2300ம் ஆண்டுக்குள் மில்லியன் கணக்கான பிரித்தானியர்களின் வீடுகள் நீரில் மூழ்கக்கூடும் – விஞ்ஞானிகள் எச்சரிக்கை
கடல் மட்டம் உயர்வால் 2300ம் ஆண்டுக்குள் 17 லட்சம் பிரித்தானிய மக்களின் வீடுகள் நீரில் மூழ்கக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக எதிர்காலத்தில் ஐக்கிய இராச்சியத்தின் சில பகுதிகள் மனிதர்கள் வாழத் தகுதியற்றதாகிவிடும் என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். வானிலை ஆய்வு மையம் மற்றும் பிரிஸ்டல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், எதிர்காலத்தில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் கடலோர வெள்ளப்பெருக்கினால் எத்தனை பேர் பாதிக்கப்படுவார்கள் என்பதைக் கணினி மாதிரிகளைப் பயன்படுத்தி ஆராய்ந்தனர். இந்த ஆய்வின் முடிவுகளின்படி, 2300ம் ஆண்டின் இறுதிக்குள் […]













