3.1 கிலோ எடையுள்ள சிறுநீரகக் கல் அகற்றம்: திருகோணமலை வைத்தியசாலை வைத்தியர்கள் உலக சாதனை
திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 52 வயதுடைய நபர் ஒருவரின் உடலிலிருந்து, மிக நீளமும் அதிக எடையும் கொண்ட சிறுநீரகக் கல்லைச் சத்திர சிகிச்சை மூலம் அகற்றி வைத்தியர்கள் சாதனை படைத்துள்ளனர். சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் பிரகலாதன் பாலகிருஷ்ணன் (Pragalathan Balakrishnan) தலைமையில் இன்று (14) வெள்ளிக்கிழமை இச்சத்திர சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. உலக சுகாதார அமைப்பின் (WHO) தரவுகளின்படி, கடந்த 2003ஆம் ஆண்டு பிரேசில் நாட்டில் 1.9 கிலோகிராம் எடையுள்ள […]













