இலங்கை

வடக்கு மற்றும் கிழக்கில் மாத்திரம் மாகாணசபை தேர்தலை நடத்த திட்டம்?

  • July 5, 2026
  • 0 Comments

அடுத்த வருடத்தின் முதல் 06 மாதங்களுக்குள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாத்திரம் மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் தீரமானித்துள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். இதன்மூலம் அந்த பிராந்தியங்களுக்கு மாத்திரம் நீதிமன்ற சவால்களுக்கு அப்பாற்பட்ட வகையில் தனி காணி மற்றும் பொலிஸ் அதிகார சட்டங்களை உருவாக்க அராங்கம் முயல்வதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். கொழும்பில் அமைந்துள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைமைப் காரியாலயத்தில்  நேற்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் […]

2029 ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் விரும்பும் வேட்பாளரையே நாம் களமிறக்குவோம். நாமல் ராஜபக்ஷவை மக்கள் கோரினால், அவர் நிச்சயம் போட்டியிடுவார். மக்கள் கோராவிட்டால் அவர் போட்டியிட மாட்டார்” என்றும் மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டார். செய்தி

ஓய்வுபெறமாட்டேன் : அரசியல் பயணம் தொடரும் – மஹிந்த சூளுரை

  • July 5, 2026
  • 0 Comments

“எனது அரசியல் பயணம் தொடரும். நாம் மக்கள் பக்கம் நிற்பதாலேயே இலக்கு வைக்கப்படுகின்றோம். மக்கள் விரும்பினால் 2029 ஜனாதிபதித் தேர்தலில் நாமல் ராஜபக்சவைக் களமிறக்குவோம்.” இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். கண்டிக்கு வருகை தந்திருந்த மஹிந்த ராஜபக்ச , ஶ்ரீ தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்டார். அதன்பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை கவலையளிக்கின்றது. இது பற்றி என்னிடம் […]

2026 உலகக் கிண்ணத் தொடரில் கிலியன் எம்பாப்பே (Kylian Mbappe) தனது ஏழாவது கோலை அடித்து பிரான்ஸ் அணிக்கு வெற்றியைப் தேடித்தந்துள்ளார். செய்தி விளையாட்டு

எம்பாப்பே அசத்தல் ஆட்டம் – பராகுவே அணியை வீழ்த்தியது பிரான்ஸ்

  • July 5, 2026
  • 0 Comments

2026 உலகக் கிண்ணத் தொடரில் கிலியன் எம்பாப்பே (Kylian Mbappe) தனது ஏழாவது கோலை அடித்து பிரான்ஸ் அணிக்கு வெற்றியைப் தேடித்தந்துள்ளார். இதன் மூலம் பராகுவே அணியை வீழ்த்திய பிரான்ஸ் அணி (1-0) , காலிறுதியில் மொராக்கோவுடன் மோதுவதை உறுதி செய்துள்ளது. பிலடெல்பியா மைதானத்தில் (Philadelphia Stadium) இரு அணிகளுக்கும் இடையில் கடுமையான சவால்களுக்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டியின் இரண்டாம் பாதியில், எம்பாப்பே அடித்த பெனால்டி (Penalty) கோல் போட்டியின் முடிவை தீர்மானித்தது. இந்த கோலின் மூலம், […]

Morocco’s Azzedine Ounahi celebrates scoring their first goal உலகம் செய்தி விளையாட்டு

முடிந்தது கனடாவின் பயணம் – அடுத்த சுற்றுக்கு முன்னேறியது மொராக்கோ

  • July 5, 2026
  • 0 Comments

உலகக் கிண்ண கால்பந்து 16 (Round of 16) சுற்றில் கனடாவுக்கு எதிரான போட்டியில் மொராக்கோ அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. இதன் மூலம் உலகக் கிண்ண வரலாற்றில் ஒன்றுக்கு மேற்பட்ட முறை காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்ற முதல் ஆப்பிரிக்க நாடு என்ற பெருமையை ‘அட்லஸ் லயன்ஸ்’ (The Atlas Lions) என அழைக்கப்படும் மொராக்கோ அணி பெற்றுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணத்தில் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் […]

ஐரோப்பா

ஸ்பெயினை அச்சுறுத்தும் காட்டுத்தீ – மக்களுக்கு விசேட அறிவுறுத்தல்

  • July 4, 2026
  • 0 Comments

ஸ்பெயினின் சுற்றுலாத் தலமான கோஸ்டா பிராவா (Costa Brava) அருகே காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. லா பிஸ்பால் டி’எம்போர்டா  (  Bishop of Emporda) பகுதியில் தொடங்கிய இந்தத் தீ, பலத்த காற்றினால் வேகமாகப் பரவி வருவதாகவும் அறிவிக்கப்டப்டள்ளது. இந்நிலையில் இந்த நகரத்தை சுற்றியுள்ள  10 நகராட்சிகளில் வசிப்பவர்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அத்துடுன் சுமார் 200-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மற்றும் 11 வான்வழி மீட்புப் படையினர் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில்  ஈடுபட்டுள்ளனர். […]

ஐரோப்பா

ஜேர்மனியில் AfD கட்சிக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம் – பொலிஸார் குவிப்பு

  • July 4, 2026
  • 0 Comments

ஜேர்மனியின் தீவிர வலதுசாரி AfD கட்சியின் மாநாடு இன்று இடம்பெற்ற நிலையில் அக் கட்சிக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.  சுமார் 15000 பேர் இதில் கலந்துகொண்டிருக்கலாம் என காவல்துறை மதிப்பிட்டுள்ளது. அவர்கள் அக்கட்சியின் மாநாட்டிற்கு செல்லும் முக்கிய சாலைகளையும் இடைமறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு ஜேர்மனி முழுவதும் பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் கலவரத் தடுப்பு பொலிஸார்  குவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பிராந்தியத் தேர்தல்களில் […]

உலகம்

குடியேறிகளை வரவேற்றுப் பாதுகாக்குமாறு போப் லியோ வேண்டுகோள்!

  • July 4, 2026
  • 0 Comments

குடியேறிகளை வரவேற்றுப் பாதுகாக்குமாறு அமெரிக்கர்களிடம் போப் லியோ வேண்டுகோள் விடுத்துள்ளார். அமெரிக்காவின் 250ஆவது சுதந்திரத் தினத்தை முன்னிட்டு தனது தாய் நாட்டிற்கு அவர் எழுதிய கடிதத்தில் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். ட்ரம்ப் நிர்வாகத்தின் குடியேற்றக் கொள்கையை மனிதாபிமானமற்றது என விமர்சித்ததை தொடர்ந்து ட்ரம்பின் கோபத்திற்கு ஆழான லியோ தற்போதும் அதே கோரிக்கையை முன்வைத்துள்ளார். உலகம் “மேலும் மனிதாபிமானத்துடன்” செயல்பட வேண்டும் என்றும், தப்பி ஓடுபவர்களுக்கு உதவ வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அதேநேரம் மத்திய தரைக் கடலை கடந்து […]

ஐரோப்பா

பிரெக்ஸிட்டால் நபர் ஒருக்கு 3200 பவுண்ட்ஸ் இழப்பு : மீண்டும் சேருவதே ஒரே வழி

  • July 4, 2026
  • 0 Comments

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் மீண்டும் இணைய வேண்டும் என முன்னாள் தொழிலாளர் கட்சித் தலைவர் நீல் கின்னாக் (Neil Kinnock),   தெரிவித்துள்ளார். அதுவே நாட்டிற்கு “செய்ய வேண்டிய ஒரே தேசபக்தி செயல்” என்றும் அவர் கூறியுள்ளார். பிரெக்ஸிட் ஒரு “தவிர்க்கக்கூடிய பேரழிவு” என்று விவரித்த அவர், விரிவான பொருளாதார, அரசியல், சமூக மற்றும் கலாச்சார சேதங்களை ஏற்படுத்தியுள்ளது என்றும், இதில் நபர் ஒருவருக்கு ஆண்டுக்கு சுமார் £3,200 பவுண்ட்ஸ் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ’சுட்டிக்காட்டினார். சுங்க ஒன்றியம், ஒற்றைச் […]

உலகம் செய்தி

நீதிகோரும் போராட்டத்தை ஈரான் கைவிடாது

  • July 4, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக நீதி கோரும் போராட்டத்தை ஈரான் தொடர்ந்து முன்னெடுக்கும் என்று அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் Abbas Araghchi தெரிவித்துள்ளார். மறைந்த ஈரானின் உச்ச தலைவருக்குஅஞ்சலி செலுத்த பல்வேறு உலக நாடுகளின் பிரதிநிதிகள் வருகை தந்தது ஈரானிய மக்களின் பெருமையையும் வலிமையையும் உலகுக்கு பறைசாற்றுவதாகவும் அவர் கூறியுள்ளார். ” நீதி பெறுவது என்பது ஒரு நிலையான லட்சியமாக இருக்கும். மேலும், சர்வதேச தலைவர்களின் வருகையானது ஈரானின் அரசியல் அந்தஸ்தை உறுதிப்படுத்தியுள்ளது.” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை

மோதர பகுதியில் இரு கைத் துப்பாக்கிகள் மீட்பு

  • July 4, 2026
  • 0 Comments

கொழும்பு – மோதர பகுதியில் இருந்து இரண்டு கைத் துப்பாக்கிகள் இன்று  மீட்கப்பட்டுள்ளன. வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள மோதர நிபுணா என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியின் சகோதரரான  சதுரையாவிடம் நடத்தப்பட்ட விசாரணையின் இந்த துப்பாகிகள் பற்றி தகவல் கிடைத்துள்ளது. இதற்கமைய மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் துப்பாக்கியை மீட்டுள்ளனர். இந்த சந்தேக நபர் சமீபத்தில் துபாயிலிருந்து நாட்டிற்கு நாடு கடத்தப்பட்டார். தற்போது 90 நாட்கள் விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.