இந்தியா

விஜய் பிரச்சாரத்தில் அனுமதிக்கப்பட்டதை விட அதிகளவானோர் கூடியதாக புதுச்சேரி தவெக நிர்வாகி மீது வழக்கு

  • April 6, 2026
  • 0 Comments

தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தில் அனுமதிக்கப்பட்டதை விட அதிகம் பேர் கூடியதாக அக்கட்சி நிர்வாகி மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கடந்த 3 ஆம் திகதி தவெக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சித் தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார். முன்னதாக விஜய் பிரசாரத்துக்கு 5 ஆயிரம் பேர் மட்டுமே கூட வேண்டும். கர்ப்பிணி பெண்கள், குழந்தைகளுக்கு அனுமதி கிடையாது என்பது உள்பட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தது. இதனிடையே, தவெக நிர்வாகி புதியவன் மீது கோரிமேடு காவல் நிலையத்தில் […]

ஐரோப்பா

வெளிநாட்டில் தங்க இராணுவத்திடம் அனுமதி கோர வேண்டும் – ஜெர்மனியில் புதிய சட்டம்!

  • April 6, 2026
  • 0 Comments

ஜெர்மனியின் இராணுவ சேவை நவீனமயமாக்கல் சட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய   பிரிவின்படி, 17 முதல் 45 வயதுக்குட்பட்ட ஆண்கள் மூன்று மாதங்களுக்கு மேல் வெளிநாட்டில் தங்குவதற்கு முன்பு ஆயுதப் படைகளிடம் அனுமதி பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டம் அடுத்த வருடம் ஜனவரி 1 முதல் அமலுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டாய இராணுவச் சேவை மறுபரிசீலனை செய்யப்படும் பட்சத்தில், ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது பெரும்பாலும் பயன்படுத்தப்படாத பனிப்போர் கால […]

இந்தியா செய்தி

இந்தியாவில் சமையல் எரிவாயு பற்றாக்குறை – டெல்லியை விட்டு வெளியேறும் வெளியேறும் மக்கள்

  • April 6, 2026
  • 0 Comments

ஈரான் – அமெரிக்க, இஸ்​ரேல் போர் காரண​மாக இந்​தி​யா​வுக்கு கச்சா எண்​ணெய் கப்​பல்​கள் வரு​வ​தில் சிக்​கல் ஏற்​பட்​டுள்​ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநி​யோகத்​தி​லும் பிரச்​சினை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வெளி​மாநிலங்​களில் இருந்து டெல்​லிக்கு வந்து குடியேறி​யுள்ள பலருக்கு சிலிண்​டர்​கள் கிடைக்காமையால் அதிக விலை கொடுத்​தும் வாங்க முடியாத நிலை​யில் பலர் சொந்த கிராமங்​களுக்கு செல்கின்றனர். பழைய டெல்லி ரயில் நிலை​யத்​தில் சான்​ஜுக்டா என்ற பெண் தனது குடும்​பத்​தா​ருடன் டெல்​லியை விட்டு தனது சொந்த கிராமத்​துக்​குச் செல்​வ​தாகத் […]

இலங்கை செய்தி

“டிஜிட்டல் மயமாக்கல்” – ஜனாதிபதி விடுத்துள்ள அழைப்பு!

  • April 6, 2026
  • 0 Comments

“டிஜிட்டல் மயமாக்கல் என்பது அரசாங்கத்தின் பிரதான வேலைத்திட்டமாகும்.” – என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் ஜனாதிபதி கூறியவை வருமாறு, “பரிமாற்றங்களுடன் மிக நெருக்கமான ஒரு கலாசாரம் எமது சமூகத்தில் நிலவினாலும், அந்தப் பிணைப்பை பழைய காகிதப் புத்தகத்திலிருந்து புதிய டிஜிட்டல் முறைமைக்கு மாற்ற நாம் இன்னும் தவறியுள்ளோம். எனவே, மக்களுக்கு மிகவும் எளிதான […]

ஐரோப்பா

ஸ்பெயின் பிரதமருக்கு மக்கள் மத்தியில் பெருகும் ஆதரவு!

  • April 6, 2026
  • 0 Comments

ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலியப் போருக்கு பிரதமர் பெட்ரோ சான்செஸ் (Pedro Sanchez) காட்டிய கடுமையான எதிர்ப்பின் மத்தியில், ஸ்பெயினின் ஆளும் சோசலிஸ்ட் கட்சி பொதுமக்கள் மத்தியில் பலத்த வரவேற்ப்பை பெற்றுள்ளது. அதே நேரத்தில், இந்தத் தாக்குதலை ஆதரிக்கும் தீவிர வலதுசாரிக் கட்சியான வோக்ஸ், சரிவைச் சந்தித்துள்ளது என்று திங்களன்று வெளியிடப்பட்ட இரண்டு ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளன. இந்தப் போரைக் கடுமையாக விமர்சிக்கும் மிகவும் வெளிப்படையான மேற்கத்தியத் தலைவர்களில் ஒருவராக சான்செஸ் உருவெடுத்துள்ளார். அவர், இந்தத் தாக்குதல்களில் ஈடுபடும் அமெரிக்க […]

இலங்கை செய்தி

தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டம் ஆரம்பம்!

  • April 6, 2026
  • 0 Comments

தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டம், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் இன்று (06) உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டது. இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தில் ஒரு புதிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில், நாணயங்கள் மற்றும் நாணயத் தாள்களின் பயன்பாடு குறைந்த (cash-lite) பொருளாதாரத்தை நோக்கி நாட்டை வழிநடத்தும் நோக்கத்துடன் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அதற்கமைய, இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில், 5,000 ரூபாய் வரையிலான அனைத்து LankaQR பரிமாற்றங்களுக்கும் வர்த்தகர்களிடம் வசூலிக்கப்படும் சேவைக்கட்டணம் (Merchant Discount Rate – MDR) முழுமையாக […]

ஐரோப்பா

ஹங்கேரி பொதுத் தேர்தல் – ஆளும் கட்சிக்கு பின்னடைவு!

  • April 6, 2026
  • 0 Comments

ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடான ஹங்கேரி, ஏப்ரல் 12 அன்று பொதுத் தேர்தலை நடத்தவுள்ளது. 2010-ல் தேசியவாதப் பிரதமர் விக்டர் ஓர்பன் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு நடைபெறும் முதல் தேர்தல் இதுவாகும். சுயேச்சையான கருத்துக் கணிப்பாளர்களின் ஆய்வுகள், எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் மாக்யாரின் (Peter Magyar’) பழமைவாத TISZA கட்சி மாபெரும் வெற்றியை நோக்கிச் செல்லக்கூடும் என்று தெரிவிக்கின்றன. அதேநேரம் பிரதமர் விக்டர் ஓர்பன் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்புகள் குறைவாக காணப்படுவதாக கூறப்படுகிறது. இருப்பினும், […]

உலகம் செய்தி

ஈரான் உளவு பிரிவு தலைவரின் கதையை முடித்துவிட்டோம்: வேட்டை தொடரும் என்கிறது இஸ்ரேல்!

  • April 6, 2026
  • 0 Comments

ஈரானிய புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் உளவுத்துறைத் தலைவர் Majid Khademi இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார் என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இன்று (06) அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் ஈரானியத் தலைவர்கள் தொடர்ந்தும் வேட்டையாடப்படுவார்கள் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார். அதேவேளை, தமது உளவுப் பிரிவு தலைவர் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார் என்பதை ஈரானும் ஏற்றுக்கொண்டுள்ளது. ஈரானின் கடற்படைத் தளபதி, விமானப்படைத் தளபதி உட்பட முக்கிய தளபதிகள் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க கூட்டு தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர் என்பது […]

உலகம் செய்தி

பாகிஸ்தானால் முன்மொழியப்பட்ட போர் நிறுத்த யோசனையை நிராகரித்தது ஈரான்!

  • April 6, 2026
  • 0 Comments

மேற்காசியாவில் நிலவும் போர் பதற்றத்தைத் தணிக்க பாகிஸ்தான் முன்மொழிந்த தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்க ஈரான் மறுத்துள்ளது என சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் உறுதிப்பாட்டில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை எனக் கூறியே ஈரான் நிராகரித்துள்ளது எனக் கூறப்படுகின்றது. நிலையான அமைதித் திட்டத்துக்கு வாஷிங்டன் தயாராக இல்லை என்றும், அந்நாட்டால் தங்களுக்கு காலக்கெடு விதிப்பதை ஏற்க முடியாது என்றும் ஈரான் அதிகாரிகள் திட்டவட்டமாகக் கூறியுள்ளனர். எனினும், போர் நிறுத்தத்துக்காக முன்மொழியப்பட்டுள்ள புதிய திட்டம் தொடர்பில் பாகிஸ்தான் […]

உலகம் செய்தி

வான்வழி தாக்குதலில் ஈரான் உளவுப்பிரிவு தலைவர் பலி!

  • April 6, 2026
  • 0 Comments

இஸ்ரேல், அமெரிக்காவின் கூட்டு தாக்குதலில் ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் (IRGC) உளவுத்துறைத் தலைவர் கொல்லப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. Seyyed Majid Khademi என்ற அந்த உயர் அதிகாரி, IRGC இன் முக்கிய உளவுப் பிரிவுகளுக்கு தலைமை தாங்கி வந்தவர் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தொடர்பில் ஈரான் தரப்பில் இருந்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. எனினும், சில ஈரான் ஊடகங்கள் மேற்படி தகவலை உறுதிப்படுத்தியுள்ளன.