நேட்டோ மாநாடு நெருங்கும்வேளை உக்ரைன்மீது மிகப்பெரிய தாக்குதல்: 11 பேர் பலி
உக்ரைன் தலைநகர் கீவ்மீது ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் குறைந்தது 11 பேர் கொல்லப்பட்டுள்ளதாக நகரின் தலைமை ராணுவ நிர்வாகி தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதல்களில் 5 குழந்தைகள் உட்பட 46 பேர் காயமடைந்துள்ளதாகத் Timur Tkachenko தெரிவித்துள்ளார். மேலும், கீவ் நகரைச் சுற்றியுள்ள பிற பகுதிகளில் மேலும் 3 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அவசரகால அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். தலைநகரின் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இரண்டு மாவட்டங்களிலுள்ள […]













