ஐரோப்பா செய்தி

வடகடல் எரிவாயு திட்டங்கள் – பிரித்தானியாவின் இறக்குமதி சார்பு குறையாது என ஆய்வில் தகவல்

  • April 4, 2026
  • 0 Comments

வட கடலில் புதிய எரிவாயு களங்களைத் திறந்தாலும், பிரித்தானியாவின் வெளிநாட்டு எரிவாயு சார்பு பெரிதளவில் குறையாது என ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. “ஜாக்டா” எனப்படும் புதிய எரிவாயு களம், நாட்டின் இறக்குமதியை வெறும் 2% மட்டுமே குறைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, “ரோஸ்பேங்க்” களம் சுமார் 1% அளவிலேயே தாக்கம் ஏற்படுத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனால், நோர்வே உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து எரிவாயு இறக்குமதியை பிரித்தானியா தொடர்ந்து சார்ந்தே இருக்க வேண்டிய நிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே […]

உலகம்

கலிபோர்னியாவில் மக்களுக்கு வெளியேற்ற உத்தரவு!

  • April 4, 2026
  • 0 Comments

தெற்கு கலிபோர்னியாவில் ‘ஸ்பிரிங்ஸ் ஃபயர்’ ( Springs Fire) எனப் பெயரிடப்பட்ட, வேகமாகப் பரவும் காட்டுத்தீ ஒன்று பரவி வருகிறது. இந்நிலையில் குறித்த பகுதியில் வசிக்கும் மக்களை உடனடியாக வெளியேறுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். குறித்த தீப் பரவலானது சுமார் 5.47 சதுர மைல்கள் (14.17 சதுர கிலோமீட்டர்கள்) பரப்பளவிற்கு விரிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தீயணைப்புக் குழுவினர் தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், தீப் பரவல் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பலத்த காற்று நிலைமையை […]

செய்தி

பொறுப்பற்ற செய்தி வெளியீடு ஜனநாயக செயல்முறையையே பாதிக்கக்கூடும் – பிரித்தானிய ஆய்வாளர்கள் எச்சரிக்கை

  • April 4, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் ஊடகங்களில் வெளியாகும் தவறான மற்றும் தெளிவற்ற செய்திகளால், வேல்ஸ் வாக்காளர்கள் அரசியல் தகவல்களில் பெரும் குழப்பத்திற்குள்ளாகியுள்ளனர் என புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. கார்டிஃப் பல்கலைக்கழகம் ஆய்வு செய்த 3,000 க்கும் மேற்பட்ட செய்திகளில், இங்கிலாந்துக்கான கொள்கைகள் முழு பிரித்தானியாவுக்கும் பொருந்துவது போன்று சித்தரிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனால், வேல்ஸில் அதிகாரப் பகிர்வு செய்யப்பட்ட விவகாரங்கள் குறித்து மக்கள் தவறான புரிதலுக்கு உள்ளாவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், “அரசாங்கம்” போன்ற பொதுவான சொற்கள் பயன்படுத்தப்பட்டதால், எந்த நிர்வாகம் எந்தக் கொள்கைக்கு […]

இலங்கை செய்தி

கணிதப் பிரிவில் 3 A சித்தி பெற்ற யாழ். இந்து கல்லூரி மாணவன் அகால மரணம்!

  • April 4, 2026
  • 0 Comments

உயர்தரப் பரீட்சையில் கணிதப் பிரிவில் 3A சித்திகளைப் பெற்று சாதனை படைத்த மாணவர் ஒருவர், திடீர் உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ள பெருந்துயர் சம்பவமொன்று யாழில் இடம்பெற்றுள்ளது. இணுவில் பகுதியைச் சேர்ந்த யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவனான லவன் அக்சயன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். யாழ். மாவட்ட மட்டத்தில் 24 ஆவது இடத்தைப் பெற்று அவர் சாதனை படைத்திருந்தார். பல்கலைக்கழகப் பிரவேசத்துக்காகக் காத்திருந்த நிலையில், ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவு காரணமாக அவர் உயிரிழந்துள்ளார்.

செய்தி தமிழ்நாடு

தீய சக்தி திமுக உள்ள காங்கிரஸ் கூட்டணி வேண்டாம்

  • April 4, 2026
  • 0 Comments

தமிழ்நாட்டிலும் திமுக மற்றும் காங்கிரஸ் குழப்ப அணியாக உள்ளது போன்று புதுச்சேரியிலும் குழம்பிப்போன அணியாகவே உள்ளதென என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொண்ட போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், “புதுச்சேரியில் தவெக போட்டியிடுகிறது. நமது கூட்டணி கட்சியான நேயம் மக்கள் கழகம் உருளையன்பேட்டை மற்றும் தட்டாஞ்சாவடி ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகின்றது. மக்களுடன் மக்களாக இருப்பவர்களைத் தான் நமது கட்சியின் வேட்பாளர்களாகத் தேர்வு செய்துள்ளேன். நமது […]

செய்தி தமிழ்நாடு

இந்தி சர்ச்சை – சிபிஎஸ்இ பாடசாலை நடத்தும் உங்கள் மகளிடம் கேளுங்கள் என ஸ்டாலினுக்கு அண்ணாமலை சவால்

  • April 4, 2026
  • 0 Comments

“சிபிஎஸ்இ பாடசாலை நடத்தும் தனது மகளிடம், அவர் தனது பாடசாலையில் தொடக்க நிலை மாணவர்களுக்குத் தமிழைப் பயிற்று மொழியாகக் கற்பிக்கத் தொடங்கியுள்ளாரா என்பதை முதல்வர் ஸ்டாலின் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்” என பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 6 ஆம் வகுப்பு முதல் மும்மொழிகள் கட்டாயமாக்கும் சம்பவம் தொடர்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதே நேரத்தில், தமிழகம் முழுவதும் சிபிஎஸ்இ பாடசாலைகளை நடத்தும் தனது அமைச்சர்கள் மற்றும் […]

ஐரோப்பா செய்தி

பயோமெட்ரிக் சோதனைகளில் தாமதம் – பயணிகளுக்கு தற்காலிக நிம்மதி

  • April 4, 2026
  • 0 Comments

ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய நுழைவு மற்றும் வெளியேறுதல் அமைப்பு (EES) அமுலுக்கு வரவுள்ள நிலையில், பிரித்தானியாவிலிருந்து பிரான்சுக்கு பயணம் செய்பவர்கள் புதிய பயோமெட்ரிக் சோதனைகளை எதிர்கொள்ள மாட்டார்கள் என துறைமுகங்கள் தெரிவித்துள்ளன. ஏப்ரல் 10 ஆம் திகதி முதல் பயோமெட்ரிக் தகவல்கள் கட்டாயமாக சேகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும், பிரான்சில் தேவையான தொழில்நுட்ப வசதிகள் இன்னும் முழுமையாக தயார் செய்யப்படாமையால், ஆங்கிலக் கால்வாயைக் கடக்கும் ரயில், படகு மற்றும் ஷட்டில் பயணங்களில் புதிய சோதனைகள் உடனடியாக அமுல்படுத்தப்படாது என […]

உலகம்

போருக்கு மத்தியில் இராணுவ வரவு செலவு திட்டத்தை அதிகரிக்கும் ட்ரம்ப்!

  • April 4, 2026
  • 0 Comments

ஈரானுடனான போர் தொடர்ந்து இடம்பெற்று வருகின்ற நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், 2027 நிதியாண்டிற்கான பாதுகாப்பு அல்லாத செலவினங்களில் 10 சதவீத குறைப்பையும், இராணுவ வரவுசெலவுத் திட்டத்தில் 500 பில்லியன் டொலர் அளவிலான மிகப்பெரிய அதிகரிப்பையும் கோரியுள்ளார். இந்த கோரிக்கையானது,  ட்ரம்ப் வெளிநாடுகளில் அபாயகரமான தேர்வுகளை எதிர்கொள்ளும் வேளையில் வந்துள்ளது. 2026-ல் சுமார் 1 டிரில்லியன் டாலராக இருந்த பாதுகாப்புச் செலவினங்களை, 1.5 டிரில்லியன் டாலராக உயர்த்துவதற்கான இந்த முன்மொழிவில் இராணுவ வீரர்களுக்கு  5% முதல் […]

உலகம் செய்தி

ஈரானிலுள்ள petrochemical ஆலைகள்மீது தாக்குதல்!

  • April 4, 2026
  • 0 Comments

ஈரானின் தெற்குப் பகுதியிலுள்ள மஹ்ஷார் Mahshahr மற்றும் பந்தர் இமாம் Bandar Imam ஆகிய இரண்டு முக்கிய பெட்ரோகெமிக்கல் ஆலைகள் petrochemical complex மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் என்பனவே இந்த செயலில் ஈடுபட்டுள்ளன என்று ஈரான் தெரிவித்துள்ளது. மேற்படி தாக்குதல்களில் ஐவர் காயமடைந்துள்ளனர். அத்துடன், தாக்குதல் நடத்த பகுதிகளில் இருந்து தொழிலாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர் என ஈரான் தகவல்கள் தெரிவிக்கின்றன. எண்ணெய் மற்றும் எரிவாயு சார்ந்த பொருட்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யும் […]

அரசியல் இலங்கை செய்தி

10 ஆம் திகதி பலப்பரீட்சை! தமிழ்க் கட்சிகளின் நிலைப்பாடு என்ன?

  • April 4, 2026
  • 0 Comments

எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு Kumara Jayakody எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீது எதிர்வரும் 10 ஆம் திகதி வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இதன்போது பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி SJP, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன SLPP, சர்வஜன அதிகாரம் உள்ளிட்ட கட்சிகள் தீர்மானித்துள்ளன. எனினும், வடக்கு, கிழக்கை மையப்படுத்தி இயங்கும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் நிலைப்பாடு இன்னும் அறிவிக்கப்படவில்லை. அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போதே இது தொடர்பில் அக்கட்சிகள் தீர்மானம் எடுக்கவுள்ளன. அதேவேளை நம்பிக்கையில்லா […]