லாகூர் நகரின் புறநகர்ப் பகுதியான கஹ்னாவில் (Kahna) உள்ள ஒரு தனியார் கல்வி நிலையத்தில் (Tuition Centre) இந்தச் சம்பவம் நடந்துள்ளது. உலகம் செய்தி

கூரை இடிந்து விழுந்து 14 சிறுவர்கள் பலி: பாகிஸ்தானில் சோகம்

  • July 1, 2026
  • 0 Comments

பாகிஸ்தானின் லாகூர் நகருக்கு அருகே கட்டிடத்தின் கூரை இடிந்து விழுந்ததில், அதற்குள் சிக்கி 14 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். லாகூர் நகரின் புறநகர்ப் பகுதியான கஹ்னாவில் (Kahna) உள்ள ஒரு தனியார் கல்வி நிலையத்தில் (Tuition Centre) இந்தச் சம்பவம் நடந்துள்ளது. சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்டவர்களில் 10 வயதிற்குட்பட்ட சிறுவர்களும் அடங்குவர். இந்தக் கட்டிட விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர், மேலும் முதற்கட்ட விசாரணையின் ஒரு பகுதியாக இருவர் காவலில் எடுக்கப்பட்டுள்ளனர். உள்நாட்டு நேரப்படி […]

உலகம்

லெபனானில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிக்கு நெதன்யாகு களவிஜயம்

  • June 30, 2026
  • 0 Comments

இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இன்று, இஸ்ரேலிய இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட லெபனான் பகுதிக்குச் சென்று பார்வையிட்டார். இதன்போது துருப்புக்களுடன் பேசிய அவர், ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா தொடர்ந்து அச்சுறுத்தலாக இருக்கும் வரை, நாட்டின் தெற்குப் பகுதியிலிருந்து இஸ்ரேல் பின்வாங்காது என்று  கூறியுள்ளார். அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இஸ்ரேலிய மற்றும் லெபனான் அரசாங்கங்கள் ஒரு பாதுகாப்பு ஒப்பந்தத்தை எட்டிய பின்னர், ஆக்கிரமிக்கப்பட்ட லெபனான் பகுதிக்கு நெதன்யாகு மேற்கொண்ட முதல் பயணம் இதுவாகும். இந்த ஒப்பந்தத்தின்படி, இஸ்ரேல் இரண்டு […]

இலங்கை

ஹெரோயின் வைத்திருந்தவருக்கு ஆயுள் தண்டனை

  • June 30, 2026
  • 0 Comments

ஹெரோயின் வைத்திருந்த நபர் ஒருவருக்கு அனுராதப்புர நீதவான் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்துள்ளது. கெக்கிராவை வீதி, தலாவ பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபர் ஒருவர் 3.074 கிராம் ஹெரோயின்  வைத்திருந்தமைக்காக குற்றாவாளியாக இனங்காணப்பட்டுள்ளார். சுமார் 04 வருடங்களுக்கும் மேலாக இடம்பெற்று வந்த இந்த வழக்கிற்கு இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதன்படி குறித்த நபர்  சந்தேகத்திற்கு இடமின்றி குற்றவாளி எனக் கண்டறியப்பட்டுள்ளதை  அடுத்து, மேற்படி ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

உலகம்

குடியுரிமை மறுசீரமைப்பு : காங்கிரஸிடம் உதவி கோரும் ட்ரம்ப்

  • June 30, 2026
  • 0 Comments

அமெரிக்காவில் சட்டவிரோதமாகவோ அல்லது தற்காலிக விசாவிலோ வசிக்கும் பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைகள் அமெரிக்கக் குடிமக்கள் அல்ல என்று ட்ரம்ப் நிர்வாகம் பிறப்பித்திருந்த உத்தரவு எதிராக நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. இந்நிலையில் இந்த சட்டத்தை மீள நடைமுறைப்படுத்த காங்கிரஸின் பங்களிப்பை அவர் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் தனது ட்ருத் சோசியல் தளத்தில் அவர் இட்டுள்ள பதிவொன்றில், “நீண்ட மற்றும் சிக்கலான அரசியலமைப்புத் திருத்தம் எதுவும் தேவையில்லை. நமது நாட்டிற்குச் செலவுமிக்கதும் நியாயமற்றதுமான பிறப்புரிமைக் குடியுரிமையை முடிவுக்குக் கொண்டுவர காங்கிரஸ் […]

உலகம்

வெனிசுலா நிலநடுக்கம் – 03 அமெரிக்கர்கள் உயிரிழப்பு

  • June 30, 2026
  • 0 Comments

வெனிசுவேலாவில் ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கங்களில் சிக்கி  மூன்று அமெரிக்கர்கள் உயிரிழந்துள்ளதாகவும், 12 பேரைக் காணவில்லை எனவும் அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. இதற்கிடையே நிலநடுக்கங்களின் விளைவாக குறைந்தது 1,750 பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும் தற்காலிக அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸின் (Delcy ⁠Rodriguez) தெரிவித்துள்ளார். வெனிசுவேலாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் கியான்லூகா ராம்போலா (Gianluca Rampolla) இறப்பு எண்ணிக்கை கணிசமாக அதிகமாக இருக்கலாம் என்றும், தற்போதுவரை 10000 சடலப் பைகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். அதேநேரம் […]

உலகம்

வெனிசுலா மீது விதிக்கப்பட்டுள்ள ஒருதலைபட்சமான தடைகள் – சீனா அதிருப்தி

  • June 30, 2026
  • 0 Comments

வெனிசுலா மீது சில நாடுகள் விதித்துள்ள ஒருதலைப்பட்சத் தடைகள், அந்நாட்டின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியையும், மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளையும் கடுமையாகப் பாதித்துள்ளதாக சீனா கூறுகிறது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 62வது அமர்வின்  உரையாற்றியபோது, ​​  சீனத் தூதுக்குழுவின் அமைச்சர், ஆலோசகர் மு ஜியான்ஃபெங் இவ்வாறு தெரிவித்துள்ளார். நியாயமற்ற இந்த ஒருதலைப்பட்சத் தடைகள் வெனிசுலா மக்களின் அடிப்படை மனித உரிமைகளைக் கடுமையாகப் பாதித்துள்ளதாகவும், அவை உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். […]

ஐரோப்பா

பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை – குளிக்கும் இடங்களில் கழிவு நீர் வெளியேற்றம்

  • June 30, 2026
  • 0 Comments

ஐரோப்பிய நாடுகளை உலுக்கி வரும் வெப்ப அலைக்கு மத்தியில் பிரத்தானியாவில் நீர் விநியோகிக்கும் சில நிறுவனங்கள் கழிவு நீரை மக்கள் குளிக்க பயன்படுத்தும் நீர் நிரம்பிய இடங்களில் வெளியேற்றியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் சில  நீர்நிலைகளில் 2,856 மணிநேர கழிவுநீர் வெளியேற்றப்பட்டுள்ளதாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 99 மணிநேர கழிவுநீர், குளிப்பதற்காக ஒதுக்கப்பட்ட பகுதிகளைப் பாதித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதிகபட்ச கழிவுநீர் வெளியேற்றத்திற்கு தேம்ஸ் வாட்டர் நிறுவனமே காரணமாக இருந்ததாகவும், அந்நிறுவனம் 377 மணிநேரம் கழிவுகளை வெளியேற்றியதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதே […]

ஐரோப்பா

பின்லாந்தில் 150 ஆண்டுகால பழமையான தொலைபேசி சேவைக்கு முற்றுப்புள்ளி

  • June 30, 2026
  • 0 Comments

பின்லாந்து கிட்டத்தட்ட 150 ஆண்டுகளுக்குப் பிறகு அனலாக் (analogue) தரைவழித் தொலைபேசி அழைப்புகளுக்கு இன்று முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இணைய சேவைகள் மற்றும் குரல் அழைப்புகள் இரண்டையும் கையாளக்கூடிய ஃபைபர் ஆப்டிக் கேபிளை உலகெங்கிலும் உள்ள நாடுகள் நிறுவி வருவதால், பின்லாந்தும் புதிய  டிஜிட்டல் மாற்றத்தை கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளது. பின்லாந்தின் நிலையான தொலைபேசி வலையமைப்பு 1880-களில் செயல்படத் தொடங்கியது. எஸ்டோனியா, நெதர்லாந்து, நோர்வே மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் இணைய சேவைகள் மற்றும் குரல் அழைப்புகள் இரண்டையும் கையாளக்கூடிய […]

உலகம்

அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கும் சட்டத்தை மறுசீரமைக்க எதிர்ப்பு

  • June 30, 2026
  • 0 Comments

அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு இயற்கையாகவே குடியுரிமை வழங்கப்படும் அரசியலமைப்பின் 14 ஆவது பிரிவை மறுசீரமைக்கும் ட்ரம்ப் நிர்வாகத்தின் முயற்சிக்கு எதிராக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தொடர்புடைய வழக்கு இன்று தலைமை நீதிபதி ஜோன் ரொபர்ட்ஸ் (John Roberts) தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது 6-3 என்ற பெரும்பான்மையுடன் ட்ரம்பின் திட்டம் நிராகரிக்கப்பட்டது. தலைமை நீதிபதி அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகள் அமெரிக்காவின் “அதிகார வரம்பிற்கு உட்பட்டவர்கள்” என்றும், பதினான்காவது திருத்தத்தின் கீழ் பிறப்பிலேயே குடிமக்கள் என்றும் உறுதிப்படுத்தினார். […]

2030-ஆம் ஆண்டிற்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீதத்தை இராணுவத்திற்காகச் செலவிட வேண்டும் என்ற நேட்டோ அமைப்பின் இலக்கை எட்ட முடியாமல் போவது பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

நேட்டோவின் இலக்கை எட்டுமா பிரித்தானியா?

  • June 30, 2026
  • 0 Comments

பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ள புதிய பாதுகாப்பு முதலீட்டுத் திட்டம் Defence Investment Plan (DIP) , பனிப்போருக்குப் பிந்தைய காலக்கட்டத்தில் மேற்கொள்ளப்படும் மிகப்பெரிய நிதி ஒதுக்கீடாக பாதுகாப்புத்துறை நிபுணர்களால் கருதப்படுகின்றது. இந்தத் திட்டத்தின் கீழ் அணுசக்தித் தடுப்பு முறைகள், நவீன போர் விமானங்கள் மற்றும் ஆளில்லா ட்ரோன் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றுக்காக சுமார் 270 பில்லியன் பவுண்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உக்ரைன் போரின் படிப்பினைகளைக் கொண்டு தன்னியக்க பாதுகாப்பு அமைப்புகளை மேம்படுத்த முன்னுரிமை வழங்கப்படவுள்ளது. இருப்பினும், 2030-ஆம் ஆண்டிற்குள் […]