தென் அமெரிக்கா

பிரேசிலின் சாவ் பாலோ மாநிலத்தின் தொழிலாளர் குடியிருப்பு மீது துப்பாக்கிச்சூடு – இருவர் பலி!

  • January 12, 2025
  • 0 Comments

பிரேசிலின் சாவ் பாலோ மாநிலத்தில் தொழிலாளர் குடியிருப்பு மீதான தாக்குதலில் இரண்டு ஆண்கள் இறந்தது குறித்து பிரேசிலிய போலீசார் விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சாவ் பாலோவிலிருந்து வடகிழக்கே 90 மைல் (145 கிலோமீட்டர்) தொலைவில் உள்ள ட்ரெம்பே நகரில் உள்ள ஒரு குடியேற்றத்தில் இனந்தெரியாத குழுவொன்று துப்பாக்கிச்சூடு நடத்தியதாக எம்எஸ்டி எனப்படும் பிரேசிலின் நிலமற்ற தொழிலாளர் இயக்கம் தெரிவித்துள்ளது. இதில் க்ளீசன் பார்போசா டி கார்வால்ஹோ, 28, மற்றும் வால்டிர் டோ நாசிமென்டோ, 52, […]

ஐரோப்பா

ஜெர்மனியில் A11 நெடுஞ்சாலையில் விபத்து : இருவர் பலி, பலர் படுகாயம்!

  • January 12, 2025
  • 0 Comments

ஜெர்மனியில் உள்ள ஒரு நெடுஞ்சாலையில் நடந்த பேருந்து விபத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர், மேலும் நான்கு பேர் படுகாயமடைந்தனர் என்று போலீசார் தெரிவித்தனர். பெர்லினுக்கு வடகிழக்கே உள்ள பிரென்ஸ்லாவ் அருகே A11 நெடுஞ்சாலையிலிருந்து வெளியேறும் இடத்தில் இந்த விபத்து நடந்ததாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். விபத்தில் 29 வயது பெண் மற்றும் 48 வயதுடைய ஆண் என இருவர் பலியாகியுள்ளனர். விபத்துக்கான காரணம் அறியப்படவில்லை. பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.

பொழுதுபோக்கு

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய அருண் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

  • January 12, 2025
  • 0 Comments

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி முடிவடைய இன்னும் இரண்டு நாட்கள் தான் இருக்கிறது. இந்த நிலையில் நேற்று பிக் பாஸ் வீட்டில் இருந்து அருண் பிரசாத் வெளியேறி இருக்கிறார். பைனல் லிஸ்டில் வந்துவிடுவார் என்று பெரிய அளவில் இவர் மீது எதிர்பார்ப்பு இருந்தது. இவருடைய காதலியும் முன்னால் டைட்டில் வின்னருமான அர்ச்சனா இவருக்கு வெளியில் இருந்து கொண்டே பிரமோஷன் வேலைகளும் சிறப்பாக செய்தார். இந்த நிலையில் தான் எதிர்பாராத விதமாக இப்படி ஒரு எலிமினேஷன் நடைபெற்று […]

ஆசியா

வடகொரிய ராணுவ வீரர்கள் இருவரை பிடித்துள்ள உக்ரேன்; உறுதி செய்துள்ள சியோல் தேசிய புலானய்வு சேவை

  • January 12, 2025
  • 0 Comments

வடகொரியாவைச் சேர்ந்த காயமடைந்த இரண்டு ராணுவ வீரர்களை இந்த வாரம் ர‌ஷ்யாவில் பிடித்துள்ளதாக உக்ரேன் கூறும் கருத்தை தென்கொரியாவின் தேசிய புலவாய்வுச் சேவை உறுதிசெய்துள்ளது. ர‌ஷ்யப் படைகளை வலுவாக்க, வடகொரியா 10,000க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை அங்கு அனுப்பியுள்ளதாக உக்ரேன், அமெரிக்கா, தென்கொரியா ஆகியவை குறைகூறியுள்ளன. “உக்ரேனிய ராணுவம் வடகொரிய வீரர்கள் இருவரை ர‌ஷ்யாவின் ‘குர்ஸ்க்’ போர்க்களத்தில் ஜனவரி 9ஆம் திகதி பிடித்துள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளது,” என்று சியோலின் தேசிய புலனாய்வுச் சேவை அறிக்கை ஒன்றில் கூறியது. உக்ரேனிய […]

ஐரோப்பா

ஜெர்மனியில் இருந்து 18000 பேர் நாடு கடத்தல் – அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

  • January 12, 2025
  • 0 Comments

ஜெர்மனியில் இருந்து 18000 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. கடந்த ஆண்டு ஜெர்மனியில் இருந்து 18000 பேர் தங்களது சொந்த நாடுகளுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாக ஜெர்மனிக்கு பொறுப்பான அலுவலகம் தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் பொழுது நாடு கடத்தலானது 21 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதம் வரை மொத்தமாக 15155 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. 2016 ஆம் ஆண்டு ஜெர்மனி நாட்டை விட்டு நாடு […]

உலகம்

உலகின் மிக அழகான பல்கலைக்கழகம் தொடர்பில் வெளியான தகவல்

  • January 12, 2025
  • 0 Comments

உலகின் மிக அழகான 50 பல்கலைக்கழகங்களில் 20 பல்கலைக்கழகங்களை Time out பத்திரிகை வெளியிட்டுள்ளது. இந்த தரவரிசை #ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி Instagram மற்றும் TikTok இல் வெளியிடப்பட்ட புகைப்படத் தரவை அடிப்படையாகக் கொண்டது. இந்தத் தரவு டைம் அவுட் பத்திரிகையால் வழங்கப்பட்டுள்ளது, மேலும் கடந்த 12 மாதங்களில் சமூக ஊடகங்களில் பதிவு செய்யப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த தரவரிசை தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதன்படி, சமூகத்தில் மிகவும் அழகான மற்றும் அதிகம் பேசப்படும் பல்கலைக்கழகமாக கலிபோர்னியா பல்கலைக்கழகம் முதலிடத்தைப் […]

வட அமெரிக்கா

Facebook, Instagram நடைமுறையில் மாற்றம் – கடும் கோபத்தில் ஜோ பைடன்

  • January 12, 2025
  • 0 Comments

Facebook, Instagram செயலிகளில் தகவல்களைச் சரிபார்க்கும் அம்சம் கைவிடப்பட்டது குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். அந்த நடவடிக்கை மிக அவமானத்துக்குரியது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். Meta நிறுவனம் அந்த முடிவை ஏனைய நாடுகளுக்கும் விரிவுபடுத்தினால் உலகளவில் கடுமையான பாதிப்புகள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக இருக்கும் டிரம்ப்பைச் சமாதானப்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட முடிவாக அது பரவலாகக் காணப்படுகிறது. சமூக ஊடகத் தளங்களில் தகவல்களைச் சரிபார்க்கும் போக்கு, பேச்சு சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவதற்குச் […]

ஆஸ்திரேலியா செய்தி

ஆஸ்திரேலியா முழுவதும் Deepfake குற்றங்களில் பாரிய அதிகரிப்பு

  • January 12, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியா முழுவதும் AI தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்தும் Deepfake குற்றச் செயல்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், சிட்னியின் தென்மேற்கில் உள்ள ஒரு பாடசாலை மாணவர் ஒருவர், AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பாடசாலை மாணவிகளின் புகைப்படங்களை சிதைத்து ஆபாசப் படங்களை உருவாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்ட மாணவர் பாடசாலையில் 12 ஆம் வகுப்பு படித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், அந்த புகைப்படங்களைப் பயன்படுத்தி போலி சமூக ஊடகக் கணக்குகளையும் அவர் உருவாக்கியுள்ளார். இந்த சம்பவம் குறித்து […]

ஐரோப்பா

கடவுச்சீட்டில் எழுதிய பெண்ணுக்கு நேர்ந்த கதி – லண்டனுக்கு திருப்பி அனுப்பிய அதிகாரிகள்

  • January 12, 2025
  • 0 Comments

போலந்துக் குடிநுழைவு அதிகாரிகள், கடவுச்சீட்டில் எழுதிய பயணிக்கு நாட்டிற்குள் நுழைய அனுமதி மறுத்ததாக செய்தி வெளியாகியுள்ளது அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் புதன்கிழமை விமானம் வழி லண்டனிலிருந்து போலந்திற்குச் சென்றார். அவரது கடவுச்சீட்டின் குடிநுழைவு முத்திரைகளுக்குக் கீழே விமான நிலையப் பெயர்களும் இடங்களின் பெயர்களும் எழுதப்பட்டிருந்ததால் அதிகாரிகள் அவரைத் தடுத்தனர். கடவுச்சீட்டில் எழுதக்கூடாது என்பது தமக்குத் தெரியாது என அவர் அதிகாரிகளிடம் கூறியுள்ளார். நாட்டிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதால் அவர் விமான நிலையத்திலேயே இருக்க நேர்ந்தது. நேற்று […]

இலங்கை

இலங்கையில் சில பகுதிகளுக்கு இடியுடன் கூடிய மழை

  • January 12, 2025
  • 0 Comments

இலங்கையில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அந்தவகையில், வடமேல் மாகாணத்திலும் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலும் காலை வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். மேலும், கிழக்கு, ஊவா, மத்திய மாகாணங்களிலும், பொலன்னறுவை மாவட்டத்திலும் சில இடங்களில் 50 மில்லிமீற்றர் வரையில் மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய […]