கென்யாவில் ஹெலிகாப்டர் விபத்து – சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு
கென்யாவின் சம்புரு மாவட்டத்தில் இன்று ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் 07 விமானி மற்றும் ஆறு சுற்றுலாப் பயணிகள் உட்பட ஏழு பேர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விமானம் லோயிசாபா வனப்பாதுகாப்புப் பகுதிக்குச் சென்று கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்த சுற்றுலாப் பயணிகள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது அறிவிக்கப்படவில்லை.
உள்ளூர் அதிகாரிகள் இது குறித்து விசாரித்து வருவதாகவும், விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




