கூட்டாட்சி முகவர்களுக்கு எதிராக இரு அமெரிக்க பெண்கள் வழக்கு தொடுப்பு
வட கரோலினாவின் சார்லட் நகரில் குடிவரவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, டட்யானா ரெய்சினி (Tatyana Reisini) மற்றும் கிறிஸ்டன் ரூஸ் (Kristen Roos) ஆகியோர் கூட்டாட்சி அரசாங்கத்தின் மீது 2.5 மில்லியன் டாலர் இழப்பீடு கோரி வழக்குத் தொடுத்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை கடந்த 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17 ஆம் திகதி இடம்பெற்றது.
கூட்டாட்சி அதிகாரிகளின் இருப்பை மற்றவர்களுக்கு உணர்த்துவதற்காக, அவர்கள் இருவரும் தங்கள் காரின் ஹாரனை ஒலித்து, விசில் ஊதியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து கூட்டாட்சி அதிகாரிகள் அந்தப் பெண்களைப் பின்தொடர்ந்து, அவர்களின் காரை வழிமறித்து, கார் கண்ணாடியை உடைத்து பின்னர் கைது செய்துள்ளனர்.
ரெய்சினியும் ரூஸும் கைக்கயிறுகளால் கட்டப்பட்டு, நான்கு மணி நேரம் FBI கட்டிடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கூட்டாட்சி அதிகாரிகளைத் தாக்கியதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது, இருப்பினும் இந்தக் குற்றச்சாட்டுகள் பின்னர் மார்ச் மாதம் கைவிடப்பட்டன.
இதனையடுத்து தவறான சிறைவாசம், தவறான கைது, தாக்குதல் மற்றும் காயம் ஏற்படுத்துதல், வேண்டுமென்றே மன உளைச்சலை ஏற்படுத்துதல், தீய நோக்கத்துடன் வழக்குத் தொடுத்தல், அலட்சியம், மற்றும் அவர்களின் முதல் மற்றும் நான்காவது திருத்த உரிமைகளை மீறியது போன்ற குற்றச்சாட்டுகளின் இழப்பீடு கோரி வழக்கு தொடங்கப்பட்டுள்ளது.




