கடல் மட்டம் உயர்வால் 2300ம் ஆண்டுக்குள் 17 லட்சம் பிரித்தானிய மக்களின் வீடுகள் நீரில் மூழ்கக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஐரோப்பா செய்தி

2300ம் ஆண்டுக்குள் மில்லியன் கணக்கான பிரித்தானியர்களின் வீடுகள் நீரில் மூழ்கக்கூடும் – விஞ்ஞானிகள் எச்சரிக்கை

  • July 23, 2026
  • 0 Comments

கடல் மட்டம் உயர்வால் 2300ம் ஆண்டுக்குள் 17 லட்சம் பிரித்தானிய மக்களின் வீடுகள் நீரில் மூழ்கக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக எதிர்காலத்தில் ஐக்கிய இராச்சியத்தின் சில பகுதிகள் மனிதர்கள் வாழத் தகுதியற்றதாகிவிடும் என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். வானிலை ஆய்வு மையம் மற்றும் பிரிஸ்டல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், எதிர்காலத்தில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் கடலோர வெள்ளப்பெருக்கினால் எத்தனை பேர் பாதிக்கப்படுவார்கள் என்பதைக் கணினி மாதிரிகளைப் பயன்படுத்தி ஆராய்ந்தனர். இந்த ஆய்வின் முடிவுகளின்படி, 2300ம் ஆண்டின் இறுதிக்குள் […]

ஈரானில் இருந்து எஞ்சியுள்ள தனது தூதரகப் பணியாளர்களை “தற்காலிகமாக” திரும்பப் பெறுவதாக பிரிட்டிஷ் வெளியுறவு அலுவலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஐரோப்பா செய்தி

ஈரானில் இருந்து பிரித்தானிய தூதர்கள் வெளியேற்றம்

  • July 23, 2026
  • 0 Comments

ஈரானில் இருந்து எஞ்சியுள்ள தனது தூதரகப் பணியாளர்களை “தற்காலிகமாக” திரும்பப் பெறுவதாக பிரிட்டிஷ் வெளியுறவு அலுவலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பிராந்தியத்தில் அதிகரித்துள்ள பதற்றம் மற்றும் வேகமாக மோசமடைந்து வரும் பாதுகாப்புச் சூழலுக்கு மத்தியில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இஸ்லாமியக் குடியரசிற்குள் உள்ள இலக்குகள் மீது அமெரிக்கா தொடர்ந்து பன்னிரண்டாவது இரவாக நடத்தும் தீவிர வான்வழித் தாக்குதல்களை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தெஹ்ரானில் உள்ள பிரிட்டிஷ் தூதரகம் தனது நேரடிச் செயல்பாடுகளை திறம்பட நிறுத்திவிட்டதாக அமைச்சகம் தனது […]

2023 முதல் 2025 வரை இந்தியா முழுவதும் உள்ள விமான நிலையங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்களுக்கு 1,500-க்கும் மேற்பட்ட போலி வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்களை (E-mails) அனுப்பிய மென்பொருள் பொறியியலாளரை , தமிழ்நாடு பயங்கரவாத தடுப்புப் படை (ATS) சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்துள்ளது. இந்தியா செய்தி

1,500 போலி வெடிகுண்டு மிரட்டல்: ‘அமெரிக்க மென்பொருள் பொறியியலாளர் ‘சென்னை விமான நிலையத்தில் கைது

  • July 23, 2026
  • 0 Comments

2023 முதல் 2025 வரை இந்தியா முழுவதும் உள்ள விமான நிலையங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்களுக்கு 1,500-க்கும் மேற்பட்ட போலி வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்களை (E-mails) அனுப்பிய மென்பொருள் பொறியியலாளரை , தமிழ்நாடு பயங்கரவாத தடுப்புப் படை (ATS) சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்டவர் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த சரத் சுப்பிரமணியன் சங்கர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள ஒரு […]

உலகம்

கூட்டாட்சி முகவர்களுக்கு எதிராக இரு அமெரிக்க பெண்கள் வழக்கு தொடுப்பு

  • July 23, 2026
  • 0 Comments

வட கரோலினாவின் சார்லட் நகரில் குடிவரவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, டட்யானா ரெய்சினி (Tatyana Reisini)  மற்றும் கிறிஸ்டன் ரூஸ் (Kristen Roos) ஆகியோர் கூட்டாட்சி அரசாங்கத்தின் மீது 2.5 மில்லியன் டாலர் இழப்பீடு கோரி வழக்குத் தொடுத்துள்ளனர். குறித்த கைது நடவடிக்கை கடந்த 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17 ஆம் திகதி இடம்பெற்றது. கூட்டாட்சி அதிகாரிகளின் இருப்பை மற்றவர்களுக்கு உணர்த்துவதற்காக, அவர்கள் இருவரும் தங்கள் காரின் ஹாரனை ஒலித்து, விசில் ஊதியுள்ளனர். […]

வினாத்தாள் கசிவு விவகாரத்தில் ஈடுபடுபவர்களுக்கு விரைவாகத் தண்டனை வழங்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார். இளைஞர்களின் எதிர்காலத்திற்குத் தீங்கு விளைவிக்கும் எவரும் தப்பிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்தியா செய்தி

பிரதமர் மோடியையும் குறிவைக்கிறது கரப்பான்பூச்சி கட்சி

  • July 23, 2026
  • 0 Comments

வினாத்தாள் கசிவு விவகாரத்தில் ஈடுபடுபவர்களுக்கு விரைவாகத் தண்டனை வழங்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார். இளைஞர்களின் எதிர்காலத்திற்குத் தீங்கு விளைவிக்கும் எவரும் தப்பிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும், பிரதமரின் இந்த அறிவிப்பை ஏற்க மறுத்துள்ள சிஜேபி அமைப்பு, பிரதமர் நரேந்திர மோடி உடனடியாகப் பதவி விலக வேண்டும் எனத் தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளது. மேலும், “சர்வாதிகார அரசாங்கம் வெளியேறுவது தவிர்க்க முடியாதது; கேள்விகளுக்கு இனி இடமில்லை” […]

‘1983 கருப்பு ஜூலை’ கலவர சம்பவத்தின் 43ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, இன்று (23.07.2026) நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இலங்கை செய்தி

43 ஆவது ‘கருப்பு ஜூலை’ நினைவேந்தல்: தமிழ் எம்.பிக்கள் அஞ்சலி

  • July 23, 2026
  • 0 Comments

‘1983 கருப்பு ஜூலை’ கலவர சம்பவத்தின் 43ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, இன்று (23.07.2026) நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவர் உள்ளிட்ட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்துகொண்டு, 1983ஆண்டு கலவரத்தில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களுக்கு மனவேதனையுடன் அஞ்சலி செலுத்தினர். 1983ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் திகதி ஆரம்பமான அந்த கொடூர இனக்கலவரம் இடம்பெற்று இன்றுடன் 43 ஆண்டுகள் கடந்துவிட்டன. கடந்த நான்கு தசாப்தங்களுக்கும் […]

கொங்கோ ஜனநாயகக் குடியரசில் (DRC) மிக வேக பரவி வரும் எபோலா (Ebola) வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,031 ஆக உயர்ந்துள்ளது. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

கொங்கோவில் அதிவேகமாகப் பரவும் எபோலா: பலி எண்ணிக்கை 1,000-ஐக் கடந்து தீவிர ஆபத்து

  • July 23, 2026
  • 0 Comments

கொங்கோ ஜனநாயகக் குடியரசில் (DRC) மிக வேக பரவி வரும் எபோலா (Ebola) வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,031 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை வரலாற்றில் பதிவான எபோலா பரவல்களிலேயே இதுவே மிக வேகமாகப் பரவும் நோய்த்தொற்றாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. கானாவில் நடைபெற்ற சுகாதார மாநாடு ஒன்றில் உரையாற்றிய ஆப்பிரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் (Africa CDC) இயக்குநர் ஜெனரல் ஜீன் கசேயா (Jean Kaseya), மே மாதம் ‘புண்டிக்புக்யோ’ (Bundibugyo) வகை எபோலா வைரஸ் […]

ஐரோப்பா

குழந்தைகளுக்கான சமூக ஊடகத் தடை : தளங்களுக்கு பிரான்ஸ் பிறப்பித்துள்ள உத்தரவு

  • July 23, 2026
  • 0 Comments

15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான சமூக ஊடகப் பயன்பாட்டிற்கு முழுமையான தடை விதித்த முதல் ஐரோப்பிய ஒன்றிய நாடாக பிரான்ஸ் திகழ்கிறது. இதன்படி, ஜனவரி 2027 முதல் வயது சரிபார்ப்பை அமல்படுத்துமாறு சமூக ஊடக தளங்களிடம் கோரப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 16 வயதுக்குட்பட்டவர்களுக்காக ஆஸ்திரேலியா விதித்த வரலாற்றுச் சிறப்புமிக்க தடையைத் தொடர்ந்து இந்தச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இது ஒரு உலகளாவிய முன்னுதாரணத்தை ஏற்படுத்தியதுடன், தற்போது ஏராளமான நாடுகள் இந்த சட்டத்தை அமுல்படுத்த முயற்சித்து வருகின்றன. இந்தத் தடைகள், அடிமையாக்கும் […]

ஜப்பான் பிரதமராகப் பொறுப்பேற்றது முதல் தான் மிகக் குறைந்த நேரமே தூங்குவதாகப் பிரதமர் சனே தகைச்சி (Sanae Takaichi) வெளியிட்ட தகவல், அந்நாட்டு மக்களிடையே பெரும் கவலையையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. உலகம் செய்தி

இரவில் 3 மணிநேரம் மட்டுமே தூக்கம்: ஜப்பான் ஜப்பான் பிரதமரின் பதிவால் சர்ச்சை

  • July 23, 2026
  • 0 Comments

ஜப்பான் பிரதமராகப் பொறுப்பேற்றது முதல் தான் மிகக் குறைந்த நேரமே தூங்குவதாகப் பிரதமர் சனே தகைச்சி (Sanae Takaichi) வெளியிட்ட தகவல், அந்நாட்டு மக்களிடையே பெரும் கவலையையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பொது விடுமுறை வார இறுதியில் தனது நேரத்தை எப்படிச் செலவிட்டார் என்பது குறித்து எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்ட பிரதமர், “நீண்ட நாட்களுக்குப் பிறகு முதன்முறையாகத் தொடர்ந்து 5 மணி நேரம் முழுமையாகத் தூங்கினேன்” என்று எழுதியிருந்தார். வழக்கமாகத் தாம் ஒரு இரவில் 3 மணி […]

"பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. விரைவில் அச்சட்டம் நீக்கப்படும். அதேபோல, பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுத் தடுப்பில் வைக்கப்பட்டுள்ள நபர்கள் (தமிழ் அரசியல் கைதிகள்) பிணை கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தை நாட முடியும்" என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். அரசியல் இலங்கை செய்தி

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு பிரதான தமிழ்க் கட்சிகள் எதிர்ப்பு

  • July 23, 2026
  • 0 Comments

நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதமும் வாக்கெடுப்பும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (24) நடைபெறவுள்ளன. சபாநாயகர் தலைமையில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழுவுக் கூட்டத்திலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, வெள்ளிக்கிழமை முற்பகல் 11.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை விவாதம் நடத்தப்படவுள்ளது. அதன்பின்னர் வாக்கெடுப்பு நடத்தப்படும். நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற கலவரச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டே நீதி அமைச்சருக்கு எதிராக எதிர்கட்சிகளால் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை […]