இலங்கை செய்தி

முல்லைத்தீவில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய பிரபல உணவகத்திற்கு சீல்

  • April 25, 2026
  • 0 Comments

முல்லைத்தீவு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட முள்ளியவளை பகுதியில், பொது சுகாதார பரிசோதகர்களின் நடவடிக்கையில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய பிரபல உணவகம் ஒன்று சீல் வைக்கப்பட்டது. மாஞ்சோலை வைத்தியசாலைக்கு முன்பாக அமைந்துள்ள இந்த உணவகம் சுகாதார விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, பொது சுகாதார பரிசோதகரால் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு விசாரணைக்கு உணவக நிர்வாகம் சார்பில் எவரும் முன்னிலையாகாத காரணத்தால், உணவகத்தை சீல் செய்வதற்கான அனுமதியை நீதிமன்றம் வழங்கியது. இதனையடுத்து […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் தீயில் கருகி இரு குழந்தைகள் பலி!

  • April 25, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் வோல்வர்ஹாம்டனில் (Wolverhampton) உள்ள குடியிருப்பொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 02 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த அவசர சேவைப் பிரிவினர், அந்த வீட்டிலிருந்து 02 குழந்தைகளை மீட்டனர்.  இருப்பினும் குழந்தைகள் இருவரும்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டு குழந்தைகளும் பெண் ஒருவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. காவல்துறையினர் குறித்த  வீட்டைச் சுற்றி வளைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

உலகம் செய்தி

பாகிஸ்தானிலிருந்து புறப்பட்டார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

  • April 25, 2026
  • 0 Comments

ஈரான் வெளிவிவகார அமைச்சர் Abbas Araghchi இஸ்லாமாபாத்தில் உயர்மட்ட சந்திப்புகளை நடத்திய பின்னர் அங்கிருந்து புறப்பட்டுள்ளார். அடுத்ததாக ஓமான் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு அவர் பயணம் விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என ஈரான் அரச ஊடகம் தெரிவித்துள்ளது. தனது பாகிஸ்தான் பயணத்தின்போது பாகிஸ்தான் பிரதமர் மற்றும் இராணுவத் தளபதி ஆகியோருடன் ஈரான் வெளிவிவகார அமைச்சர் பேச்சு நடத்தி இருந்தார். ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையில் அமைதியை ஏற்படுத்துவதற்குரிய மத்தியஸ்த முயற்சியை பாகிஸ்தான் முன்னெடுத்துவருகின்றது. இந்நிலையில் ஈரான் வெளிவிவகார அமைச்சரின் […]

இலங்கை

இந்த ஆண்டு முழுவதும் எரிபொருள் விலை ஏறுமுகத்திலேயே பயணிக்கும்!

  • April 25, 2026
  • 0 Comments

2026-ஆம் ஆண்டில் இலங்கையின் எரிபொருள் இறக்குமதிச் செலவினம் கணிசமாக அதிகரிக்கக்கூடும் என்று இலங்கை மத்திய வங்கி கணித்துள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் புவிசார் அரசியல் நெருக்கடி மற்றும் உலகளாவிய எண்ணெய் சந்தையின் நிலையற்ற தன்மை காரணமாக, வரும் காலத்தில் எண்ணெய் விலைகள் உயர்வாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையின் மொத்த இறக்குமதிச் செலவினத்தில் எரிபொருள் இறக்குமதிச் செலவினம் ஒரு பெரும் பகுதியாக உள்ளது என்றும், கடந்த 10 ஆண்டுகளில் இது மொத்த இறக்குமதியில் சராசரியாக கிட்டத்தட்ட […]

ஐரோப்பா

உளவு நடவடிக்கையில் AI தொழில்நுட்பம் – நூற்றுக்கணக்கான அதிகாரிகள் பணிநீக்கம்!

  • April 25, 2026
  • 0 Comments

ஸ்கொட்லாந்தில் முறைகேடுகள், ஊழல் மற்றும் குற்றச்செயல்களைக் கண்டறிய செயற்கை நுண்ணறிவு உளவுத் திட்டம் பயன்படுத்தப்பட்டதை தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான காவல்துறையினர் பணிநீக்கம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானிய அரசாங்கம் குற்றவாளிகளை கண்டறிவதற்காக இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை இரகசியமாக பயன்படுத்தியது. இதில் பாலியல் நோக்கங்களுக்காக அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துதல், உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான காவல்துறையினர் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்கள் பல ஆண்டுகளாக மெட் அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்தி வந்தது, கூடுதல் நேரப் பணிக்காகப் பொய்யான […]

செய்தி

நாட்டு மக்களிடம் ஈரான் ஜனாதிபதி விடுத்துள்ள அவசர கோரிக்கை!

  • April 25, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளால் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு மத்தியில், மின்சாரப் பயன்பாட்டைக் குறைக்குமாறு ஈரான் ஜனாதிபதி Masoud Pezeshkian அந்நாட்டு மக்களுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார். வெளிநாட்டு அழுத்தங்களால் நாட்டின் கட்டமைப்புகள் பாதிக்கப்படுவதால், மக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டும் மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது அவசியம் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். ஈரானை எல்லா வழிகளிலும் முடக்கி அதிருப்தியை உண்டாக்குவதை நோக்கமாகக் கொண்டே எதிரி நாடுகள் செயல்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். அமெரிக்கா மட்டும் அல்ல மேலும் பல நாடுகள் ஈரான்மீது பொருளாதாரத் தடைகளை […]

இலங்கை செய்தி

நேற்று தடம் புரண்ட ‘சாகரிகா’ ரயில் தற்போது மீண்டும் தடம் புரண்டது

  • April 25, 2026
  • 0 Comments

‘சாகரிகா’ ரயில் நேற்று (24) தடம் புரண்டிருந்த நிலையில் சீர்செய்யப்பட்டு கொழும்பு நோக்கித் திரும்பிக்கொண்டிருந்த போது, கொம்பனித்தெரு ரயில் நிலையத்திற்கு அருகில் மீண்டும் தடம் புரண்டுள்ளது. இன்று மாலை 06.20 அளவில் இந்தத் தடம் புரள்வு ஏற்பட்டுள்ளதுடன், இதன் காரணமாக கடற்கரை மார்க்கமான ரயில் பாதையின் ஒரு வழித்தடம் மீண்டும் தடைப்பட்டுள்ளது. இதற்கமைய, கொழும்பு கோட்டை மற்றும் வெள்ளவத்தைக்கு இடையில் தற்போது ஒரு வழித்தடத்தில் மாத்திரம் ரயில் போக்குவரத்து முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. நேற்று காலை தடம் புரண்டிருந்த […]

உலகம் செய்தி

தெற்கு லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: நால்வர் பலி!

  • April 25, 2026
  • 0 Comments

தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. லொறி மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதலிலேயே இவர்கள் பலியாகியுள்ளனர். இவ்வாறு கொல்லப்பட்டவர்கள் ஆயுதங்களுடன் சென்ற ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் என்று இஸ்ரேல் பாதுகாப்புப் படை விளக்கம் அளித்துள்ளது. தமது படை மற்றும் பொதுமக்களுக்கு ஏற்படவிருந்த அச்சுறுத்தலைத் தடுக்கவே தாக்குதல் நடத்தப்பட்டது எனவும் இஸ்ரேல் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இலங்கை

வானிலை மாற்றம் : பல பகுதிகளில் வெப்பநிலை உயர்வு!

  • April 25, 2026
  • 0 Comments

நாட்டின் பல பகுதிகளில் நிலவும் வெப்பமான வானிலை குறித்து வானிலை ஆய்வுத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று (25) பிற்பகல் 03.30 மணிக்கு விடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கை, நாளை (26) முதல் அமலுக்கு வரும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மேற்கு, சபரகமுவ, தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் மற்றும் மொனராகல மாவட்டத்தின் சில பகுதிகளில், வெப்பக் குறியீடு  பகல் நேரத்தில் “கணிசமான” அளவு அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த எச்சரிக்கையை கவனத்தில் கொண்டு […]

இலங்கை செய்தி

கட்டணங்கள் திருத்தியமைக்கப்பட்ட போதிலும் மின்சார சபைக்கு ரூ. 38.7 பில்லியன் நட்டம்

  • April 25, 2026
  • 0 Comments

மின்சாரக் கட்டணங்கள் திருத்தியமைக்கப்பட்ட போதிலும், கடந்த 2025ஆம் ஆண்டில் இலங்கை மின்சார சபை நட்டமடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள 2025ஆம் ஆண்டிற்கான வருடாந்த பொருளாதார ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த 2025ஆம் ஆண்டு இறுதியில் மின்சார சபையின் மொத்த நட்டம் 38.7 பில்லியன் ரூபாவாகப் பதிவாகியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டில் பலமுறை மின்சாரக் கட்டணங்கள் குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலும் கட்டணங்கள் மேலும் 20 சதவீதத்தால் குறைக்கப்பட்டன. இக்கட்டணக் […]