வெளிநாட்டு அரசியல் நன்கொடைகள் மீதான விதிகளை கடுமையாக்கியது பிரித்தானியா
வெளிநாட்டு அரசியல் நன்கொடைகள் மீதான விதிகளை பிரித்தானிய அரசாங்கம் இன்று கடுமையாக்கியுள்ளது.
தேர்தல்களில் வெளிநாட்டுப் பணம் செல்வாக்கு செலுத்துவதைத் தடுக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
புதிய விதிகளுக்கு அமைய இனிமேல், அரசியல் வேட்பாளர்கள், வேட்பாளராவதற்கு முன்பு பெற்ற £2,230 பவுண்ட்ஸுக்கு மேற்பட்ட நன்கொடைகளை அறிவிக்க வேண்டும் என்றும், வேட்பாளராவதற்கு முந்தைய நிதி ஆதாரங்கள் அனைத்தும் முறையான மூலங்களிலிருந்து வந்தவை என்பதை நிரூபிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவிற்கு ஆதரவான உரைகளையும் அறிக்கைகளையும் வெளியிடுவதற்காக இலஞ்சம் பெற்றக் குற்றச்சாட்டில் , ‘ரிஃபார்ம் யுகே’ கட்சியைச் சேர்ந்த ஒரு உறுப்பினர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், வெளிநாட்டு நிதித் தலையீடு குறித்து மறுஆய்வு செய்யவும் அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன் ரஷ்யா, சீனா மற்றும் ஈரான் உள்ளிட்ட வெளிநாடுகள், நாட்டின் ஜனநாயகத்தில் செல்வாக்கு செலுத்தவும் அதனைச் சீர்குலைக்கவும் முயற்சிப்பதாக எழுந்துள்ள கவலைகள் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.




