குடியுரிமை மறுசீரமைப்பு : காங்கிரஸிடம் உதவி கோரும் ட்ரம்ப்
அமெரிக்காவில் சட்டவிரோதமாகவோ அல்லது தற்காலிக விசாவிலோ வசிக்கும் பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைகள் அமெரிக்கக் குடிமக்கள் அல்ல என்று ட்ரம்ப் நிர்வாகம் பிறப்பித்திருந்த உத்தரவு எதிராக நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
இந்நிலையில் இந்த சட்டத்தை மீள நடைமுறைப்படுத்த காங்கிரஸின் பங்களிப்பை அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் தனது ட்ருத் சோசியல் தளத்தில் அவர் இட்டுள்ள பதிவொன்றில், “நீண்ட மற்றும் சிக்கலான அரசியலமைப்புத் திருத்தம் எதுவும் தேவையில்லை.
நமது நாட்டிற்குச் செலவுமிக்கதும் நியாயமற்றதுமான பிறப்புரிமைக் குடியுரிமையை முடிவுக்குக் கொண்டுவர காங்கிரஸ் இன்றே பணியாற்றத் தொடங்க வேண்டும். அவர்களுக்கு எனது முழுமையான மற்றும் மொத்த ஆதரவு உண்டு” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்தி
அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கும் சட்டத்தை மறுசீரமைக்க எதிர்ப்பு




