ஐரோப்பா செய்தி

எதிர்ப்பு வெளியிட்ட தொழிற் கட்சி எம்.பி. கேத்தரின் பிரதமரின் உரைக்கு பின்னர் ஆதரவு

  • May 11, 2026
  • 0 Comments

பிரதமர் Starmer ஆற்றிய முக்கிய உரைக்கு பின்னர், தொழிற் கட்சி எம்.பி. கேத்தரின் அட்கின்சன் (Catherine Atkinson) அவருக்கு ஆதரவு வழங்கியுள்ளார். “மக்கள் எதிர்கொள்ளும் சவால்களின் தீவிரத்தை பிரதமர் புரிந்துகொண்டிருப்பது அவரது உரையில் தெளிவாக தெரிந்தது” என அவர் கூறியுள்ளார் உள்ளாட்சித் தேர்தல்களில் வாக்காளர்கள் தெரிவித்த அதிருப்தியை ஸ்டார்மர் கவனமாகக் கேட்டுள்ளதாகவும், அதற்கு பதிலளிக்கும் வகையில் அவர் “ஒரு புதிய நம்பிக்கையை” வழங்கியுள்ளதாகவும் அட்கின்சன் தெரிவித்தார். மேலும், வலிமையான மற்றும் நியாயமான பிரித்தானியாவை உருவாக்கும் பிரதமரின் முயற்சிக்கு […]

உலகம் செய்தி வாழ்வியல்

பக்கவாதத்தை குணப்படுத்த புதியவகை மருந்து கண்டுப்பிடிப்பு!

  • May 11, 2026
  • 0 Comments

பக்கவாதம் ஏற்பட்ட உடனேயே மூளை செல்களைப் பாதுகாக்க, உலகின் முதல் மூக்கு வழி தெளிப்பானை ஹாங்காங் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இது அவசரகால மீட்பு கருவியாக செயற்படும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பக்கவாதம் என்பது இறப்பு மற்றும் இயலாமைக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும். இதனால் ஆண்டுதோறும் 890 பில்லியன் டொலர் செலவாகுகிறது. பக்கவாதத்திற்கான தற்போதைய சிகிச்சையானது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே தொடங்குகிறது. இரத்த உறைவை உடைக்கும் மருந்துகள் மற்றும் மூளைக்குச் செல்லும் தமனிகள் வழியாக இரத்த ஓட்டத்தை மீட்டெடுப்பதற்காக […]

உலகம் செய்தி

ஈரான் வலையமைப்பை முடக்க நடவடிக்கை: நபர்கள், நிறுவனங்கள்மீது தடை!

  • May 11, 2026
  • 0 Comments

பிரிட்டனுக்கு எதிராகத் தீங்கு விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதாகக் கருதப்படும் ஈரான் தொடர்புடைய 12 நபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது கடுமையான தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்தத் தடைகளின் கீழ் சம்பந்தப்பட்டவர்களின் சொத்துக்கள் முடக்கப்படுவதோடு, அவர்கள் பிரிட்டனுக்குள் நுழைவதற்கும் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தடைசெய்யப்பட்ட அமைப்புகளுக்கு நிதி உதவி வழங்கியதாகவும், பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையில் சதித்திட்டங்கள் தீட்டியதாகவும் இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பிரிட்டன் மற்றும் அதன் நட்பு நாடுகளின் நிலையான தன்மையைச் சீர்குலைக்க முயன்றதை எதிர்த்து இந்த […]

உலகம் செய்தி

பிரதமரின் உரையில் அடிப்படை தீர்வுகள் பற்றிய விளக்கம் போதாது – UNISON தலைவர் குற்றச்சாட்டு

  • May 11, 2026
  • 0 Comments

பிரதமர் Starmer இன்று ஆற்றிய உரையை பிரித்தானியாவின் மிகப்பெரிய தொழிற்சங்கமான யூனிசன் (UNISON) அமைப்பின் பொதுச் செயலாளர் ஆண்ட்ரியா ஈகன் (Andrea Egan) விமர்சித்துள்ளார். நிலைமையைச் சரிசெய்வதற்கான அடிப்படையான தீர்வுகள் குறித்து மிகவும் குறைவாகவே பேசப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார். மாற்றத்தின் வேகம் போதுமானதாக இல்லை என்பதை ஸ்டார்மர் ஒப்புக்கொண்டது சரியானது என கூறிய அவர் மக்கள் எதிர்பார்க்கும் பெரிய மாற்றத்தின் அவசியத்தை அவர் முழுமையாகப் புரிந்துகொண்டார் என்பதை அவரது உரை காட்டவில்லை” என்றும் தெரிவித்துள்ளார். மேலும், […]

ஐரோப்பா செய்தி

ஸ்டார்மரினால் மூன்று முக்கிய கொள்கை வாக்குறுதிகள் அறிவிப்பு

  • May 11, 2026
  • 0 Comments

பிரதமர் Starmer ஆற்றிய உரை, தொழிலாளர் கட்சிக்குள் எழுந்த தலைமைச் சவாலை தடுக்கக் கூடிய ஒரு முக்கிய தருணமாகப் பார்க்கப்படுகிறது. அவர் “தவறுகள் இடம்பெற்றுள்ளதை ஒப்புக்கொண்டதுடன், தன்னை சந்தேகிப்பவர்களை தவறென நிரூபிப்பதாகவும் உறுதியளித்தார். மேலும் அவர் தனது உரையில் மூன்று முக்கிய கொள்கை வாக்குறுதிகளை முன்வைத்தார். முதலாவதாக, ஐரோப்பிய ஒன்றியத்துடன் உறவுகளை வலுப்படுத்தி, பிரித்தானியாவை “ஐரோப்பாவின் மையத்தில்” வைத்திருக்க அரசாங்கம் முயற்சி செய்யும் என கூறினார். அடுத்த ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டில் “பிரித்தானியாவுக்கான புதிய திசை” அமைக்கப்படும் […]

உலகம்

ஜப்பான் ரயில் பெட்டியில் தெளிக்கப்பட்ட மர்மப்பொருள் – பயணிகளுக்கு நேர்ந்த துயரம்!

  • May 11, 2026
  • 0 Comments

ஜப்பானில் ரயிலில் பயணித்த 10 பேர் திடீரென நோய்வாய்ப்பட்ட சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. குறித்த ரயிலில் அடையாளம் தெரியாத ஒரு பொருள் தெளிக்கப்பட்டதாகவும், இதனைத் தொடர்ந்தே பயணிகள் நோய்வாய்ப்பட்டதாகவும் கூறப்படுகிறது. பயணிகள் விசித்திரமான வாசனை மற்றும் தொண்டை எரிச்சல், மூச்சுத் திணறல் போன்றவற்றை எதிர்கொண்டதாக முறைப்பாடு அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து குறித்த ரயில்   கவாசாகி நிலையத்தில் அவசரமாக நிறுத்தப்பட்டதுடன், பாதிக்கப்பட்ட பயணிகள் வெளியேற்றப்பட்டு நோயாளர் காவு வண்டி மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். தீயணைப்பு வீரர்கள் மற்றும் […]

இலங்கை செய்தி

யாழ். தையிட்டி வீதி விவகாரம்: மே 21 ஆம் திகதி தீர்ப்பு!

  • May 11, 2026
  • 0 Comments

யாழ். தையிட்டியில் சர்ச்சைக்குரிய விகாரை அமைந்துள்ள காணிக்குள் கையகப்படுத்தப்பட்டுள்ள பிரதேச சபைக்குச் சொந்தமான வீதியை மீட்பது தொடர்பான வழக்கின் தீர்ப்பு, எதிர்வரும் 21 ஆம் திகதி வழங்கப்படும் என்று மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் அறிவித்துள்ளது. வலி. வடக்கு பிரதேச சபைக்கு சொந்தமான “பவானி” வீதி, தற்போது விகாரை அமைந்துள்ள பகுதிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளது. இந்த வீதியை மீட்கும் நோக்குடன் கடந்த மாதம் 28 ஆம் திகதி அளவீடு செய்யப்பட்டது. வீதியை மறித்து அமைக்கப்பட்டுள்ள வேலியை அகற்ற விகாராதிபதிக்கு பிரதேச […]

செய்தி

மாகாணசபைத் தேர்தலை உடன் நடத்துமாறு தமிழரசுக் கட்சி வலியுறுத்து!

  • May 11, 2026
  • 0 Comments

“நாட்டில் நீண்டகாலமாக முடக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை இனியும் தாமதிக்காமல் உடனடியாக நடத்த அரசு முன்வர வேண்டும்.” – என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வலியுறுத்தினார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். மக்கள் பிரதிநிதிகள் இன்றி மாகாண சபைகளின் அதிகாரம் அதிகாரிகளின் பிடியில் இருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், இது மக்களின் ஜனநாயக உரிமையை மறுக்கும் செயல் மாத்திரமன்றி, […]

உலகம் செய்தி

ஹோர்முஸ் இடையூறு தொடர்ந்தால் வாரந்தோறும் 10 கோடி பீப்பாய் எண்ணெய் இழப்பு ஏற்படும் என எச்சரிக்கை

  • May 11, 2026
  • 0 Comments

ஹோர்முஸ் நீரிணையில் இடையூறுகள் தொடர்ந்தால் உலக எண்ணெய் சந்தையில் கடுமையான பாதிப்பு ஏற்படும் என சவூதி அரேபியாவின் Saudi Aramco தலைமை நிர்வாக அதிகாரி அமின் நாசர் தெரிவித்துள்ளார். நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்து குறைந்ததால், ஒவ்வொரு வாரமும் சுமார் 10 கோடி பீப்பாய் எண்ணெய் சந்தையிலிருந்து இழக்கப்படும் நிலை உருவாகும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த நிலை மேலும் சில வாரங்கள் நீடித்தால், அடுத்த ஆண்டுவரை எண்ணெய் விநியோகம் இயல்பு நிலைக்கு திரும்பாது என்றும் அவர் […]

உலகம்

மெக்சிகோ எல்லையில் 06 சடலங்கள் மீட்பு!

  • May 11, 2026
  • 0 Comments

டெக்சாஸின் லாரெடோவில் (Laredo) ரயில் பெட்டியொன்றில் இருந்து 06 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மெக்சிகோ எல்லைக்கு அருகிலுள்ள ஒரு தொலைதூர ரயில் யார்டில் பணியாற்றிய ஊழியர் ஒருவர் இந்த உடல்களை  கண்டறிந்தார். இதனையடுத்து காவல்துறைக்கு தகவல் வழங்கப்பட்டதுடன், காவல்துறையினரும் தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்தில் இருந்து சடலங்களை கைப்பற்றி விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இறந்தவர்களின் பூர்வீகம் வெளியிடப்படவில்லை. அதேநேரம் அமெரிக்க-மெக்சிகோ எல்லைக்கு அருகில் இதேபோன்ற சூழ்நிலைகளில் புலம்பெயர்ந்தோர் பலர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.