உலகம் செய்தி

பாகிஸ்தானிலிருந்து புறப்பட்டார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஈரான் வெளிவிவகார அமைச்சர் Abbas Araghchi இஸ்லாமாபாத்தில் உயர்மட்ட சந்திப்புகளை நடத்திய பின்னர் அங்கிருந்து புறப்பட்டுள்ளார்.

அடுத்ததாக ஓமான் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு அவர் பயணம் விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என ஈரான் அரச ஊடகம் தெரிவித்துள்ளது.

தனது பாகிஸ்தான் பயணத்தின்போது பாகிஸ்தான் பிரதமர் மற்றும் இராணுவத் தளபதி ஆகியோருடன் ஈரான் வெளிவிவகார அமைச்சர் பேச்சு நடத்தி இருந்தார்.

ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையில் அமைதியை ஏற்படுத்துவதற்குரிய மத்தியஸ்த முயற்சியை பாகிஸ்தான் முன்னெடுத்துவருகின்றது.

இந்நிலையில் ஈரான் வெளிவிவகார அமைச்சரின் பாகிஸ்தான் விஜயம் முக்கியத்துவம் மிக்கதாகக் கருதப்பட்டது.

எனினும், அவர் அமெரிக்க தரப்புடன் நேரடி பேச்சுக்கு வரவில்லை. மாறாக பாகிஸ்தானுடனான இரு தரப்பு சந்திப்புக்கே வந்திருந்தார் என இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

 

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!