உலகம்

கிழக்கு காங்கோவில் நடந்த குண்டுவெடிப்புகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்வு

  • March 1, 2025
  • 0 Comments

காங்கோ ஜனநாயகக் குடியரசின் கிழக்குப் பகுதியில் உள்ள புகாவுவில் நடந்த இரண்டு குண்டுவெடிப்புகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளதாக அரசாங்க செய்தித் தொடர்பாளர் பேட்ரிக் முயாயா வெள்ளிக்கிழமை பிற்பகுதியில் தெரிவித்தார். M23 கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவான அரசியல் பேரணிக்குப் பிறகு புகாவுவின் மையப்பகுதியில் வியாழக்கிழமை குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. அரசாங்கமும் M23 யும் குண்டுவெடிப்புகளைச் செய்ததாக ஒருவரையொருவர் குற்றம் சாட்டின. தெற்கு கிவு மற்றும் வடக்கு கிவுவின் மாகாண தலைநகரங்களான புகாவு மற்றும் கோமா உட்பட கிழக்கு டிஆர்சியில் […]

இலங்கை

இலங்கை – நாடாடுளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யும் அர்ச்சுனா : பதிவால் எழுந்த சர்ச்சை!

  • March 1, 2025
  • 0 Comments

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை கௌசல்யாவிற்கு விட்டுக்கொடுக்கும் வகையிலான ஒரு பதிவை இட்டுள்ளார். தனது முகப்புத்தகத்தில் கருத்து பதிவிட்டுள்ள அவர், என் தலைவனின் பாதையில் என் இன மக்களின் விடுதலைக்காக எம்.பி பதவி கௌசல்யாவிற்கு! இப்போது நிராயுதபாணி” என பதிவிட்டுள்ளார். இந்த பதிவின்படி பார்கும்போது அவர் தனது நாடாளுமன்ற பதவியை இராஜினாமா செய்யக்கூடும் என்ற ஊகங்கள் எழுகின்றன.

வட அமெரிக்கா

தற்செயலாக வாடிக்கையாளர் கணக்கில் $378-க்கு பதிலாக $109 டிரில்லியனை வைப்பிலிட்ட சிட்டிகுரூப்

  • March 1, 2025
  • 0 Comments

சிட்டி குழுமம் சென்ற ஆண்டு (2024) ஏப்ரலில் வாடிக்கையாளர் ஒருவரின் கணக்கில் தவறுதலாகப் பெருந்தொகையை நிரப்பியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளருக்கு 280 அமெரிக்க டொலர் (S$378) நிரப்புவதற்குப் பதிலாக 81 டிரில்லியன் அமெரிக்க டொலர் (S$109 டிரில்லியன்) பணம் போடப்பட்டதாக ‘ஃபைனான்ஷியல் டைம்ஸ்’ தகவல் வெளியிட்டுள்ளது. ஊழியர்கள் இருவர் அந்தப் பிழையைக் கண்டுபிடிக்கத் தவறிவிட்டதாகவும் மூன்றாமவர் 90 நிமிடங்கள் கழித்து அதைக் கண்டுபிடித்ததாகவும் கூறப்பட்டது. வங்கியின் கையிருப்பு முழுவதுமாகத் தீர்ந்துபோனதாகவும் நல்லவேளையாக இழப்பு ஏதுமின்றிப் பணம் மீட்கப்பட்டதாகவும் இதுகுறித்து […]

பொழுதுபோக்கு

மோசடி வழக்கில் தமன்னா மற்றும் காஜல் அகர்வாலின் பெயர்கள்

  • March 1, 2025
  • 0 Comments

கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால், அதிக லாபத்தை கொடுப்பதாக கூறி, புதுச்சேரியை சேர்ந்த 10 பேரிடம் ரூ. 60 கோடியே 60 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக லாஸ்பேட்டையை சேர்ந்த முன்னாள் அரசு ஊழியர் அசோகன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வீசாரணையை நடத்தி வருகிறார்கள். இதில், கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட கிரிப்டோ கரன்சி நிறுவனம் தான் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த கிரிப்டோ கரன்சி நிறுவனத்தின் நிகழ்ச்சிகளில் நடிகைகள் தமன்னா மற்றும் காஜல் […]

இலங்கை

இலங்கை – பொய் சொல்லும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் : சலுகையை நீக்க நாமல் கோரிக்கை!

  • March 1, 2025
  • 0 Comments

பாராளுமன்ற உறுப்பினர்களின் அனுமதி மற்றும் காப்பீட்டை நீக்குவது போல, பாராளுமன்றத்தில் பொய் சொல்லும் எம்.பி.க்களின் சலுகைகளையும் நீக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ முன்மொழிந்தார். பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் உள்ளவர்களைப் பற்றி பல்வேறு பொய்களைச் சொல்வதாகவும், பாராளுமன்ற சலுகைகளுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு எம்.பி.க்கள் ஏன் பொய்களைச் சொல்லி மக்களை தவறாக வழிநடத்துகிறார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். பாராளுமன்ற சலுகைகளுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு பொய்களைச் சொல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சிறப்புரிமைகள் குழுவுக்கு அதிக […]

ஐரோப்பா

டிரம்புடன் கடும் வாக்குவாதம் – ஜெலன்ஸ்கிக்கு ஆதரவு வழங்கும் ஐரோப்பிய நாடுகள்

  • March 1, 2025
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால் டிரம்புடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறியுள்ளார். இந்த நிலையில் ஜெலன்ஸ்கிக்கு, ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். நீங்கள் தனியாக இல்லை என்று போலந்து பிரதமரும், உக்ரேனியர்களை விட அமைதியை யாரும் விரும்பவில்லை என்று ஜெர்மன் சான்ஸ்லர் ஓலாஃப் ஸ்கால்சும் தெரிவித்துள்ளனர். உக்ரேனிய மக்கள் தொடர்ந்து தாக்கப்படுவதாக பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரானும், உங்கள் கண்ணியம் உக்ரேனிய மக்களின் தைரியத்தை மதிக்கிறது என்று ஐரோப்பிய ஒன்றிய அர்சுலா […]

இலங்கை

இலங்கையில் எரிபொருளுக்கு தட்டுப்பாடா? பிரதி அமைச்சர் விளக்கம்

  • March 1, 2025
  • 0 Comments

இலங்கையில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை என பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்தார். எரிபொருள் கொள்வனவு கட்டளை செய்வதில்லை என எரிபொருள் விநியோகத்தர்கள் சங்கம் நேற்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் தெரிவித்தது. இதன் காரணமாக நாடளாவிய ரீதியில் நேற்று இரவு முதல் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகள் காணப்பட்டன. இந்நிலையில் நாடாளுமன்றம் இன்று கூடிய போது எதிர்க்கட்சியினர் நாட்டில் மீண்டும் எரிபொருள் வரிசை யுகம் மலர்வதாகக் குற்றஞ்சாட்டியிருந்தனர். இதற்குப் பதிலளிக்கும் போதே பொருளாதார அபிவிருத்தி […]

செய்தி

மறு அறிவித்தல் வரை மூடப்படும் யால தேசிய பூங்கா

  • March 1, 2025
  • 0 Comments

யால தேசிய பூங்கா பார்வையாளர்களுக்காக மூடப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இன்று முதல் மறு அறிவித்தல் வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக இந்த தீர்மான எடுக்கப்பட்டுள்ளதாக யால தேசிய பூங்காவின் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பா

ரஷ்ய-அமெரிக்க நல்லிணக்கத்தைக் குலைக்க முயற்சி – புட்டின் விடுத்த எச்சரிக்கை

  • March 1, 2025
  • 0 Comments

தமது நாட்டுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நல்லிணக்கம் ஏற்படுவதைக் குலைக்க முயல்வோருக்கு எதிராக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் எச்சரிக்கை விடுத்துள்ளார். அணுவாற்றல் வாய்ந்த இரு பெரும் நாடுகளுக்கு இடையே இதமான உறவு நீடிப்பதை எல்லா நாடுகளும் விரும்புவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க – ரஷ்ய பிரநிதிகள் துருக்கியில் சந்தித்த வேளையில் புட்டின் அவ்வாறு கூறினார். உக்ரேன் விவகாரம் பேசப்படவில்லை என்று அமெரிக்க அதிகாரிகள் கூறினர். மாறாக இருதரப்பு அம்சங்களில் கவனம் செலுத்தப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர். வாஷிங்டனிலும் […]

அறிவியல் & தொழில்நுட்பம் செய்தி

மூடுவிழா காணப்போகும் Skype!

  • March 1, 2025
  • 0 Comments

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பிரபலமான வீடியோ கால் செயலி ஸ்கைப் (Skype) வரும் மே மாதத்துடன் மூடுவிழா காண உள்ளதாக கூறப்படுகிறது. 2003 ஆண்டு வாய்ஸ் கால் செயலியாக அறிமுகமான ஸ்கைப்பை, 2011ஆம் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் கையகப்படுத்தியது. வீடியோ கால் செயலியாக பரிணமித்த ஸ்கைப், மக்கள் மத்தியில் பிரபலமடைந்தது. ஸூம் (Zoom) உள்ளிட்ட செயலிகளின் வருகையால் ஸ்கைப்பின் முக்கியத்துவம் குறையத் தொடங்கியது. இந்நிலையில், ஸ்கைப் செயலியை நிரந்தரமாக மூட மைக்ரோசாஃப்ட் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.