அரசியல் இலங்கை செய்தி

பிரபாகரனின் கதை முடிந்த மாதத்தில் மஹிந்த இலக்கு வைக்கப்படுவது ஏன்?

  • May 12, 2026
  • 0 Comments

“மஹிந்த ராஜபக்ச திறைசேரியில் கொள்ளை அடிக்கவில்லை. மாறாக மக்கள் மனங்களையே கொள்ளையடித்துள்ளார்.” – என்று மஹிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்தார். சர்ச்சைக்குரிய எயர்பஸ் கொடுக்கல், வாங்கல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு இன்று (12) வாக்குமூலத்தை பதிவு செய்தது. சுமார் இண்டரை மணிநேர விசாரணையின் பின்னர் மஹிந்த ராஜபக்ச அங்கிருந்து வெளியேறினார். மஹிந்தவுக்கு ஆதரவு தெரிவித்து மொட்டு கட்சியினர் திரண்டிருந்தனர். இதன்போதே மனோஜ் கமகே […]

உலகம் செய்தி

கடற்படை முற்றுகை – 65 வர்த்தகக் கப்பல்கள் திருப்பி விடப்பட்டதாக அமெரிக்கா தகவல்

  • May 12, 2026
  • 0 Comments

ஈரானிய துறைமுகங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தனது கடற்படை முற்றுகை நடவடிக்கைகளில் இதுவரை 65 வர்த்தகக் கப்பல்கள் வேறு பாதைகளுக்கு திருப்பி விடப்பட்டுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு தெரிவித்துள்ளது. மேலும், இந்த நடவடிக்கைகளின் போது நான்கு கப்பல்கள் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்தப் பிரிவு கூறியுள்ளது. இதனிடையே, ஈரான் அதிகாரிகள் ஹோர்முஸ் நீர்வழிப்பாதை தங்களது கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படை  அனுமதி இல்லாமல் எந்தக் கப்பல்களும் அந்த வழியாக செல்ல அனுமதிக்கப்படவில்லை என்றும் வலியுறுத்தி வருகின்றனர். […]

உலகம் செய்தி

ஈரான் மீதான போருக்கு அமெரிக்காவுக்கு 29 பில்லியன் டொலர் செலவு

  • May 12, 2026
  • 0 Comments

ஈரான் தொடர்பான அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளுக்காக இதுவரை சுமார் 29 பில்லியன் அமெரிக்க டொலர் செலவாகியுள்ளதாக பென்டகன் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அமெரிக்க பாதுகாப்புத்துறையின் கணக்கியல் பொறுப்புகளை மேற்கொண்டு வரும் ஜூல்ஸ் ஹர்ஸ்ட், இந்தத் தகவலை  அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வெளியிட்டார். இந்த மொத்தச் செலவில் இராணுவ உபகரணங்களை பழுதுபார்த்தல், சேதமடைந்த சாதனங்களை மாற்றுதல் மற்றும் பல்வேறு  செயல்பாட்டு செலவுகள் அடங்குவதாக அவர் விளக்கமளித்தார். மேலும், கடந்த மாத இறுதியில் வெளியிடப்பட்ட மதிப்பீட்டை விட இந்தச் செலவு […]

உலகம் செய்தி

அமெரிக்கா – ஈரான் உறவை காப்பாற்ற முயலும் பாகிஸ்தான்

  • May 12, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்து ஏற்படுத்தியதாகக் கூறப்படும் பலவீனமான  போர் நிறுத்தம் தற்போது ஆபத்தான நிலையை நோக்கி நகர்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே, சாத்தியமான அமெரிக்கத் தாக்குதல்களிலிருந்து ஈரானிய இராணுவ விமானங்களுக்கு பாகிஸ்தான்  பாதுகாப்பு வழங்கியதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை இஸ்லாமாபாத் நிராகரித்துள்ளது. ஒரு மாத கால போர் நிறுத்தம் தற்போது “மிகப்பெரிய உயிர்வழி ஆதரவில்” மட்டுமே நீடித்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், ஈரான் அண்மையில் முன்வைத்த […]

இலங்கை செய்தி

பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து இலங்கை, பாகிஸ்தான் ஆராய்வு!

  • May 12, 2026
  • 0 Comments

இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவர் மேஜர் ஜெனரல் நய்யார் நசீர், பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது இலங்கையில் அவருடைய பதவிக்காலம் வெற்றிகரமாக அமைய பாதுகாப்பு பிரதி அமைச்சர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். அத்துடன், இரு தரப்பினரும் பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து கருத்துகளைப் பரிமாறிக் கொண்டதுடன், பாதுகாப்பு ஒத்துழைப்பு, பயிற்சி வாய்ப்புகள் மற்றும் பிராந்திய பாதுகாப்பு கூட்டிணைப்பு […]

இலங்கை செய்தி

ஜனாதிபதி அநுரவுக்கு தமிழக முதல்வர் விஜய் நன்றி

  • May 12, 2026
  • 0 Comments

தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி. ஜோசப் விஜய்க்கு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது உத்தியோகபூர்வ வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார் இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தமிழ் நாட்டின் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், இலங்கை ஜனாதிபதி கௌரவ அநுர குமார திசாநாயக்க அவர்களின் வாழ்த்துகளால் நான் பெருமையடைகிறேன். உங்களின் கனிவான வாழ்த்துகளுக்கு நன்றிகள்” என கூறியுள்ளார். இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையிலான […]

உலகம் செய்தி

ஹோர்முஸ் நீரிணை தேசிய இறையாண்மையின் ஒரு பகுதி என ஈரான் வலியுறுத்தல்

  • May 12, 2026
  • 0 Comments

ஈரான், ஹோர்முஸ் நீரிணையை தனது தேசிய இறையாண்மையின் ஒரு பகுதியாகவே கருதுவதாக மீண்டும் வலியுறுத்தியுள்ளது. தெஹ்ரானில் இருந்து தகவல் வெளியிட்ட ஊடகவியலாளர் ஒருவர், அமெரிக்கா விதித்த முற்றுகை மற்றும் தொடரும் பிராந்தியப் போர் சூழ்நிலை காரணமாக, ஹோர்முஸ் நீரிணையில் “புதிய சமன்பாடு” உருவாகியுள்ளது என ஈரானிய அதிகாரிகள் தெரிவிப்பதாக கூறினார். அந்த முக்கிய கடல் வழித்தடத்தின் மீது தனது கட்டுப்பாட்டை உறுதிப்படுத்தும் நோக்கில் ஈரான் செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், ஹோர்முஸ் நீரிணை சர்வதேச வர்த்தகக் […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானிய பிரதமருக்கு பகிரங்கமாக ஆதரவு வழங்கிய பாதுகாப்பு அமைச்சர் 

  • May 12, 2026
  • 0 Comments

பிரித்தானிய பிரதமர் ஸ்டார்மருக்கு பகிரங்கமாக ஆதரவு வழங்கிய சமீபத்திய அமைச்சரவை உறுப்பினர்களில் பாதுகாப்பு அமைச்சர் ஜோன் ஹீலி (John Healey) இணைந்துள்ளார். உலகளாவிய மோதல்கள் மற்றும் எதிர்கால நெருக்கடிகள் குறித்து மக்கள் கவலை அடைந்துள்ளதாக அவர் தனது X தளத்தில் குறிப்பிட்டுள்ளார். நாட்டை பாதுகாப்பாக வழிநடத்த அரசாங்கம் செயல்படும் என்று மக்கள் எதிர்பார்ப்பதாக கூறிய பாதுகாப்பு அமைச்சர் ஜோன் ஹீலி (John Healey) பிரதமர் அதற்கான நடவடிக்கைகளையே முன்னெடுத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், தற்போதைய சூழலில் […]

இலங்கை செய்தி

வவுனியாவில் “முள்ளிவாய்க்கால் கஞ்சி”! நீதிக்காக ஒலித்த குரல்!

  • May 12, 2026
  • 0 Comments

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு, இறுதிப் போரின் வலிகளைச் சுமந்த ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’ வழங்கும் நிகழ்வு இன்று வவுனியா நகரில் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது. வவுனியா, இலுப்பையடிப் பகுதியில் ஒன்றுகூடிய வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், பொதுமக்களுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சியைப் வழங்கி நினைவேந்தலை ஆரம்பித்தனர். யுத்தத்தின் இறுதி நாள்களில் குண்டு மழைகளுக்கு மத்தியிலும், உணவின்றித் தவித்த பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களுக்கு இந்தக் கஞ்சி எவ்வாறு ஒரு உயிர் காக்கும் மருந்தாக அமைந்தது என்பதைப் பிரதிபலிக்கும் வகையில் இந்நிகழ்வு அமைந்திருந்தது. […]

இலங்கை செய்தி

‘முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஊர்திப் பவனி’ உணர்வெழுச்சியுடன் ஆரம்பம்

  • May 12, 2026
  • 0 Comments

இறுதிப் போரில் முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிரிழந்த பல்லாயிரக்கணக்கான உறவுகளின் நினைவுகளைச் சுமந்த ‘முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஊர்திப் பவனி’ இன்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் இருந்து உணர்வெழுச்சியுடன் ஆரம்பமானது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படும் இந்தப் பவனி, இன்று காலை யாழ். நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் சுடரேற்றப்பட்டு உத்தியோகபூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இருந்து ஆரம்பமான இந்த ஊர்திப் பவனியானது, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் தமிழர் தாயகப் பகுதிகள் எங்கும் பயணிக்கவுள்ளது. […]