இந்தியா செய்தி

எரிபொருள் கசிவால் வாரணாசியில் அவசரமாக தரையிறங்கிய இண்டிகோ விமானம்

  • October 22, 2025
  • 0 Comments

கொல்கத்தாவிலிருந்து ஸ்ரீநகருக்குச் சென்ற இண்டிகோ (IndiGo) விமானம், எரிபொருள் கசிவைத் தொடர்ந்து உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் (Varanasi) உள்ள லால் பகதூர் சாஸ்திரி சர்வதேச விமான நிலையத்தில் (Bahadur Shastri International Airport) அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. விமானத்தில் பயணித்த 166 பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், “தேவையான சோதனைகளுக்காக விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது, பயணத்தைத் தொடர மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து […]

ஐரோப்பா செய்தி

போர் விமான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ஸ்வீடன் மற்றும் உக்ரைன்

  • October 22, 2025
  • 0 Comments

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 150 க்ரிபென் (Gripen) போர் விமானங்களை உக்ரைனுக்கு ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தத்தில் ஸ்வீடன் கையெழுத்திட்டுள்ளதாக பிரதமர் உல்ஃப் கிறிஸ்டர்சன் (Ulf Kristersen) தெரிவித்துள்ளார். தெற்கு ஸ்வீடனில் உள்ள லிங்கோபிங்கில் (Linköping) பேச்சுவார்த்தைக்காக உக்ரைன் ஜனாதிபதி மற்றும் ஸ்வீடன் பிரதமர் கூடியிருந்த நிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. ஒப்பந்தத்திற்கு பிறகு JAS 39 க்ரிபென் போர் விமானம், குளோபல்ஐ (GlobalEye) கண்காணிப்பு விமானம், ஏவுகணை அமைப்புகள், டாங்க் எதிர்ப்பு காலாட்படை (anti-tank infantry) ஆயுதங்கள் மற்றும் பிற […]

பொழுதுபோக்கு

இலங்கையின் பிரபல நடிகைக்கும் கெஹல்பத்தர பத்மேவுக்கும் என்ன தொடர்பு?

  • October 22, 2025
  • 0 Comments

பாதாள உலகக் குழுக்களின் தலைவராக கருதப்படும் கெஹல்பத்தர பத்மேவுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக  சிஐடியால் விசாரிக்கப்பட்ட பிரபல மாடலும், நடிகையுமான பியூமி ஹன்சமாலி இது குறித்து விளக்கமளித்துள்ளார். பியூமி தனது அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்த அவருக்கு கூறுவதற்கு மட்டுமே தொடர்பில் இருந்ததாக கூறினார். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு டுபாயில் பல நடிகர்கள் மற்றும் நடிகைகள் கலந்து கொண்ட புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது தான் முதன்முதலில் பத்மேவை சந்தித்ததாக ஹன்சமாலி கூறினார். அவர் தனது […]

உலகம் செய்தி

துனிசியாவில் படகு மூழ்கி விபத்து – 40 புலம்பெயர்ந்தோர் உயிரிழப்பு

  • October 22, 2025
  • 0 Comments

துனிசியா (Tunisia) கடற்கரையில் துணை-சஹாரா (sub-Sahara) ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த 40 புலம்பெயர்ந்தோர் படகு மூழ்கியதில் உயிரிழந்துள்ளனர். இது இந்த ஆண்டு அப்பகுதியில் ஏற்பட்ட மிக மோசமான கடல்சார் துயரங்களில் ஒன்றாகும் என்று துனிசியா கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். சுமார் 70 புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு, கடலோர நகரமான மஹ்தியா (Mahdia) அருகே மூழ்கியதாக துனிசியா கடற்படையினர் தெரிவித்துள்ளனர். மோதல்கள் மற்றும் வறுமையிலிருந்து தப்பி ஐரோப்பாவில் சிறந்த வாய்ப்புகளைத் தேடும் புலம்பெயர்ந்தோருக்கு துனிசியா ஒரு […]

செய்தி விளையாட்டு

ஆசிய கோப்பையை வாங்க இந்திய அணிக்கு அழைப்பு விடுத்த மோசின் நக்வி(Mohsin Naqvi)

  • October 22, 2025
  • 0 Comments

2025ம் ஆண்டிற்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்சில் (UAE) நடைபெற்றது. இதில் சூர்ய குமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த தொடரில் விளையாட்டை தாண்டி இரு நாட்டு அரசியல் மேலோங்கி காணப்பட்டது. காரணம் பஹல்காம் (Pahalgam attack) பயங்கரவாத தாக்குதலுக்கு எதிரொலியாக பாகிஸ்தான் வீரர்களுடன் இந்திய வீரர்கள் கைகுலுக்க மறுத்துவிட்டனர். அந்தவகையில், தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொண்டு வெற்றி பெற்றது. பிறகு நடந்த பரிசளிப்பு […]

பொழுதுபோக்கு

“டியூட் மீது கேஸ் போடுங்க” இளையராஜாவுக்கு நீதிமன்றம் கொடுத்த டிப்ஸ்

  • October 22, 2025
  • 0 Comments

இசைஞானி இளையராஜா என்றால் பாடல்களின் ராஜா என்று கூறுவதை விட சர்ச்சைகளின் ராஜா என்று கூறலாம். இவருடைய பாடல்கள் எந்த படத்தில் பயன்படுத்தியிருந்தாலும் படம் வெளியாகி அடுத்த நாளே வக்கீல் நோட்டீஸ் அனுப்பிவிடுவார் இளையராஜா. சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லீ படத்தில் இளையராஜா பாடல்கள் பயன்படுத்தி இருப்பதாக வழக்கு தொடர்ந்து இருந்தார். அதனால் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்த நிலையில் குட் பேட் அக்லீ ஓடிடியில் இருந்து நீக்கப்பட்டு அதன் பின் மாற்றங்களுடன் மீண்டும் வெளியானது. […]

இலங்கை

பிரான்சில் இருந்து 13 நாடுகளை மிதிவண்டியில் கடந்து யாழ்ப்பாணத்தை வந்தடைந்த இளைஞர்!

  • October 22, 2025
  • 0 Comments

பிரான்சில் (France) இருந்து சுமார் 13 நாடுகளை மிதிவண்டியில் கடந்த நபர் ஒருவர் இன்று யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளார். 28 வயதுடைய சூரன் என்ற நல்லூரைச் சேர்ந்த  இளைஞர் “பாரிஸ் டு யாழ்ப்பாணம்”(“Paris to Jaffna)  என்ற தலைப்பில் இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். சுமார் 10 ஆயிரம் கிலோமீற்றர் பயணம் செய்த அவர், யாழப்பாணத்தில் நல்லூர் கந்தசுவாமி கோயில் மற்றும் யாழ் நூலகம் ஆகியவற்றை பார்வையிட்டுள்ளார். தனது பயணம் குறித்து ஊடகங்களிடம் பேசிய அவர், “நான் செப்டம்பர் […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் அதிகரிக்கப்படும் ஊதியம் – அரை மில்லியன் தொழிலாளர்கள் பயன்பெறுவர்!

  • October 22, 2025
  • 0 Comments

இங்கிலாந்தில் ஒரு மணித்தியாலத்திற்கு வழங்கப்படும் ஊதியம் கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த அதிகரிப்பானது அரை மில்லியன் தொழிலாளர்களுக்கு பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அறிவிப்பின்படி ஒருமணி நேரத்திற்கு வழங்கப்படும் ஊதியமானது £13.45 பவுண்ட்ஸ் ஆகவும் லண்டனில் £14.80 பவுண்ட்ஸ்  ஆகவும் அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய லண்டனில் 95 பென்ஸ் அதிகரிக்கப்படும் அதேவேளை பிற இடங்களில் 85 பென்ஸ் அதிகரிக்கப்படுகிறது. அத்தியாவசியப் பொருட்களின் விலையின் அடிப்படையில் ஊதிய உயர்வை கணக்கிடும் அறக்கட்டளை, முழுநேரமாக வேலை செய்யும் ஊழியர் ஒருவர் ஆண்டிற்கு […]

இலங்கை

ரணில், சஜித் சங்கமம் சாத்தியமா?

  • October 22, 2025
  • 0 Comments

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைத்துவத்தின்கீழ் தனிக்கட்சியாக ஒன்றிணைவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தயாரில்லை என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் அஜித் மானப்பெரும தெரிவித்தார். அனைத்து எதிர்க் கட்சிகளையும் ஒன்றிணைப்பதே ஐக்கிய தேசியக் கட்சியின் நோக்கமாகும். இந்த நடவடிக்கையானது தனியொரு கட்சிக்கு தலைமைத்துவத்தை வழங்கல் அல்ல எனவும் அவர் கூறினார். ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பவற்றை ஒன்றிணைப்பதற்குரிய முயற்சி இடம்பெற்றுவருகின்றது. இவ்வாறு இரு தரப்புகளும் இணைந்து மாகாணசபைத் தேர்தலை பொதுபட்டியலின்கீழ் எதிர்கொள்வதற்குரிய ஏற்பாடும் […]

இலங்கை

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான ஊழல் வழக்கு – நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

  • October 22, 2025
  • 0 Comments

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச(Wimal Weerawansa) அமைச்சராகச் செயல்பட்ட போது சுமார் 75 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் மற்றும் நிதியை சட்டவிரோதமாகச் சம்பாதித்ததாகக் கூறி, அவருக்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கான திகதியை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (22) நிர்ணயித்துள்ளது. இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹால் முன்னிலையில் அழைக்கப்பட்டது. அதன்படி, குறித்த வழக்கின் விசாரணையை டிசம்பர் 18 மற்றும் ஜனவரி 20 […]