ரோஹிங்கியா அகதிகள் கடத்தல் : பின்னணியில் இலங்கையர்?
இலங்கைக்கு மேலும் ஒரு இலட்சம் ரோஹிங்கியர்கள் அகதிகளாக வரக்கூடும் என்ற உளவுத்துறை தகவல்களை தொடர்ந்து இந்த மனித கடத்தல் மோசடிக்குப் பின்னால் இலங்கையர் யாராவது ஈடுபட்டுள்ளாரா என்பதை அறிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இது குறித்து பொலிஸார் விசாரணைகளைத் தொடங்கியுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இந்த மனித கடத்தலில் இலங்கையர் ஒருவரும் ஈடுபட்டுள்ளார் என நம்பப்படுகிறது. அதைக் கண்டறிய இப்போது விசாரணை நடந்து வருவதாக அவர் குறிப்பிட்டார். பிராந்தியத்தின் பிற இடங்களில் உள்ள ரோகிங்கியா […]













