" சட்டத்தின் சுயாதீனத்தன்மைக்குள் அரசியலை புகுத்தி, ஆட்சியை தக்கவைத்துக்கொள்வதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது.சட்டத்தின் சுயாதீனத்தன்மையை பாதுகாக்க எதிரணியால் முடிந்த அனைத்தையும் செய்வோம்.” அரசியல் இலங்கை செய்தி

சட்டத்தின் சுயாதீனத்தில் கையடிப்பு: எதிரணி குற்றச்சாட்டு

  • July 7, 2026
  • 0 Comments

” சட்டத்தின் சுயாதீனத்தன்மைக்குள் அரசியலை புகுத்தி, ஆட்சியை தக்கவைத்துக்கொள்வதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது.சட்டத்தின் சுயாதீனத்தன்மையை பாதுகாக்க எதிரணியால் முடிந்த அனைத்தையும் செய்வோம்.” இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார சூளுரைத்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு , “இலங்கையை ஆட்சிசெய்த தலைவர்கள் சட்டத்தின் சுயாதீனத்தன்மையில் கையடிக்கவில்லை. அவ்வாறு கையடித்த தரப்பினருக்கு கடைசியில் வீட்டுக்கு செல்ல நேரிட்டது. நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் தற்போது, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் […]

ஐரோப்பா செய்தி

புதிய ஆட்சி மலர்ந்த பின் சிரியா சென்ற முதல் ஐரோப்பிய தலைவர்

  • July 7, 2026
  • 0 Comments

சிரியாவில் ஜனாதிபதி அகமது அல்-ஷாரா (Ahmed al-Sharaa) தலைமையிலான கிளர்ச்சியாளர்கள் , 2024-ல் பஷர் அல்-அசாத்தின் (Bashar al-Assad) சர்வாதிகார ஆட்சியை வீழ்த்திய பிறகு, அங்கு செல்லும் முதல் ஐரோப்பிய தலைவர் என்ற பெருமையுடன் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் திங்கள்கிழமையன்று டமாஸ்கஸ் சென்றடைந்தார். 13 ஆண்டுகால உள்நாட்டுப் போரினால் சின்னாபின்னமான சிரியாவை மீண்டும் கட்டியெழுப்பும் முயற்சியில், அசாத் காலத்தில் சிரியாவைத் தனிமைப்படுத்திய மேற்கத்திய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுடன் ஜனாதிபதி ஷாரா நெருக்கமான உறவை ஏற்படுத்தியுள்ளார். […]

உலகம்

சீனாவில் நிலச்சரிவு – 17 பேர் மண்ணுள் புதையுண்டுள்ளனர்

  • July 7, 2026
  • 0 Comments

சீனாவின் மேற்கு மாகாணமான கான்சுவில் (Gansu) இன்று நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் 33 பேர் மண்ணுள் புதையுண்டதாக அந்நாட்டின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருப்பினும் 17 பேர் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளதாக சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. எஞ்சியுள்ள 16 பேரை மீட்பதற்கான பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக பிராந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். செங்குத்தான பள்ளத்தாக்குகள் மற்றும் குறுக்கிடும் ஆறுகளைக் கொண்ட இந்த மலைப் பிரதேசம், குறிப்பாக மழைக்காலங்களில், திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் உள்ளிட்ட இயற்கை பேரழிவுகளுக்கு இலக்காகுகின்றமை குறிப்பிடத்தக்கது. […]

ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானிஸ் மற்றும் சாலமன் தீவுகளின் பிரதமர் மேத்யூ வேல் (Matthew Wale) ஆகியோர் கூட்டாக நடத்திய செய்தியாளர் சந்திப்பில், இரு நாடுகளுக்கும் இடையிலான விரிவான உடன்படிக்கை மற்றும் கல்வி, சுகாதாரத்திற்கான புதிய நிதியுதவிகள் குறித்து அறிவிக்கப்பட்டது. ஆஸ்திரேலியா உலகம் செய்தி முக்கிய செய்திகள்

சீனாவின் அணு ஆயுதப் பாய்ச்சல்: கொதித்தெழுந்த ஆஸ்திரேலியா

  • July 7, 2026
  • 0 Comments

பசிபிக் பெருங்கடல் பகுதியில் சீனா நடத்திய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைச் சோதனைக்கு (ICBM) சாலமன் தீவுகள் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் தங்களது பலத்த கண்டனங்களைப் பதிவு செய்துள்ளன. ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானிஸ் மற்றும் சாலமன் தீவுகளின் பிரதமர் மேத்யூ வேல் (Matthew Wale) ஆகியோர் கூட்டாக நடத்திய செய்தியாளர் சந்திப்பில், இரு நாடுகளுக்கும் இடையிலான விரிவான உடன்படிக்கை மற்றும் கல்வி, சுகாதாரத்திற்கான புதிய நிதியுதவிகள் குறித்து அறிவிக்கப்பட்டது. அப்போது, பசிபிக் பிராந்தியத்தில் […]

Belgium beats USA செய்தி விளையாட்டு

அமெரிக்காவை வீழ்த்தியது பெல்ஜியம்

  • July 7, 2026
  • 0 Comments

சியாட்டில் மைதானத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை 2026 ஆட்டத்தில் அமெரிக்காவை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பெல்ஜியம் அணி கால்இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. சார்லஸ் டி கெட்டேலாரே (Charles De Ketelaere) அடித்த இரண்டு கோல்கள், ஹான்ஸ் வனாகன் (Hans Vanaken) தனது உலகக் கோப்பை வரலாற்றில் பதிவு செய்த முதல் கோல் மற்றும் மாற்று வீரராக களம் புகுந்த ரொமேலு லுகாகு (Romelu Lukaku) கடைசி நேரத்தில் அடித்த கோல் ஆகியவை பெல்ஜியம் […]

உலகம்

இருளில் மூழ்கியது கியூபா

  • July 7, 2026
  • 0 Comments

கியூபாவில் நேற்று நாடு தழுவிய ரீதியில் மின் வெட்டு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் முற்றுகை காரணமாக கியூபா எரிசக்தி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் இந்த மின் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது. தேசிய மின்சாரக் கட்டமைப்பு முழுமையாகச் சரிந்துவிட்டதாக கியூபாவின் எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கான காரணத்தை விசாரித்து வருவதாக அந்நாட்டின் மின் கட்டமைப்பு இயக்குநரகம் கூறியுள்ளது. அத்துடன் மின்சாரத்தை மீட்டெடுக்க அதிகாரிகள் பணியாற்றி வருவதாகவும், அத்தியாவசிய சேவைகளுக்கு மின்சாரம் வழங்கும் அவசரகால “மைக்ரோசிஸ்டம்களை” அவர்கள் ஏற்கனவே செயல்படுத்திவிட்டதாகவும் எரிசக்தி அமைச்சர் […]

டல்லாஸில் நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் மைக்கேல் மெரினோ கடைசி நிமிடத்தில் அடித்த கோலால் போர்த்துகள் அணி 1-0 எனத் தோல்வியடைந்து வெளியேறியது. செய்தி விளையாட்டு

ரொனால்டோவுக்கு ஏமாற்றம்: வெளியேறியது போர்த்துகள்

  • July 7, 2026
  • 0 Comments

டல்லாஸில் நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் மைக்கேல் மெரினோ கடைசி நிமிடத்தில் அடித்த கோலால் போர்த்துகள் அணி 1-0 எனத் தோல்வியடைந்து வெளியேறியது. இதன் மூலம் போர்த்துகள் முன்னணி வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் கடைசி உலகக் கோப்பை பயணம் ஏமாற்றத்துடன் முடிவடைந்தது. எனினும், தனது சர்வதேச கால்பந்து எதிர்காலம் குறித்து அவசரப்பட்டு எந்தவொரு முடிவையும் எடுக்க அவர் தயாராக இல்லை. திங்கள்கிழமையன்று ‘மிக்ஸட் ஜோன்’ (Mixed Zone) பகுதியில் செய்தியாளர்களிடம் பேசிய ரொனால்டோ, மாற்று வீரராக […]

இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

சிறைச்சாலை கலவரம்: நடந்தது என்ன? விசாரணை தீவிரம்

  • July 7, 2026
  • 0 Comments

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட பயங்கர மோதலில் 7 சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் 19 கைதிகள் உட்பட மொத்தம் 26 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவத்தில் நூற்றுக்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காகச் சிறைச்சாலைக்கு உள்ளேயும் வெளியேயும் 10 பொலிஸ் குழுக்கள், விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நேற்றிரவுடன் சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து 700 கைதிகள் ஏனைய சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். சுமார் 2,400 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நீர்கொழும்பு சிறைச்சாலையில், […]

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, நாளை (08) ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொள்கின்றார். ஆஸ்திரேலியா இந்தியா செய்தி

நாளை ஆஸ்திரேலியா செல்கிறார் மோடி – பிரமாண்ட வரவேற்புக்கு ஏற்பாடு

  • July 7, 2026
  • 0 Comments

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, நாளை (08) ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொள்கின்றார். இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்குரிய பயணத்தை பிரதமர் மோடி நேற்று ஆரம்பித்தார். முதற்கட்டமாக இந்தோனேசியா சென்றுள்ள மோடி, அங்கிருந்து ஆஸ்திரேலியா வரவுள்ளார். ஆஸ்திரேலியாவில் வாழும் இந்திய சமுகத்தினர், நாளை வியாழக்கிழமை மெல்போர்னுக்கு வரவிருக்கும் பிரதமர் நரேந்திர மோடியை பிரம்மாண்டமான பாலிவுட் பாணி நிகழ்வோடு வரவேற்க தயாராகி வருகின்றனர். ஆஸ்திரேலியா-இந்தியா வருடாந்திர தலைவர்கள் உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக இந்தியப் பிரதமர் ஜூலை 8 முதல் […]

உலகம்

மணிக்கு 290 கி.மீ காற்றுடன் கரையை கடந்த பாவி புயல்

  • July 7, 2026
  • 0 Comments

அமெரிக்காவில் சூப்பர் புயலாக உருமாறியிருந்த பாவி புயல் நேற்று கரையை கடந்துள்ளது. இதன்போது குவாம் மற்றும் வடக்கு மரியானா தீவுகள் கடும் மழையை எதிர்கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க தேசிய வானிலை சேவை (NWS) வெளியிட்டுள்ள தகவலின்படி, மேற்படி புயலானது ரோட்டா தீவின் மீது நகர்ந்தபோது, மணிக்கு 290 கி.மீ (180 மைல்) வேகத்தில் காற்று வீசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கடல் அலைகள் கிட்டத்தட்ட 11 மீட்டர் (35 அடி) உயரத்திற்கு எழுந்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. புயல் குறித்த எச்சரிக்கைகள் […]