நாட்டு மக்களிடம் ஈரான் ஜனாதிபதி விடுத்துள்ள அவசர கோரிக்கை!
அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளால் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு மத்தியில், மின்சாரப் பயன்பாட்டைக் குறைக்குமாறு ஈரான் ஜனாதிபதி Masoud Pezeshkian அந்நாட்டு மக்களுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.
வெளிநாட்டு அழுத்தங்களால் நாட்டின் கட்டமைப்புகள் பாதிக்கப்படுவதால், மக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டும் மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது அவசியம் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஈரானை எல்லா வழிகளிலும் முடக்கி அதிருப்தியை உண்டாக்குவதை நோக்கமாகக் கொண்டே எதிரி நாடுகள் செயல்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அமெரிக்கா மட்டும் அல்ல மேலும் பல நாடுகள் ஈரான்மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




