செய்தி

மத்திய கிழக்கு மோதல் – இலங்கையில் ஒகஸ்ட் மாதத்திற்குள் எரிபொருள் விலைகள் அதிகரிக்க வாய்ப்பு

  • June 17, 2025
  • 0 Comments

இலங்கையில் ஒகஸ்ட் மாதத்திற்குள் எரிபொருள் விலைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக உயர் அதிகாரி ஒருவர் நேற்று தெரிவித்தார். இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதலின் நேரடி விளைவாக உலக சந்தையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் காரணமாக இந்த அதிகரிப்பு ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரான் ஒரு பெரிய எண்ணெய் உற்பத்தியாளர், மேலும் உலகளாவிய விநியோகத்தில் சுமார் 3 சதவீதத்தை கொண்டுள்ளது. சிங்கப்பூரை தளமாகக் கொண்ட நிறுவனங்களிடமிருந்து இலங்கை எரிபொருள் பெற்று வருகின்றது. இதனை தவிர, எரிபொருள் கொள்முதல் ஒப்பந்தத்திற்காக […]

அறிவியல் & தொழில்நுட்பம்

அறிமுகமானது ஹூவாய் பேண்ட் 10

  • June 17, 2025
  • 0 Comments

ஃபிட்னஸ் பேண்ட்ஸ் நமது வாழ்க்கையின் அங்கமாக மாறிவிட்டன. உடற்பயிற்சி, தூக்கத்தை கண்காணிக்கிறது என அனைத்திற்கும் இந்த பேண்ட்ஸ் ரொம்பவே உதவியாக இருக்கும். Huawei நிறுவனம் புதிய Huawei Band 10-ஐ இந்தியால அறிமுகப்படுத்தி உள்ளது. 14 நாட்கள் வரைக்கும் நீடித்து நிற்கும் பேட்டரி, புதுமையான சுகாதார அம்சங்கள் பல சிறப்பம்சங்களோட இந்த பேண்ட் களமிறக்கப்பட்டுள்ளது. Huawei Band 10 அதன் நேர்த்தியான வடிவமைப்புடன் கண்களை கவருகிறது.1.47 இன்ச் AMOLED செவ்வக டிஸ்ப்ளே துடிப்பான வண்ணங்களையும் தெளிவான படங்களையும் […]

செய்தி

உலகின் மிகவும் வாழக்கூடிய நகரங்களில் முதலிடத்தை பிடித்த டென்மார்க் தலைநகரம்

  • June 17, 2025
  • 0 Comments

2025 ஆம் ஆண்டிற்கான உலகின் மிகவும் வாழக்கூடிய நகரங்களில் டென்மார்க் தலைநகரம் முதலிடத்தை பிடித்துள்ளது. உலகளவில் 173 நகரங்களில் எகனாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் யூனிட் நடத்திய கணக்கெடுப்பின்படி இந்த விடயம் தெரியவந்துள்ளது. கோபன்ஹேகன், டென்மார்க் வியன்னா, ஆஸ்திரியா சூரிச், சுவிட்சர்லாந்து மெல்போர்ன், ஆஸ்திரேலியா ஜெனீவா, சுவிட்சர்லாந்து சிட்னி, ஆஸ்திரேலியா ஒசாகா, ஜப்பான் ஆக்லாந்து, நியூசிலாந்து அடிலெய்ட், ஆஸ்திரேலியா வான்கூவர், கனடா தி எகனாமிஸ்ட் பத்திரிகையின் சகோதர அமைப்பான EIU, சுகாதாரம், கல்வி, நிலைத்தன்மை, உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் உள்ளிட்ட […]

இன்றைய முக்கிய செய்திகள் உலகம்

போர் பதற்றம் தீவிரம் – பாதாள அறையில் தஞ்சமடைந்த ஈரான் மதத் தலைவர்

  • June 17, 2025
  • 0 Comments

ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி கொமெனி குடும்பத்துடன் பாதாள அறையில் தஞ்சமடைந்துள்ளார். இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில் ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி கொமேனி, தலைநகர் தெஹ்ரானின் வடகிழக்கில் லாவிஜான் பகுதியில் உள்ள பாதாள அறையில் குடும்பத்துடன் தஞ்சமடைந்து உள்ளார். கடந்த 13-ம் திகதி ஈரான் மீது தாக்குதல் நடத்தினோம். அன்றைய தினமே அயத்துல்லா அலி கொமேனி மீதும் தாக்குதல் நடத்தியிருக்க முடியும். நாங்கள் அவ்வாறு செய்யவில்லை. அவருக்கு ஒரு வாய்ப்பை வழங்கி […]

இன்றைய முக்கிய செய்திகள் உலகம்

டெஹ்ரானில் இருந்து மக்களை உடனடியாக வெளியேறுமாறு டிரம்ப் எச்சரிக்கை

  • June 17, 2025
  • 0 Comments

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இருந்து அனைவரும் உடனடியாக வெளியேற வேண்டுமென அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். மத்திய கிழக்கில் உள்ள நாடுகளான இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான தாக்குதல் நீடிக்கும் நிலையில் இரு நாடுகளும் தாக்குதலை தொடரவிருப்பதால் ஈரான் தலைநகா் டெஹ்ரானில் இருந்தும், இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இருந்தும் மக்கள் வெளியேற வேண்டும் என்று இரு நாடுகளும் பரஸ்பரம் எச்சரிக்கை விடுத்திருக்கின்றன. இந்த நிலையில், கனடாவில் நடைபெற்றுவரும் ஜி7 உச்சிமாநாட்டில் இருந்து அமெரிக்க […]

இலங்கை

இலங்கை காலநிலை தொடர்பில் வெளியான தகவல்

  • June 17, 2025
  • 0 Comments

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. சில இடங்களில் சுமார் 50 மில்லிமீற்றர் வரையிலான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். ஊவா மாகாணத்திலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் […]

செய்தி

இஸ்ரேல் – ஈரானில் பதற்றம் – வெளியேற உதவி கோரும் ஆஸ்திரேலியர்கள்

  • June 17, 2025
  • 0 Comments

இஸ்ரேல் மற்றும் ஈரானில் பதற்றம் அதிகரித்து வருவதால், நூற்றுக்கணக்கான ஆஸ்திரேலியர்கள் அங்கிருந்து வெளியேற உதவி கோரியுள்ளனர். பொதுமக்கள் விமானங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்கள் ஏற்படும் அபாயம் காரணமாக வான்வெளி மூடப்பட்டிருப்பதால், ஆஸ்திரேலியர்கள் வெளியேற வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. வெளியுறவு அமைச்சர் பென்னி வோங், 300 ஆஸ்திரேலியர்கள் இஸ்ரேலை விட்டு வெளியேற உதவுமாறு வெளியுறவு மற்றும் வர்த்தகத் துறையிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறினார். ஈரானில் உள்ள மேலும் 350 ஆஸ்திரேலியர்களும் வெளியேற உதவி கோரியுள்ளனர். இந்த எண்ணிக்கை எதிர்காலத்தில் […]

இன்றைய முக்கிய செய்திகள் உலகம் செய்தி

இஸ்ரேல் – ஈரான் மோதல் தீவிரம் – உலகெங்கும் உயரும் பெட்ரோல் விலை

  • June 17, 2025
  • 0 Comments

ஈரானின் புஷேர் மாகாணம், கங்கனில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது இஸ்ரேல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. இதனால் ஈரான் எண்ணெய் உற்பத்தியை பாதியாக குறைத்துள்ளது. நாளொன்றுக்கு 15 முதல் 20 லட்சம் பேரல்கள் கச்சா எண்ணெய் ஈரானில் இருந்து ஏற்றுமதியாகிறது. தற்போது நடந்து வரும் சண்டையால் இந்த ஏற்றுமதி பாதிக்கப்படும். இதை ஈடு செய்ய ஒபெக் எனப்படும் எண்ணெய் உற்பத்தி நாடுகள் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். அதில் பிரச்னை ஏற்பட்டால் தற்போது கச்சா எண்ணெய் […]

இந்தியா

ஏர் இந்தியா விமான விபத்தைப் பயன்படுத்திச் சுயவிளம்பரம் தேட வேண்டாம் என கோரிக்கை

  • June 17, 2025
  • 0 Comments

ஏர் இந்தியா விமான விபத்தைப் பயன்படுத்திச் சுயவிளம்பரம் தேட வேண்டாம் என பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. விபத்தில் 3 பிள்ளைகளுடன் பலியான பிரத்தீக் ஜோஷி – கோமி வியாஸ் தம்பதியின் உறவினர் குல்டீப் என்பவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். குடும்பத்தின் படத்தை AI செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் கொண்டு மாற்றியமைத்தும் போலியான காணொளிகளைப் பகிர்ந்தும் சிலர் சுயவிளம்பரம் தேட முயல்வது மிகவும் வருத்தமளிப்பதாக குல்டீப் கூறினார். சமூக ஊடகத்தில் தங்களுக்கு likes உயர வேண்டும், followers எண்ணிக்கை […]

செய்தி மத்திய கிழக்கு

தாக்குதல் தீவிரம் – ஈரானிலுள்ள இந்திய மாணவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்

  • June 17, 2025
  • 0 Comments

தொடர் தாக்குதல்களையடுத்து ஈரானிலுள்ள இந்தியாவைச் சேர்ந்த மாணவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். அரசதந்திரிகள் மாணவர்களுக்கு உதவி வருவதாக இந்தியா தெரிவித்தது. இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர் வட்டாரப் போராக மாறக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனைக் கருத்தில்கொண்டு அந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக புதுடில்லி தெரிவித்துள்ளது. தெஹ்ரானிலுள்ள இந்தியத் தூதரகம் தொடர்ந்து நிலவரத்தை அணுக்கமாகக் கண்காணித்து வருகிறது. மாணவர்களுடன் தொடர்பிலிருந்து வருவதாக இந்திய வெளியுறவு அமைச்சு வெளியிட்ட அறிக்கை கூறியது. மாணவர்களில் சிலர் ஈரானுக்குள் இந்தியத் தூதரகத்தின் கட்டடங்களுக்கு […]