இலங்கை

டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 63 ஆக உயர்வு

2026 ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் 52 ஆயிரத்து 68 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டில் டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை 88 ஆயிரத்தை கடந்துள்ளதுடன், 63 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, நாட்டின் டெங்கு இறப்பு விகிதம் 0.07% ஆக உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் மாதத்தில் இதுவரை 2,739 நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன. அதேநேரம் ஜுலை மாதம் மட்டும் 29,975 டெங்கு நோய்த்தொற்றுகள் பதிவாகின.

கம்பஹா மாவட்டம் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட மாவட்டமாக அடையாளம் காணப்பட்டுள்ளது, அங்கு 18,739 டெங்கு நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன.

கொழும்பு மாவட்டம் இரண்டாவது அதிகபட்ச நோய்த்தொற்று எண்ணிக்கையைப் பதிவு செய்துள்ளது, அங்கு 17,490 நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன.

டெங்கு பரவுவதைக் கட்டுப்படுத்த, கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களை அகற்றுதல் மற்றும் சுற்றுப்புறங்களைத் தூய்மையாகப் பராமரித்தல் உள்ளிட்ட உடனடித் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார அதிகாரிகள் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர்.

 

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்