பொருளில் இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. குறித்த குருதி கொடை வழங்கும் நிகழ்வில் இளைஞர்கள், இளம் குருதி […]

இலங்கை

திருகோணமலை கட்டையாறு பாலம் மக்களிடம் கையளிப்பு

திருகோணமலை வெருகல் பகுதியில் கட்டையாறு பாலம் அமைக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டது. இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் அவர்களின் முயற்சியால் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் வெருகல் பகுதியில் கட்டையாறு பாலம் அமைக்கப்பட்டு இராஜாங்க அமைச்சரினால் திறந்து வைக்கப்பட்டது. 50 மில்லியன் ரூபாய் செலவில் வெருகல் -கட்டையாறுப் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. வெருகல் கட்டையாறு பாலம் அமைக்கப்பட்டதன் மூலம் வெருகல் பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த சுமார் 1500 க்கும் மேற்பட்ட விவசாயிகள் நன்மையடையவுள்ளனர். […]

இலங்கை

தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட உயிரினங்கள் – இளம் வர்த்தக தம்பதியினர் கைது

  • March 26, 2024
  • 0 Comments

தாய்லாந்தில் இருந்து சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பல உயிரினங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் இளம் வர்த்தக தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுமார் நாற்பது இலட்சம் ரூபா பெறுமதியான 88 உயிருள்ள விலங்குகளுடன் இந்த ஜோடி கொழும்பு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளது.குறித்த இருவரும் தாய்லாந்தின் பேங்கொக்கில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-405 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை திங்கட்கிழமை (25) பிற்பகல் 04.35 மணியளவில் வந்தடைந்துள்ளனர். சுங்கத்துறையின் பல்லுயிர் பிரிவு […]

ஐரோப்பா

உக்ரைன் ரயில் பாதையை தகர்க்க முயன்ற இருவர் கைது

ரயில் பாதையை தகர்க்க முயன்றபோது, ரஷ்யாவின் சார்பாகச் செயல்பட்டதாக சந்தேகிக்கப்படும் இருவரை உக்ரைனிய பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்ததாக உக்ரைனின் பாதுகாப்பு சேவை தெரிவித்துள்ளது. Kyiv இன் போர் முயற்சிக்காக கிழக்கே ஆயுதங்களை வழங்கப் பயன்படுத்தப்பட்ட ரயில் பாதை மீதே தாக்குதல் முயற்சி மேற்கொள்ளபப்ட்டுள்ளது. கைய்வ் மற்றும் கார்கிவ் பிராந்தியங்களில் வசிப்பவர்கள் என்று மட்டுமே அடையாளம் காணப்பட்ட சந்தேகநபர்கள் , மத்திய பொல்டாவா பிராந்தியத்தில் ஒரு வெடிமருந்து சாதனத்தை வைத்து, அதை தொலைதூரத்தில் வெடிக்க திட்டமிட்டனர், ரஷ்யாவிடமிருந்து […]

பொழுதுபோக்கு

Breaking: பிரபல நடிகர் லொள்ளு சபா சேசு காலமானார்

  • March 26, 2024
  • 0 Comments

விஜய் டிவியில் ஓளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பிரபலமான, நடிகர் சேசு, மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பிரபலமான சேசு, நடிகர் தனுஷ் ஹீரோவாக அறிமுகமான ‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் வெள்ளித்திரையில் காலடி எடுத்து வைத்தார். இதை தொடர்ந்து பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த இவர், சமீப காலமாக தொடர்ந்து சந்தானத்தின் படங்களில், தன்னுடைய காமெடி மூலம் பல […]

உலகம் கருத்து & பகுப்பாய்வு

30 வயதுக்கு உட்பட்ட செல்வந்தர்களால் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்!

  • March 26, 2024
  • 0 Comments

30 வயதுக்கு உட்பட்ட செல்வந்தர்களால் ஆண்டிற்கு சுமார் 01 மில்லியன் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. HMRC இன் புள்ளிவிவரங்களில் இது சம்பந்தமான தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இதன்படி 830 பிரித்தானிய மக்கள் வருடத்திற்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான தொகையைப் பெறுவதாக அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் 15,000க்கும் அதிகமானவர்கள் £150,000க்கு மேல் சம்பாதிப்பதாக புள்ளி விபரங்கள் குறிப்பிட்டுள்ளன. இளம் மில்லியனர்களின் உயர்வு விளையாட்டு, இசை மற்றும் ஊடக நட்சத்திரங்களுக்கான அதிக ஒப்பந்தங்களால் உந்தப்பட்டதாக தரவுகளைப் பெற்ற […]

உலகம்

கென்யாவில் உணவகம் ஒன்றில் வெடித்த வெடிகுண்டு – பொலிஸ் அதிகாரி உட்பட நால்வர் பலி!

  • March 26, 2024
  • 0 Comments

வடகிழக்கு கென்யாவில் உள்ள மண்டேரா நகரில் உள்ள பொலிஸ் நிலையம் அருகே ஒரு உணவகம் உள்ளது. அந்த உணவகத்தில் நேற்று காலை திடீரென வெடிகுண்டு வெடித்தது. இந்த விபத்தில் ஒரு பொலிஸ் அதிகாரி உட்பட 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 11 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் பற்றி தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் பற்றி வழக்கு […]