இலங்கை செய்தி

மீன் பிடிக்கச் சென்றவர் சடலமாக மீட்பு

திருகோணமலை மொரவெவ குளத்துக்கு மீன்பிடிக்கச் சென்றவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்து இன்று வெள்ளிக்கிழமை (17) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

திருகோணமலை மொரவெவ குளத்துக்கு மீன்பிடிக்கச் சென்றவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்து இன்று வெள்ளிக்கிழமை (17) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வியாழக்கிழமை 16ஆம் திகதி காலை 10.00 மணிக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற மீனவர் வீடு திரும்பாத நிலையில் இன்று (17) வெள்ளிக்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் திருகோணமலை நாமல்வத்தை பகுதியில் வசித்து வரும் முகம்மது உசன் ஜபருள்ளா கான் (63வயது) எனவும் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலத்தை திடீர் மரண விசாரணை அதிகாரி சுபைர் ஷாபி நேரில் சென்று பார்வையிட்டு விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை