இலங்கை

இத்தாலியில் வசிக்கும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்

  • March 16, 2025
  • 0 Comments

இத்தாலியில் வசிக்கும் இலங்கையர்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரத்தை விரைவில் வழங்க அந்நாட்டு அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. இந்தத் தகவலை நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும் போது வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இலங்கையினால் வழங்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரத்தில் ஏற்பட்டுள்ள பல தொழிநுட்ப பிழைகள் காரணமாக குறித்த உரிமத்தை இத்தாலிய அரசாங்கத்தினால் அங்கீகரிக்க முடியவில்லை என பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார். இதன்படி, இந்த பிரச்சினை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், இத்தாலிய அரசாங்கம் அவர்களை அடையாளம் […]

இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

மத்திய கிழக்கில் பதற்றம் – அமெரிக்காவின் தாக்குதலில் பலர் பலி

  • March 16, 2025
  • 0 Comments

ஏமன் மீது அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் 31 பேர் பலியாகியுள்ளனர். ஏமன் நாட்டில் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பல பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அவர்கள் செங்கடல் பகுதியில் கப்பல்களை வழிமறித்து தாக்குதலிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கும்படி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டார். அமெரிக்கர்களுக்கு எதிராக கடற்கொள்ளை, வன்முறை மற்றும் பயங்கரவாதத்தில் ஈடுபடுகின்றனர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் தீர்க்கம் நிறைந்த மற்றும் […]

இலங்கை

இலங்கையில் வாகன சாரதி களுக்கு வெகுமதி வழங்கும் திட்டம் – பொலிஸார் அறிவிப்பு

  • March 16, 2025
  • 0 Comments

இலங்கையில் வாகன சாரதி களுக்கு வெகுமதி வழங்கும் திட்டம் ஒன்று அறிமுகப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஒழுக்கமான ஓட்டுநர்களுக்கு வெகுமதி அளிக்கும் முறையைத் தொடங்குவதற்கான ஒரு முயற்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் F.U வுட்லர் தெரிவித்துள்ளார். பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் அறிவுறுத்தலின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆண்டு இதுவரை 400க்கும் அதிகமான உயிரிழப்பு விபத்துக்கள் பதிவாகியுள்ளது. இந்த அபாயகரமான விபத்துக்களில் […]

வாழ்வியல்

ஒரு மாதம் சர்க்கரையை முற்றிலுமாக தவிர்த்தால்… அதிசயங்கள் நடக்கும்

  • March 16, 2025
  • 0 Comments

இனிப்புகள் என்றால் எல்லோருக்கும் பிடிக்கும் தான். ஆனால், பொதுவாகவே சர்க்கரை உடலுக்கு, மிகவும் தீங்கு விளைவிக்க கூடிய உணவுகளில் முதலிடம் வகிக்கிறது என்பதையும் மறுக்க முடியாது. டீ, காபி முதல் ஐஸ்கிரீம், கேக், சாக்லேட் போன்ற பல்வேறு வகையான இனிப்புகள் வரை சர்க்கரை அதிகம் பயன்படுத்தப்படுகிறது. அதிக கலோரி கொண்ட சர்க்கரை, உடல் பருமன், நீரழிவு ஆகியவற்றுக்கு காரணமாக இருப்பதோடு, எலும்புகள் வலுவிழத்தல், கல்லீரல் பிரச்சனை, சரும ஆரோக்கியம் பாதித்தில் ஆகிய பிரச்சினைகளுக்கு முக்கிய காரணமாகிறது. சர்க்கரையை […]

தமிழ்நாடு

ஏ.ஆர்.ரஹ்மான் மருத்துவமனையில் அனுமதி!

  • March 16, 2025
  • 0 Comments

பிரபல இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மான், நெஞ்சுவலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. திடீர் ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், மருத்துவர்கள் குழு அவரை தீவிர கண்காணிப்பில் வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன்னர், லண்டனுக்கு சென்றிருந்த ரஹ்மான், சமீபத்தில் சென்னைக்கு திரும்பியிருக்கிறார். இந்த நிலையில் அவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டதால் உடனடியாக அவர் மருத்துவமனையில் […]

உலகம்

மனிதர்கள் எளிதாக செய்யக்கூடிய பணியை AI தொழில்நுட்பத்தால் செய்ய முடியாது – ஆய்வில் தகவல்

  • March 16, 2025
  • 0 Comments

பெரும்பாலான மனிதர்கள் எளிதாகச் செய்யக்கூடிய பணியை AI தொழில்நுட்பத்தால் செய்ய முடியாது என்று ஒரு ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. AI தொழில்நுட்பம் கட்டுரைகளை எழுதவும், கலைப்படைப்புகளை உருவாக்கவும், உரையாடல்களை நடத்தவும் கூட திறனைக் கொண்டுள்ளது. இருப்பினும், சில AI அமைப்புகள் கடிகாரத்தில் நேரத்தைப் படிப்பதிலும் திகதியைப் புரிந்துகொள்வதிலும் சிரமப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. மனிதர்கள் நேரத்தையும் திகதியையும் மிக எளிதாகப் படிக்க முடியும் என்றாலும், சில AI தொழில்நுட்பங்கள் அதைச் செய்ய அதிக நேரம் எடுக்கும் என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். […]

ஐரோப்பா செய்தி

தென் சீனக் கடலில் சீனாவின் ஆபத்தான நடவடிக்கை – கவலையில் பிரித்தானியா

  • March 16, 2025
  • 0 Comments

தென் சீனக் கடலில் சீனாவின் ஆபத்தான மற்றும் ஸ்திரமின்மையை சீர்குலைக்கும் நடவடிக்கைகள் குறித்து பிரித்தானியா கவலை கொண்டுள்ளது என வெளியுறவுச் செயலாளர் டேவிட் லாமி தெரிவித்துள்ளார். தென் சீனக் கடலில் சீனாவின் ஆபத்தான மற்றும் ஸ்திரமின்மையை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து நாங்கள் கவலை கொண்டுள்ளோம் என லாமி கூறியுள்ளார். பிரித்தானியா மற்றும் உலகப் பொருளாதாரம் இந்த வர்த்தக வழிகள் பாதுகாப்பாக இருப்பதைச் சார்ந்துள்ளது என அவர் குறிப்பிடப்படுகிறார். தனது பதிவோடு இணைந்த காணொளியில், “பிலிப்பைன்ஸ் இங்கு ஆபத்தான […]

ஆசியா இன்றைய முக்கிய செய்திகள்

பாகிஸ்தானில் தரையிறங்கிய போது மாயமான விமானத்தின் சக்கரம் – அதிர்ச்சியடைந்த பயணிகள்

  • March 16, 2025
  • 0 Comments

பாகிஸ்தானில் தரையிறங்கியபோது விமானத்தின் சக்கரம் காணாமல் போனதால் கடும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானில் கராச்சியில் இருந்து லாகூருக்கு வியாழக்கிழமை புறப்பட்ட பிஐஏ விமானம் பிகே-306 இன் பின்புற சக்கரங்களில் ஒன்று, காணாமல் போயுள்ளது. விமானம் காணாமல் போன சக்கரத்துடன் கராச்சியில் இருந்து புறப்பட்டதா அல்லது புறப்படும் போது பிரிந்து விழுந்ததா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கராச்சி விமான நிலையத்தில் சக்கரத்தின் சில துண்டுகள் காணப்பட்டன. விமானம் புறப்படும் போது பின்புற சக்கரங்களில் ஒன்று பழுதடைந்த […]

அறிவியல் & தொழில்நுட்பம்

WhatsAppஇல் விரைவில் வர இருக்கும் அப்டேட்!

  • March 16, 2025
  • 0 Comments

ஹேக்கர்கள் மற்றும் மோசடியாளர்களிடம் இருந்து பயனர்களை பாதுகாக்கும் வகையில் வாட்ஸ் அப் செயலியில் புதிய அப்டேட் விரைவில் அறிமுகமாக இருக்கிறது. வாட்ஸ் அப் வீடியோ காலின்போது அதனை ரெக்கார்ட் மற்றும் மார்பிங் செய்து பணம் பறிக்கும் செயலில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தடுக்கும் வகையில் வீடியோ கால் சேவையில் புதிய மாற்றத்தை வாட்ஸ் அப் நிறுவனம் கொண்டு வருகிறது. அதன்படி, இனி வீடியோ கால் அழைப்பு வரும்போது முதலில் ஆடியோ இணைக்கப்படும், பயனர் விரும்பினால் மட்டுமே […]

இன்றைய முக்கிய செய்திகள் உலகம்

புதிய கொரோனா வைரஸ் தொற்றை கண்டுபிடித்த ஆராச்சியாளர்கள் – தடுக்க மருந்து இல்லை

  • March 16, 2025
  • 0 Comments

வௌவால்களின் வாய் மற்றும் மலக்குடல் பகுதிகளில் இருந்து புதிய கொரோனா வைரஸ் ஒன்றை பிரேசில் மற்றும் ஹொங்காங் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த புதிய வைரஸ், MERS எனப்படும் கொரோனா வைரஸுடன் நெருக்கமாக தொடர்புடையது. MERS, பாதிப்புக்குள்ளானவர்களில் 35% பேரை கொல்லக்கூடியது. இந்த புதிய வைரஸின் ஸ்பைக் புரோட்டீன் அமைப்பு, மனித செல்களை பாதிக்கும் திறன் கொண்டது என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். இந்த வைரஸ், மற்றும் ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட மற்ற ஆறு வைரஸ்களும் சீனாவுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்த […]