திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 52 வயதுடைய நபர் ஒருவரின் உடலிலிருந்து, மிக நீளமும் அதிக எடையும் கொண்ட சிறுநீரகக் கல்லைச் சத்திர சிகிச்சை மூலம் அகற்றி வைத்தியர்கள் சாதனை படைத்துள்ளனர். இலங்கை செய்தி

3.1 கிலோ எடையுள்ள சிறுநீரகக் கல் அகற்றம்: திருகோணமலை வைத்தியசாலை வைத்தியர்கள் உலக சாதனை

  • August 14, 2026
  • 0 Comments

திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 52 வயதுடைய நபர் ஒருவரின் உடலிலிருந்து, மிக நீளமும் அதிக எடையும் கொண்ட சிறுநீரகக் கல்லைச் சத்திர சிகிச்சை மூலம் அகற்றி வைத்தியர்கள் சாதனை படைத்துள்ளனர். சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் பிரகலாதன் பாலகிருஷ்ணன் (Pragalathan Balakrishnan) தலைமையில் இன்று (14) வெள்ளிக்கிழமை இச்சத்திர சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. உலக சுகாதார அமைப்பின் (WHO) தரவுகளின்படி, கடந்த 2003ஆம் ஆண்டு பிரேசில் நாட்டில் 1.9 கிலோகிராம் எடையுள்ள […]

ஐரோப்பா

பிரான்ஸில் சமூக ஊடகத் தடை கட்டுப்பாடு – நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

  • August 14, 2026
  • 0 Comments

பிரான்ஸில் 15 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடைசெய்யும் சட்டமூலத்திற்கு உச்சநீதிமன்றம் இன்று தடை விதித்துள்ளது. குறித்த சட்டமூலமானது கருத்து சுதந்திரத்தை பாதிப்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 15  வயதுக்குட்பட்ட சிறார்கள் சில இணையச் சேவைகளைப் பயன்படுத்துவதைத் தடை செய்வதன் மூலம், வயது வந்தவர்கள் உட்பட ஒவ்வொருவரும் அவற்றை அணுகுவதற்கு முன்பு தங்கள் வயதை நிரூபிக்க வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. ஆனால் அத்தகைய சான்று வழங்கப்பட வேண்டிய நிபந்தனைகளையும் வரம்புகளையும் குறிப்பிடத் தவறியுள்ளதாகவும், இதன்மூலம்  சட்டப் பாதுகாப்புகளை […]

அரசாங்க பாடசாலைகளுக்கு விநியோகிக்க வேண்டிய 19,892 பாடப்புத்தகங்களை, உரிய விநியோக நிலையங்களில் ஒப்படைக்காமல், பழைய காகிதங்களை அரைக்கும்தொழிற்சாலைக்கு விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை செய்தி

மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள் காகித ஆலைக்கு விற்பனை: இருவர் கைது

  • August 14, 2026
  • 0 Comments

அரசாங்க பாடசாலைகளுக்கு விநியோகிக்க வேண்டிய 19,892 பாடப்புத்தகங்களை, உரிய விநியோக நிலையங்களில் ஒப்படைக்காமல், பழைய காகிதங்களை அரைக்கும்தொழிற்சாலைக்கு விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் 8 லட்சம் ரூபாய் பெறுமதியான இப்புத்தகங்கள், வெறும் 47 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட தரம் 01 (தமிழ் மொழி) பாடப்புத்தகங்கள் மற்றும் பயிற்சிப் புத்தகங்கள், கிழக்கு மாகாணத்திலுள்ள 12 விநியோக நிலையங்களுக்கு விநியோகிப்பதற்காகத் திட்டமிடப்பட்டிருந்தன. இதற்காக, கடந்த மே […]

உலகம்

ஈரானைப் பொருளாதார ரீதியாகத் தனிமைப்படுத்த திட்டம் – அமெரிக்க கருவூலச் செயலாளர் அறிவிப்பு

  • August 14, 2026
  • 0 Comments

உலகம் இதுவரை கண்டிராத வகையில்” ஈரானைப் பொருளாதார ரீதியாகத் தனிமைப்படுத்துவோம் என்று அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட், தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “இது, உலகம் இதுவரை கண்டிராத வகையில், பொருளாதார ரீதியான தனிமைப்படுத்தலின் ஒரு கலவையாக இருக்கும் என்றும், ஹோர்முஸ் ஜலசந்தியில் தொடரும் முற்றுகை, ஈரானிய துறைமுகங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் எதுவும் செல்வதைத் தடுக்கும்” என்றும் குறிப்பிட்டுள்ளார். அடுத்த வாரம் புதிய நடவடிக்கைகள் தொடர்பான கூடுதல் அறிவிப்புகள் வெளியாகும் என்றும் […]

"இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (MoU) அதன் முழுமையான நோக்கம் மாறாமல் நடைமுறைப்படுத்துவதே ஒரே வழி" உலகம் செய்தி

‘போர் நிறுத்தம்’:அமெரிக்காவிடம் ஈரான் விடுத்துள்ள அவசர கோரிக்கை

  • August 14, 2026
  • 0 Comments

“இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (MoU) அதன் முழுமையான நோக்கம் மாறாமல் நடைமுறைப்படுத்துவதே ஒரே வழி” என்று பாகிஸ்தான் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான இஷாக் தார் (Ishaq Dar), அமெரிக்க தூதரக அதிகாரி (Chargé d’Affaires) நடாலி பேக்கரிடம் (Natalie Baker) தெரிவித்துள்ளார். கடந்த ஜூன் மாதம் கையெழுத்தான இந்த முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தம் வரும் ஞாயிற்றுக்கிழமையுடன் காலாவதியாகவுள்ள நிலையில், இஸ்லாமாபாத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. இது குறித்து எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர் இஷாக் […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் மக்களின் கவனம் பெற்ற குப்பைக் கூடை மனிதர்

  • August 14, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் கிளாக்டன் இடைத்தேர்தலில் நைஜல் ஃபாரேஜ்  Nigel Farage  வெற்றிப் பெற்றுள்ளபோதிலும், குப்பை தொட்டியுடன் தோற்றமளிக்கும் மனிதர் பெரும்பாலனவர்களின் மனங்களை வென்று பேசுப்பொருளாகியுள்ளார். நைஜல் ஃபாரேஜ்  Nigel Farage நன்கொடை தொடர்பான சர்ச்சையில் சிக்கிய பின் தனது நாடாளுமன்ற பதவியை இராஜினாமா செய்து வெளியேறினார். இதனைத் தொடர்ந்து கிளாக்டன்  இடைத்தேர்தல் நடைபெற்று நிறைவுற்றுள்ளது. இதில் வாக்கு எண்ணிக்கை மற்றும் வெற்றி தொடர்பில் அறிவிக்கும்போது ஃபாரேஜ்  நிகழ்விடத்திற்கு சமூகமளிக்கவில்லை. தான் கலந்துகொண்டால் போராட்டம்  மற்றும் வன்முறைகள் இடம்பெறலாம் என்ற அச்சத்தால் அவர் […]

இலங்கை செய்தி

உணவுப் பாதுகாப்பு குறித்து ஜனாதிபதி தீவிர மீளாய்வு

  • August 14, 2026
  • 0 Comments

இலங்கை போன்ற சிறிய சந்தை வாய்ப்பு உள்ள நாட்டில், பொருட்கள் மற்றும் சேவைகளின் கட்டுப்பாடு, வெறும் போட்டித்தன்மையின் அடிப்படையில் மாத்திரம் இடம்பெறும் என எதிர்பார்க்க முடியாது என்றும், அதற்காக அரசாங்கத்திடம் வலுவான விலைக்கட்டுப்பாட்டுப் பொறிமுறை இருக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். அதற்காக லங்கா சதொச மற்றும் கூட்டுறவு முறைமையை மேலும் வலுப்படுத்தி அதன் முக்கிய பங்காளியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார். ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (14) நடைபெற்ற வர்த்தக, […]

யாழ்ப்பாணம் , செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 554 ஆக உயர்ந்துள்ளது. இலங்கை செய்தி

செம்மணியில் இதுவரை 554 எலும்புக் கூடுகள் அடையாளம்: 547 மீட்பு

  • August 14, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் , செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 554 ஆக உயர்ந்துள்ளது. செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்று 52 வது நாளாக நடைபெற்றது. இதன்போது மேலும் 03 மனித எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அத்துடன் அடையாளம் காணப்பட்ட 07 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. செம்மணி புதைகுழி அகழ்வுப் பணிகள் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்களாக இதுவரை மொத்தம் 106 […]

படையினரின் ஆக்கிரமிப்பில் உள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி, வலிகாமம் வடக்கு மக்கள் இன்று தொடர்ந்து 17வது வாரமாக போராட்டத்தை முன்னெடுத்தனர். இலங்கை செய்தி

‘காணி விடுவிப்பு’ – மயிலிட்டி மக்கள் 17வது வாரமாக போராட்டம்

  • August 14, 2026
  • 0 Comments

படையினரின் ஆக்கிரமிப்பில் உள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி, வலிகாமம் வடக்கு மக்கள் இன்று தொடர்ந்து 17வது வாரமாக போராட்டத்தை முன்னெடுத்தனர். மயிலிட்டி மீள்குடியேற்ற அபிவிருத்திக் குழுவின் சார்பில் இந்தப் போராட்டம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. மயிலிட்டியில் உள்ள இராணுவத்தின் தளபதிகளுக்கான ஓய்வு மாளிகை முன்பாக இந்தப் போராட்டம் இன்று காலை முதல் முன்னெடுக்கப்பட்டது. இந்தப் போராட்டத்தில் வலி.வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தினால், கடந்த 36 ஆண்டுகளுக்கு மேலாக தங்களின் நிலங்களை இழந்துள்ள மக்கள் […]

ஐரோப்பா

பிரான்ஸில் பற்றி எரியும் காட்டுத்தீ – 1100 ஹெக்டேர் நிலப்பரப்பு நாசம்

  • August 14, 2026
  • 0 Comments

தென்மேற்கு பிரான்ஸில் ஏற்பட்ட காட்டுத்தீ 1,100 ஹெக்டேர் நிலத்தை அழித்துள்ளது. அப்பகுதியிலிருந்து சுமார் 525 பேரை அதிகாரிகள் வெளியேற்றியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், தீயைக் கட்டுப்படுத்த சுமார் 500 தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. பிரான்சின் 75 பிராந்தியங்களுக்கு தீ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கிடையில், மேற்கு ஜெர்மனியிலும் காட்டுத்தீ காரணமாக 2,000-க்கும் மேற்பட்ட மக்களை அவர்களது வீடுகளிலிருந்து வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.