2047 இல் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக மாறும்: பிரதமர் மோடி
இந்தியா சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவுபெறும் 2047 ஆம் ஆண்டில் வளர்ச்சி அடைந்த நாடாக இந்தியா மாறும் என பிரதமர் மோடி தெரிவித்தார். சுதந்திர தினத்தையொட்டி, டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது பிரதமர் மோடி கூறியவை வருமாறு , “சுதந்திர போராட்ட வீரர்கள், தியாகிகளை நாம் நினைவு கூரவேண்டும்.வந்தே மாதரம் ஒவ்வொரு இந்தியர்களின் இதயத்திலும் ஒலிக்கிறது. ஒவ்வொரு வீட்டிலும் தேசியக்கொடி பறக்கிறது; இன்று டெல்லி செங்கோட்டையில் வந்தே […]













