உலகம் செய்தி

கடற்படை முற்றுகை – 65 வர்த்தகக் கப்பல்கள் திருப்பி விடப்பட்டதாக அமெரிக்கா தகவல்

ஈரானிய துறைமுகங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தனது கடற்படை முற்றுகை நடவடிக்கைகளில் இதுவரை

65 வர்த்தகக் கப்பல்கள் வேறு பாதைகளுக்கு திருப்பி விடப்பட்டுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், இந்த நடவடிக்கைகளின் போது நான்கு கப்பல்கள் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்தப் பிரிவு கூறியுள்ளது.

இதனிடையே, ஈரான் அதிகாரிகள் ஹோர்முஸ் நீர்வழிப்பாதை தங்களது கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படை  அனுமதி இல்லாமல் எந்தக் கப்பல்களும் அந்த வழியாக செல்ல அனுமதிக்கப்படவில்லை என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

கடந்த வாரம், அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவின் செய்தித் தொடர்பாளர் டிம் ஹாக்கின்ஸ், அல் ஜசீராவுக்கு அளித்த பேட்டியில், ஹோர்முஸ் நீர்வழிப்பாதையில் வர்த்தகக் கப்பல்களுக்கு பாதுகாப்பான வழித்தடங்களை உறுதி செய்வதும், ஈரானின் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எதிர்கொள்வதும் முக்கிய முன்னுரிமையாக இருப்பதாக தெரிவித்தார்.

இதனால் உலகின் மிக முக்கியமான எண்ணெய் மற்றும் வர்த்தக கடல் வழித்தடங்களில் ஒன்றான ஹோர்முஸ் பகுதியில் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!