குடியேறிகளை வரவேற்றுப் பாதுகாக்குமாறு போப் லியோ வேண்டுகோள்!
குடியேறிகளை வரவேற்றுப் பாதுகாக்குமாறு அமெரிக்கர்களிடம் போப் லியோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அமெரிக்காவின் 250ஆவது சுதந்திரத் தினத்தை முன்னிட்டு தனது தாய் நாட்டிற்கு அவர் எழுதிய கடிதத்தில் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
ட்ரம்ப் நிர்வாகத்தின் குடியேற்றக் கொள்கையை மனிதாபிமானமற்றது என விமர்சித்ததை தொடர்ந்து ட்ரம்பின் கோபத்திற்கு ஆழான லியோ தற்போதும் அதே கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
உலகம் “மேலும் மனிதாபிமானத்துடன்” செயல்பட வேண்டும் என்றும், தப்பி ஓடுபவர்களுக்கு உதவ வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
அதேநேரம் மத்திய தரைக் கடலை கடந்து லம்பேடுசாவிற்கு வருகை தரும் ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு உதவுமாறும் அவர் ஐரோப்பிய தலைவர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
உயிரைப் பாதுகாக்கும் கத்தோலிக்க விழுமியத்தில் “குடியேறிகளை வரவேற்பது, பாதுகாப்பது மற்றும் அவர்களுக்கு உதவுவதும்” அடங்கும் என்று லியோ கூறினார்.
“(குடியேறிகளை) கருணையுடனும் தாராள மனத்துடனும் வரவேற்பது என்பது ஒரு தர்மச் செயல் மட்டுமல்ல, ஒவ்வொரு மனிதனுக்கும் உரிய கண்ணியத்தை அங்கீகரிப்பதும் ஆகும்,” என்றும் லியோ மேலும் தெரிவித்துள்ளார்.





