உலகம்

அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கும் சட்டத்தை மறுசீரமைக்க எதிர்ப்பு

அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு இயற்கையாகவே குடியுரிமை வழங்கப்படும் அரசியலமைப்பின் 14 ஆவது பிரிவை மறுசீரமைக்கும் ட்ரம்ப் நிர்வாகத்தின் முயற்சிக்கு எதிராக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தொடர்புடைய வழக்கு இன்று தலைமை நீதிபதி ஜோன் ரொபர்ட்ஸ் (John Roberts) தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது 6-3 என்ற பெரும்பான்மையுடன் ட்ரம்பின் திட்டம் நிராகரிக்கப்பட்டது.

தலைமை நீதிபதி அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகள் அமெரிக்காவின் “அதிகார வரம்பிற்கு உட்பட்டவர்கள்” என்றும், பதினான்காவது திருத்தத்தின் கீழ் பிறப்பிலேயே குடிமக்கள் என்றும் உறுதிப்படுத்தினார்.

அத்துடன் 1898 ஆம் ஆண்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க ‘யுனைடெட் ஸ்டேட்ஸ் எதிர் வோங் கிம் ஆர்க்’ (United States v. Wong Kim Ark)  வழக்கை சுட்டிக்காட்டிய அவர், நாட்டில் பிறக்கும் ஏறக்குறைய அனைவருக்கும் குடியுரிமையை வழங்குவதை உறுதிப்படுத்தினார்.

உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு ட்ரம்பின் புலம்பெயர் கொள்கைக்கு  ஒரு பின்னடைவாக பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்