கடும் வெப்ப அலையை தொடர்ந்து கொட்டித் தீர்த்த மழை – பிரான்ஸில் இருவர் பலி
நீண்டகால வெப்ப அலையைத் தொடர்ந்து, பிரான்சில் நேற்றிரவு கடும் மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.
இதில் இருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
செயின்ட்-விக்டர்னியனில் ( Saint-Victurnien) மரம் ஒன்று முறிந்து விழுந்ததில், பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், டோலோமியூவில் (Dolomieu) மின்னல் தாக்கியதில் மற்றொருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி திடீர் மழை காரணமாக 53,000 வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே தென்கிழக்கு பிரான்சில் முன்னர் பாதிக்கப்பட்ட அனைத்து மாகாணங்களிலும் இடியுடன் கூடிய மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை மெட்டியோ-பிரான்ஸ் நீக்கியுள்ளது.




