வியட்நாமில் பான் மி சாண்ட்விச் சாப்பிட்ட 500க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி
தெற்கு வியட்நாமில் உள்ள ஒரு கடையில் இருந்து பான் மி சாண்ட்விச்களை சாப்பிட்ட 500 க்கும் மேற்பட்டோர் உணவு விஷமாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஆறு முதல் ஏழு வயதுடைய இரண்டு சிறுவர்கள் உட்பட 12 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். டோங் நாய் மாகாணத்தில் இயங்கி வந்த பேக்கரி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. தற்போதைய வெப்பத்தின் விளைவாக சாண்ட்விச்கள் கெட்டுப்போயிருக்கலாம் என நம்பப்படுகிறது. பேக்கரியை முதற்கட்ட ஆய்வு செய்ததில் அது உணவு பாதுகாப்பு தரத்தை பூர்த்தி செய்யவில்லை […]













