ஐரோப்பா

உக்ரைனில் ரஷ்ய தாக்குதலில் 6 பேர் உயிரிழப்பு – ஜெலென்ஸ்கி

  • October 22, 2025
  • 0 Comments

உக்ரைன் முழுவதும் நகரங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்பை குறிவைத்து ரஷ்யா நடத்திய இரவு நேர தாக்குதல்களில் ஆறு பேர் கொல்லப்பட்டதாகவும், 17 பேர் காயமடைந்ததாகவும் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இன்று(22) தெரிவித்தார். கியேவ்( Kyiv), ஒடேசா(Odesa), செர்னிஹிவ்(Chernihiv), டினிப்ரோ(Dnipro), கிரோவோஹ்ராட்(Kirovohrad) பொல்டாவா(Poltava), வின்னிட்சியா(Vinnytsia), சபோரிஜியா(Zaporizhzhia), செர்காசி(Cherkasy) மற்றும் சுமி(Sumy) உள்ளிட்ட பல பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஜனாதிபதி தெரிவித்தார். ரஷ்யா ராஜதந்திரத்தைப் புறக்கணிப்பதாகவும் ஜெலென்ஸ்கி குற்றம் சாட்டினார். மேலும் வலுவான தடைகள் மற்றும் நீண்ட தூர […]

இந்தியா

டெல்லியில் காற்றின் தரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு – சிரமப்படும் மக்கள்!

  • October 22, 2025
  • 0 Comments

இந்தியாவின் தலைநகரான டெல்லியில் காற்றின் தரம் இன்று மோசமான நிலையை எட்டியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டெல்லியின் ஆர்.கே.புரத்தில் காற்று தரக் குறியீடு 380 ஆகவும், ஆனந்த் விஹார் மற்றும் அசோக் விஹார் ஆகிய பகுதிகளில்  355 ஆகவும் பதிவாகியுள்ளது. இதன்காரணமாக நகரம் முழுவதும் இருள் சூழ்ந்த நிலை காணப்பட்டதுடன், மக்கள் சுவாச பிரச்சினைகளை எதிர்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தீபாவளி கொண்டாட்டத்தின் போது உச்சநீதிமன்றம் விதித்த 02 மணிநேரத்தையும் தாண்டி பட்டாசுக்களை வெடித்தது காற்று மாசுப்பாட்டை அதிகரித்துள்ளதாக […]

இலங்கை

” இலங்கையர் தினம்” நிகழ்வுகளை நடத்தவதற்கு அங்கீகாரம் வழங்கியுள்ள அமைச்சர்வை

  • October 22, 2025
  • 0 Comments

” இலங்கையர் தினம்” நிகழ்வுகளை எதிர்வரும் டிசம்பர் மாதம் 12,13 மற்றும் 14 ஆம் திகதிகளில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாநகர சபை மைதானத்திலும், விகாரமாதேவி பூங்கா உள்ளிட்ட அப்பிரதேத்தை அண்டிய வளாகங்கள் மற்றும் பிரதான வீதிகளை உள்ளடக்கியதாக 04 வலயங்களில் அரச மற்றும் தனியார் துறைகளின் பங்கேற்புடன் நிகழ்வுகளை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. சமூகத்தவர்களிடையே புரிந்துணர்வை அதிகரித்து நல்லிணக்கத்துடன் கூடிய இலங்கையைக் கட்டியெழுப்பும் நோக்கில் ‘இலங்கையர் தினமாக’ தேசிய நிகழ்ச்சித்திட்டத்தை நடாத்துவதற்கு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார […]

இலங்கை

வெலிகம துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சர் விளக்கம்!

  • October 22, 2025
  • 0 Comments

கொலை செய்யப்பட்ட வெலிகம பிரதேச சபை தலைவர், பாதாள குழுவுடன் தொடர்புபட்டவர். பாதாள குழுக்களுக்கிடையிலான மோதலின் விளைவாகவே இக்கொலைச்சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். வெலிகம பிரதேச சபைக்குள் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  ” மேற்படி துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தால் பொதுமக்கள் பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படவில்லை. இந்நாட்டில் பாதாளக்குழுக்கள் உள்ளன. இக்குழுக்கள் பிளவுபட்டு […]

இலங்கை முக்கிய செய்திகள்

இஷாரா செவ்வந்தியிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பு!

  • October 22, 2025
  • 0 Comments

கணேமுல்ல சஞ்சீவவின் கொலை வழக்குடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தியிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் தொடர்பான அறிக்கை இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இஷாரா செவ்வந்தி தற்போது 90 நாட்கள்  தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அத்துடன் அவருக்கு ஆதரவளித்த இருவரும் 90 நாட்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். விசாரணைகளின் முன்னேற்றம் உடனடியாக அறிவிக்கப்படும் என்று  காவல்துறையினர் நீதிமன்றத்திற்குத் தெரிவித்திருந்திருந்தனர். அதற்கமைய விசாரணை தொடர்பான முதலாவது அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. வழங்கப்பட்ட தகவல்களைக் கருத்தில் […]

ஐரோப்பா

செர்பிய நாடாளுமன்றத்திற்கு வெளியே துப்பாக்கிச் சூடு ; ஒருவர் படுகாயம்

  • October 22, 2025
  • 0 Comments

செர்பியாவில் இன்று(22) பெல்கிரேடில்(Belgrade) உள்ள பாராளுமன்ற கட்டிடத்திற்கு வெளியே ஜனாதிபதி அலெக்சாண்டர் வுசிக்கின்(Aleksander Vucic) ஆதரவாளர்களால் அமைக்கப்பட்ட கூடாரத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டதில் ஒருவர் படுகாயமடைந்தார். இந்த துப்பாக்கி சூட்டில் 57 வயதான முதியவர் படுகாயமடைந்தார். உடனடியாக விரைந்து சென்ற பாதுகாப்புப்படையினர், முதியவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பியோடிய நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நாடாளுமன்றம் அருகே நடந்த இந்த துப்பாக்கி சூட்டை பயங்கரவாத தாக்குதல் […]

ஐரோப்பா செய்தி

வெறும் 07 நிமிடங்களில் அரங்கேற்றப்பட்ட கொள்ளை சம்பவம் – புலனாய்வாளர்கள் வெளியிட்ட தகவல்!

  • October 22, 2025
  • 0 Comments

உலகின் மிகவும் பிரபலமான அருங்காட்சியகத்தில் கொள்ளையிட வெறும் ஏழு நிமிடங்களே எடுத்துக்கொண்ட திருடர்கள்! அவ்வளவு பாதுகாப்பினையும் தாண்டி கொள்ளையடித்துச் சென்றது எப்படி? பிரான்ஸில் அமைந்துள்ள லூவர் (Louvre) அருக்காட்சியகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருடர்கள் தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர். 102 மில்லியன் டொலர் மதிப்புள்ள 08 நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. உலகின் மிகவும் பாதுகாப்பான அருங்காட்சியகங்களில் ஒன்றான இதில் 07 நிமிடங்களில் கொள்ளையடித்து சென்ற அந்த திருடர்கள் யார்? அவர்கள் பிரான்சை விட்டு தப்பிச் சென்றார்களா? எவ்வளவு காலமாக இந்த […]

பொழுதுபோக்கு

முதன்முறையாக வைல்ட் கார்ட் மூலம் நுழையும் கணவன் – மனைவி…

  • October 22, 2025
  • 0 Comments

பிக் பாஸ் 9 தமிழ் தொடங்கி மூன்று வாரங்களைக் கடந்துவிட்ட நிலையில், வைல்ட் கார்டு வரவு குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளன. விஜய் தொலைக்காட்சியில் கடந்த 5 ஆம் திகதி முதல் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. பிக் பாஸ் வீடு மற்றும் பிக் பாஸ் சொகுசு வீடு என இரு அணிகளாகப் போட்டி நடைபெற்று வருகிறது. முதல் வாரத்தில் மட்டும் நந்தினி தாமாக விருப்பத்தின் அடிப்படையில் வெளியேறினார். முதல் வாரத்தில் இயக்குநர் பிரவீன் […]

இலங்கை

போதைபொருள் சார்ந்த குற்றங்களுக்கு மரண தண்டனை பற்றி தீர்மானம் எடுக்கப்படவில்லை ;அமைச்சர் நளிந்த

  • October 22, 2025
  • 0 Comments

போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபவர்களுக்கு மரண தண்டனை விதிப்பது தொடர்பில் அரசாங்கத்துக்குள் எவ்வித கலந்துரையாடலும் இடம்பெறவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ(Nalinda Jayatissa) தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (22) நடைபெற்றது. இதன்போது போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடும் நபர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என சமூகத்தில் எழுந்துள்ள கருத்தாடல் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். ‘மரண தண்டனை வழங்குவது பற்றி […]

ஐரோப்பா

போலந்தில் இராணுவ உள்கட்டமைப்பை உளவு பார்த்த சந்தேகத்தின் பேரில் உக்ரைனியர் கைது

  • October 22, 2025
  • 0 Comments

போதைப்பொருள் வைத்திருந்ததற்காக கைது செய்யப்பட்ட இரு உக்ரேனியர்களில் ஒருவர், போலந்து இராணுவத்தின் முக்கியமான உள்கட்டமைப்பின் புகைப்படங்கள் மற்றும் ஒருங்கிணைப்புகளை ரஷ்ய பேச்சாளருடன் பகிர்ந்து கொண்டுள்ளதாக போலந்து வழக்கறிஞர்கள் இன்று (22) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். போலந்து தனியுரிமைச் சட்டத்தின் கீழ் போஹ்டன் கே மற்றும் கைரிலோ டி என மட்டுமே அடையாளம் காணப்பட்ட இரு உக்ரேனியர்கள், கிழக்கு போலந்தின் பியாலா போட்லாஸ்காவில் 30 கிராம் சட்டவிரோத போதைப்பொருட்களை வைத்திருந்ததற்காக கைது செய்யப்பட்டனர். இதில் போஹ்டன் கே-க்கு சொந்தமான […]