இலங்கை

சிறைச்சாலை வன்முறை – வெளிப்படையான விசாரணைக்கு சஜித் அழைப்பு

  • July 6, 2026
  • 0 Comments

நீர்கொழும்பு சிறையில் நிகழ்ந்த கொடூரமான வன்முறை குறித்து சுதந்திரமான மற்றும் வெளிப்படையான விசாரணைக்கு அழைப்பு விடுத்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, உயிரிழப்புகளுக்கு அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், கலவரத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகளும் காயங்களும் சிறை நிர்வாகத்தில் ஏற்பட்ட சீர்குலைவையும் நிறுவனத் திறமையின்மையையு காரணமாக குறிப்பிட்டுள்ளார். இந்தச் சம்பவத்திற்கு தற்போதைய அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறிய அவர், ஜனாதிபதி எதிர்க்கட்சியில் இருந்தபோது, ​​சிறைகளுக்குள் நிகழும் மரணங்களுக்கு அரசாங்கங்கள் பொறுப்பேற்க வேண்டும் […]

“வரி சக்தி 2026” எனும் தேசிய வரி வாரத்தின் ஆரம்ப நிகழ்வு, சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவின் தலைமையில் இன்று (06) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இலங்கை செய்தி

இலங்கையில் தேசிய வரி வாரம் ஆரம்பம்

  • July 6, 2026
  • 0 Comments

“வரி சக்தி 2026” எனும் தேசிய வரி வாரத்தின் ஆரம்ப நிகழ்வு, சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவின் தலைமையில் இன்று (06) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. வரி விதிப்பு தொடர்பாக பொதுமக்களிடையே உள்ள எதிர்மறையான எண்ணத்தை நேர்மறையான எண்ணமாக மாற்றி, நாட்டில் சுயமாக வரி செலுத்தும் கலாசாரத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு செயல்படுத்தப்படும் “வரி சக்தி 2026” என்பது ஆண்டு முழுவதும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் ஒரு வேலைத்திட்டமாகும். இதன் ஆரம்பத்தைக் குறிக்கும் விசேட தேசிய வரி வாரம் […]

போர்நிறுத்தம் பிரகடனப்படுத்தப்பட்ட போதிலும்,காசா பகுதியில் இஸ்ரேலின் தாக்குதல்களால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. உலகம் செய்தி

போர் நிறுத்த ஒப்பந்தத்தை அப்பட்டமாக மீறும் இஸ்ரேல்

  • July 6, 2026
  • 0 Comments

போர்நிறுத்தம் பிரகடனப்படுத்தப்பட்ட போதிலும்,காசா பகுதியில் இஸ்ரேலின் தாக்குதல்களால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், இஸ்ரேல் நடத்திய புதிய வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது ஆறு பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தெற்கு காசாவின் கான் யூனிஸ் (Khan Younis) பகுதியில் உள்ள அல்-ரஷித் வீதியில் பயணித்த வாகனம் ஒன்றின் மீது இஸ்ரேல் நடத்திய ட்ரோன் (Dis drone) தாக்குதலில் குறைந்தது இரண்டு பேர் கொல்லப்பட்டனர். இதுதவிர, கான் யூனிஸுக்கு அருகிலுள்ள அல்-மவாசி […]

பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் 2026 ஜூன் 22ம் திகதி திங்கட்கிழமை தனது பதவியை இராஜினாமா செய்தார். இதன் மூலம் முழு பதவிக்காலத்தை நிறைவு செய்வதற்கு முன்பே இராஜினாமா செய்த ஆறாவது நபர் ஆனார். ஐரோப்பா செய்தி

அச்சுறுத்தும் ரஷ்யா: பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் ஐஸ்லாந்துக்கு விஜயம்

  • July 6, 2026
  • 0 Comments

பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் 2026 ஜூன் 22ம் திகதி திங்கட்கிழமை தனது பதவியை இராஜினாமா செய்தார். இதன் மூலம் முழு பதவிக்காலத்தை நிறைவு செய்வதற்கு முன்பே இராஜினாமா செய்த ஆறாவது நபர் ஆனார். நவீன பிரித்தானிய அரசியலில் முன்னெப்போதும் இல்லாத எண்ணிக்கையாக, ஒரு தசாப்தத்தில் ஏழாவது பிரதமரை எதிர்கொள்ளும் நிலையை மக்கள் இப்போது எதிர்கொள்கின்றனர். மேலும், பெரும்பாலான விவாதங்கள் புதிய பிரதமராக பொறுப்பேற்கவிருக்கும் ஆண்டி பர்ன்ஹாமைச் சுற்றியே இருந்தாலும், ஸ்காட்லாந்து அரசியலில் பெரும் விளைவுகள் ஏற்பட […]

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தனக்கு பெரும் கவலையளிப்பதாகத் தெரிவித்துள்ள நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, அந்த நிறுவனத்திற்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் இச்சம்பவத்திற்கான பொறுப்பைத் தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார். இலங்கை செய்தி

சிறைச்சாலை சம்பவத்துக்கு பொறுப்பேற்றார் நீதி அமைச்சர்

  • July 6, 2026
  • 0 Comments

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தனக்கு பெரும் கவலையளிப்பதாகத் தெரிவித்துள்ள நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, அந்த நிறுவனத்திற்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் இச்சம்பவத்திற்கான பொறுப்பைத் தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார். சிறைச்சாலையின் நிலைமை தற்போது முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் உயிரிழந்தமை தொடர்பில் நான் ஆழ்ந்த கவலையடைகின்றேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்” என்றார். […]

பிரித்தானியா வெளிநாட்டு அரசியல் நன்கொடைகள் மீதான தனது விதிகளைக் இன்று முதல் கடுமையாக்கியது. ஐரோப்பா செய்தி

வெளிநாட்டு அரசியல் நன்கொடைகள் மீதான விதிகளை கடுமையாக்கியது பிரித்தானியா

  • July 6, 2026
  • 0 Comments

பிரித்தானியா வெளிநாட்டு அரசியல் நன்கொடைகள் மீதான தனது விதிகளைக் இன்று முதல் கடுமையாக்கியது. ரஷ்ய ஆதரவுப் பேச்சுகளையும் அறிக்கைகளையும் வெளியிடுவதற்காக இலஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக, ரிஃபார்ம் யுகே கட்சியின் முன்னாள் அரசியல்வாதி ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விதி நடைமுறைக்கு வந்துள்ளது. அரசியலில் வெளிநாட்டு நிதித் தலையீடு குறித்து மறுஆய்வு செய்யுமாறு கடந்த ஆண்டு அரசாங்கம் உத்தரவிட்டது. ரஷ்யா, சீனா மற்றும் ஈரான் உள்ளிட்ட வெளிநாடுகள், நாட்டின் ஜனநாயகத்தில் செல்வாக்கு செலுத்தவும் அதனைச் சீர்குலைக்கவும் முயற்சிக்கும் […]

உலகின் முதல் பத்து சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகளின் பட்டியலில் இங்கிலாந்து இடம்பிடித்துள்ளது. எனினும் அமெரிக்கா அந்த வாய்ப்பைத் தவறவிட்டுள்ளது. ஐரோப்பா செய்தி

உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு: முதல் 10 இடங்களில் பிரித்தானியா

  • July 6, 2026
  • 0 Comments

உலகின் முதல் பத்து சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகளின் பட்டியலில் இங்கிலாந்து இடம்பிடித்துள்ளது. எனினும் அமெரிக்கா அந்த வாய்ப்பைத் தவறவிட்டுள்ளது. 2026ம் ஆண்டுக்கான உலக கடவுச்சீட்டுத் தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. 2021ம் ஆண்டு முதல், குளோபல் சிட்டிசன் சொல்யூஷன்ஸ் மூலம் குளோபல் பாஸ்போர்ட் இன்டெக்ஸ் இந்த ஆண்டு அறிக்கையைத் தொகுத்து வருகிறது. இந்தத் தரவரிசையானது, 197 நாடுகள் மற்றும் பிரதேசங்களின் கடவுச்சீட்டுகளை வரிசைப்படுத்தி, மேம்பட்ட பயண வசதி, முதலீடு மற்றும் வாழ்க்கைத் தரம் ஆகிய மூன்று முக்கியப் பரிமாணங்களில் பயண ஆவணங்களின் […]

திருகோணமலை, மொறவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 'டிராக் 6' (TRACK 6) பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பாடசாலை மாணவர்கள் உட்பட நால்வர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இலங்கை செய்தி

திருமலையில் விபத்து: பாடசாலை மாணவர்கள் உட்பட நால்வர் காயம்

  • July 6, 2026
  • 0 Comments

திருகோணமலை, மொறவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ‘டிராக் 6’ (TRACK 6) பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பாடசாலை மாணவர்கள் உட்பட நால்வர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்து இன்று (06) காலை 6.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகிறது. தாய் ஒருவர் தனது இரண்டு பிள்ளைகளையும் மோட்டார் சைக்கிளில் பாடசாலைக்கு அழைத்துச் சென்றுகொண்டிருந்தபோது, எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் கந்தளாய் – வான்எல பகுதியைச் சேர்ந்த […]

இலங்கை

நீர்கொழும்பு சிறைக்கைதிகளை இடமாற்ற நடவடிக்கை

  • July 6, 2026
  • 0 Comments

நீர்கொழும்பு சிறையில் உள்ள கைதிகளை மற்ற சிறைகளுக்கு மாற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறையில் பதற்றத்தைத் தணித்து இயல்பு நிலையை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த இடமாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அத்துடன் நிலைமை உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைமுறையில் உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையில், இன்று காலை (06) நீர்கொழும்பு சிறைக்குள் மீண்டும் ஏற்பட்ட கலவரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அவர்களில் ஐந்து […]

கிண்ணியா - பூவரசந்தீவு பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மதிலில் இருந்து கீழே விழுந்ததில், அங்கு கொங்கிரீட் போடுவதற்காகப் பொருத்தப்பட்டிருந்த கம்பி அவரது அடிவயிற்றைத் துளைத்துள்ளது. இலங்கை செய்தி

வயிற்றில் குத்திய கம்பியை அகற்றி இளைஞனின் உயிரைக் காப்பாற்றிய வைத்தியர்கள்

  • July 6, 2026
  • 0 Comments

கிண்ணியா – பூவரசந்தீவு பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மதிலில் இருந்து கீழே விழுந்ததில், அங்கு கொங்கிரீட் போடுவதற்காகப் பொருத்தப்பட்டிருந்த கம்பி அவரது அடிவயிற்றைத் துளைத்துள்ளது. இச்சம்பவம் நேற்று முன்தினம் (04) இரவு 7.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. வயிற்றில் கம்பியுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அந்த இளைஞர், உடனடியாகக் கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் (Ambulance) மூலம் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சத்திரசிகிச்சை (அறுவைசிகிச்சை) […]