இலங்கை செய்தி

கணவனை கொலைசெய்து சடலத்தை மலசலக்கூட குழிக்குள் வீசிய மனைவி: மன்னாரில் கொடூரம்!

  • May 5, 2026
  • 0 Comments

குடும்பத் தகராறு காரணமாக தனது கணவனைக் கொலை செய்து, உடலைத் துண்டு துண்டுகளாக வெட்டி மலசலகூடக் குழியில் வீசிய பெண்ணொருவர் மன்னார் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் நேற்று திங்கட்கிழமை மீட்கப்பட்டுள்ளது. மன்னார் மூர் வீதியில் வாடகை வீடு ஒன்றில் வசித்து வந்த தம்பதியினருக்கு இடையே கடந்த சனிக்கிழமை இரவு கடும் தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இதன்போது ஆத்திரமடைந்த மனைவி, தனது கணவனைத் தாக்கிக் கொலை செய்துள்ளார். பின்னர், நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை சடலத்தைத் துண்டு துண்டுகளாக […]

அரசியல் இலங்கை செய்தி

இலங்கை தமிழர்களுக்கு தவெக ஆதரவு தொடரவேண்டும்!

  • May 5, 2026
  • 0 Comments

தமிழக சட்டசபைத் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்துக்கும், அதன் தலைவர் விஜய் அவர்களுக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் சுமந்திரன் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், “தமிழ் நாட்டு சட்டசபைக்கான தேர்தலில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்துக்கும், அதன் தலைவர் விஜய்க்கும் எமது மனமார்ந்த வாழ்த்துக்கள். இலங்கைத் தமிழ் மக்களுக்கு தமிழ் நாட்டு மக்களதும், அரசினதும் ஆதரவு தொடர்ந்து இருக்க வேண்டும் என்று உரிமையோடு எதிர்பார்க்கின்றோம்.” […]

ஐரோப்பா

ஜெர்மனியில் மக்கள் கூட்டத்திற்குள் புகுந்த கார் – இருவர் பலி!

  • May 4, 2026
  • 0 Comments

ஜெர்மனியின் லீப்ஜிக் (Leipzig) நகரின் மையத்தில் மக்கள் கூட்டத்தின் மீது கார் புகுந்ததில் இருவர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் ஃபோக்ஸ்வேகன் எஸ்யூவி (Volkswagen SUV ) வாகனத்தை செலுத்திய ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் மக்களுக்கு  எந்த ஆபத்தும் இல்லை என்று பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும் சம்பவ இடத்திலிருந்து சரிபார்க்கப்படாத அறிக்கைகள், புகைப்படங்கள் அல்லது காணொளிகளைப் பகிர்வதைத் தவிர்க்குமாறு காவல்துறை பொதுமக்களைக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.    

இலங்கை

வெலிக்கடை சிறையில் தண்டனை அனுபவித்து வந்த கைதி உயிரிழப்பு!

  • May 4, 2026
  • 0 Comments

வெலிக்கடை சிறையில் போதைப்பொருள் குற்றச்சாட்டின் பேரில் தண்டனை அனுபவித்து வந்த கைதி ஒருவர், திடீரெ உயிரிழந்துள்ளார். பொரெல்லவைச் சேர்ந்த 40 வயதான ஆர். ஒஷாதா சஞ்சீவ என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார். அந்தக் கைதி சிறையிலிருந்து தப்பிச் சென்றதாகவும், பின்னர் அதிகாரிகளால்  மீண்டும் சிறைக்குக் கொண்டுவரப்பட்டதாகவும் கூறப்படுகிறது. சிறை அதிகாரிகள் அவரைக் கொடூரமாகத் தாக்கியதாக அந்தக் கைதியின் உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை சுமார் 10 பேரிடம் வாக்குமூலம் பதிவு […]

இலங்கை செய்தி

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வின் 07 ஆம் நாள் வெளியான புதிய தகவல்

  • May 4, 2026
  • 0 Comments

செம்மணி மனித புதைகுழியில் இருந்து குழந்தையின் என்பு கூட்டு தொகுதி உள்ளடங்கலாக 04 என்பு கூட்டு தொகுதி அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 07 ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்று (04) நடைபெற்றது. இதன்போது , ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்பு கூட்டு தொகுதியில் குழந்தை ஒன்றின் என்பு கூட்டு தொகுதி உட்பட 4 என்பு கூட்டு அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இதுவரையான காலப்பகுதியில் செம்மணி மனித […]

உலகம்

ஐக்கிய அரபு அமீரகம் மீது ஏவுகணை தாக்குதல் !

  • May 4, 2026
  • 0 Comments

ஈரானின் 03 ஏவுகணைகளை வெற்றிகரமாக இடைமறித்ததாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது. இந்தத் தொடர் திடீர் தாக்குதல்கள் காரணமாக, துபாய் மற்றும் ஷார்ஜா விமான நிலையங்களுக்கு வரவிருந்த பல விமானங்கள் தாமதமாகியுள்ளதாகவும், மேலும் பல விமானங்கள் மாற்று இடங்களுக்குத் திருப்பி விடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிராந்தியப் பாதுகாப்பு குறித்த நிச்சயமற்ற தன்மையால், ஐக்கிய அரபு அமீரகத்தின் பாதுகாப்புப் படைகள் உயர் எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம்

அரசியல் அமைப்பில் மாற்றத்தை கொண்டுவர தீர்மானம் – அணித்திரண்ட ஜப்பான் மக்கள்!

  • May 4, 2026
  • 0 Comments

ஜப்பானின் சமாதானக் கொள்கை சார்ந்த அரசியலமைப்பைத் திருத்துவதற்கான பிரதமர் சனே டகாயிச்சியின் முயற்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஆயிரக்கணக்கான மக்கள் டோக்கியோவில் ஒன்றுக்கூடியுள்ளனர். 1947 அரசியலமைப்பின் 9வது பிரிவில் செய்யப்படும் மாற்றங்களை எதிர்த்தே மக்கள் ஒன்றுக்கூடி போராட்டம் நடத்தியுள்ளனர். குறித்த பிரிவானது போரைத் துறந்து, நாட்டின் இராணுவத் திறன்களைக் கட்டுப்படுத்துகிறது. இதில் தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாற்றங்களை செய்ய பிரதமர் சனே டகாயிச்சி நடவடிக்கை எடுத்துள்ளார். ஜப்பான் தற்காப்புப் படைகளை முறையாக அங்கீகரிக்கவும், சீனா மற்றும் வட […]

செய்தி தமிழ்நாடு

திமுக இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும் – ஸ்டாலின்

  • May 4, 2026
  • 0 Comments

“இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும் கட்சியாகச் செயல்பட்ட திமுக இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும்” என தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் இதனை பதிவிட்டுள்ளார். “மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள் என அவர் பதிவிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினோம். தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் உயர்த்தினோம். தேர்தல் களத்தில் எங்களது சாதனைகளைச் […]

செய்தி தமிழ்நாடு

தவெகவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் வாழ்த்து

  • May 4, 2026
  • 0 Comments

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தமிழக வெற்றிக் கழகத்திற்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். அவர் தனது ‘எக்ஸ்’ (X) சமூக தளத்தில் வெளியிட்ட பதிவில், கட்சித் தலைவர் விஜய்யை வாழ்த்தியுள்ளார். அந்த பதிவில் அவர் குறிப்பிடுகையில், “அன்புள்ள விஜய் அவர்களுக்கு, ஊழலற்ற அரசியல், சமூக நீதி, சமத்துவம் ஆகியவற்றை முன்னிறுத்தி தமிழ்நாட்டை முன்னணிக்குக் கொண்டு செல்லும் சிறந்த தலைவராக நீங்கள் உயர வளர வாழ்த்துகள். பிளவுகளை மறுக்கும் அரசியல் பண்பாட்டுடன், தமிழையும் தமிழரையும் கொண்டாடி, சென்னை நகரத்தை […]

உலகம் செய்தி

62 நாட்களுக்குள் லெபனானில் 2,696 பேர் பலி!

  • May 4, 2026
  • 0 Comments

இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 2026 மார்ச் 2 முதல் இதுவரையில் லெபனானில் 2,696 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 8,264 பேர் காயமடைந்துள்ளனர். லெபனான் சுகாதார அமைச்சு மேற்படி தகவலை வெளியிட்டுள்ளது. இஸ்ரேல், லெபனானுக்கிடையில் போர் நிறுத்தம் அமுலில் இருந்தாலும் இஸ்ரேல் தாக்குதல்களை நடத்திவருகின்றது. குறிப்பாக, தெற்கு லெபனானில் இஸ்ரேல் உக்கிர தாக்குதலை நடத்திவருகின்றது. லட்சக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர். அமைதி பேச்சுக்காக ஈரானில் முன்வைத்துள்ள 14 பரிந்துரைகளில், லெபனான்மீதான தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும் என்பது பிரதான விடயமாகும். அதேவேளை, காசாவிலும் […]