உலகம்

டிப்தீரியா நோய் பரவலால் திண்டாடும் ஆஸ்திரேலியா! 200இற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

  • May 20, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் டிப்தீரியா (diphtheria) நோய் பரவலால் 220 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக ஆஸ்திரேலியாவின் வடக்கு, தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளிலும், குயின்ஸிலாந்திலும் அதிகளவிலான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். குழந்தைகளுக்கான தடுப்பூசி விகிதங்களில் ஏற்பட்ட சரிவே இந்த நோய் பரவல் மீள் எழுச்சிக்கு முக்கிய காரணம் என மருத்துவ நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர். பதிவான நோயாளிகளில் பெரும்பாலானவர்கள் பழங்குடியினர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனால், தடுப்பூசி போடும் முறையை மேம்படுத்துவதற்காக சுகாதார அதிகாரிகள் பழங்குடியின அமைப்புகளுடன் இணைந்து செயல்படுகின்றனர். இதேவேளை […]

உலகம் செய்தி

ஐ.நா. பாதுகாப்பு சபைக் கூட்டத்தில் பங்கேற்குமாறு ஈரானுக்கு அழைப்பு!

  • May 20, 2026
  • 0 Comments

ஐ.நா. பாதுகாப்பு சபைக் கூட்டத்தொடரில் பங்கேற்குமாறு ஈரான் வெளிவிவகார அமைச்சர் Abbas Araghchi இற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நியூயார்க்கில் அடுத்த வாரம் மேற்படி கூட்டம் நடைபெறவுள்ளது. ஐ.நா. பாதுகாப்புச் சபையின் தலைமைப் பொறுப்பில் சீனாவே, ஈரானுக்கு இந்த அதிகாரப்பூர்வ அழைப்பை விடுத்துள்ளது. எனினும், இக்கூட்டத்தில் பங்கேற்பது தொடர்பில் ஈரான் வெளிவிவகார அமைச்சர் Abbas Araghchi இன்னும் உறுதியான முடிவை எடுக்கவில்லை. சீனாவிடமிருந்து அழைப்பு கிடைத்துள்ளதால் இது தொடர்பில் சாதகமாக பரிசீலிக்கப்படலாம் என தெரியவருகின்றது. உலகளாவிய ரீதியில் அமைதியை […]

அரசியல் இலங்கை செய்தி

அதிகாரப் பகிர்வு அவசியம்: ஜனாதிபதி முன்னிலையில் சுமந்திரன் வலியுறுத்து!

  • May 20, 2026
  • 0 Comments

”நாட்டில் இனிமேல் யுத்தம் ஏற்பட அனுமதிக்க மாட்டேன் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்திருக்கின்றார். நாட்டில் மீண்டும் யுத்தம் ஏற்படக்கூடாது என்றால் அதற்கு அர்த்தமுள்ள அதிகார பகிர்வு விரைந்து முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதை நான் ஜனாதிபதிக்கு நினைவூட்ட விரும்புகின்றேன்.” – இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாநகர சபைக்கு உட்பட்ட பொது நூலகக் கட்டடத்தைத் திறக்கும் நிகழ்வில் இன்று உரையாற்றுகையிலேயே சுமந்திரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். […]

உலகம் செய்தி

உலக இணையத்திலிருந்து தொடர்ந்து 82-வது நாளாவும் துண்டிக்கப்பட்டுள்ள ஈரான்

  • May 20, 2026
  • 0 Comments

ஈரானில் அமுல்படுத்தப்பட்டுள்ள முழுமையான இணைய முடக்கம் இன்று 82 ஆவது நாளை எட்டியுள்ளது. இணைய கண்காணிப்பு அமைப்பான நெட்பிளாக்ஸ் (NetBlocks) இதனைத் தெரிவித்துள்ளது. ஈரான் உலகளாவிய இணைய இணைப்பிலிருந்து பெருமளவில் துண்டிக்கப்பட்டிருந்ததாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது. கடந்த பெப்ரவரி மாத இறுதியில் அமெரிக்கா-இஸ்ரேல் போர் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே, நாடு முழுவதும் இணைய சேவையை ஈரான் அரசு கட்டுப்படுத்தியது. இதற்கு முன்னர், ஜனவரி மாதத்தில் அரசாங்க எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெற்றபோதும், இதேபோன்ற இணைய முடக்கம் சுமார் […]

ஐரோப்பா செய்தி

வடகொரியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் : ஸ்டாமரின் அறிவிப்பால் சலசலப்பு!

  • May 20, 2026
  • 0 Comments

பிரித்தானியா வடகொரியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்துள்ளதாக பிரதமர் ஸ்டாமர் அறிவித்ததை தொடர்ந்து கொமன்ஸ் அவையில் சலசலப்பு ஏற்பட்டது. கொமன்ஸ் அவை இன்று ஆரம்பமாகிய நிலையில், பிரதமர் ஸ்டாமர் லிபரல் டெமாக்ரட் தலைவர் சர் எட் டேவிக்கு ( Sir Ed Davey) பதிலளித்துக்கொண்டிருந்தார். இதன்போது தனது அரசாங்கம் பல்வேறு நாடுகளுடன் செய்துள்ள ஒப்பந்தங்களை அவர்பட்டியலிட்டார். இந்நிலையில் தென்கொரியாவுடன் செய்துக்கொண்ட ஒப்பந்தங்களை பட்டியலிடுவதற்கு பதிலாக வடகொரியாவின் பெயரை அறிவித்தார். இதனால் சபையில் சிலமணிநேரம் சலசலப்பு ஏற்பட்டது.

இலங்கை செய்தி

வாழைச்சேனை துறைமுகத்தை முழுமையாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை!

  • May 20, 2026
  • 0 Comments

கிராமப்புற வீதி நிர்மாணம், குடிநீர் விநியோகம் மற்றும் திடக்கழிவுப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அடுத்த வரவுசெலவுத் திட்டத்தில் விசேட அவதானம் செலுத்தப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று (20) முற்பகல் நடைபெற்ற விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் குடிநீர், நீர்ப்பாசனம் மற்றும் கைத்தொழில் தேவைகளுக்கான நீர் வழங்கல் திட்டங்கள் குறித்து மக்கள் பிரதிநிதிகளும் பொதுமக்களும் இணைந்து […]

உலகம்

உலகம் காட்டுமிராண்டித்தனமான சட்டங்களுக்குத் திரும்பும் அபாயத்தில் உள்ளது – ஷி ஜின்பிங!

  • May 20, 2026
  • 0 Comments

உலகம் காட்டுமிராண்டித்தனமான சட்டங்களுக்குத் திரும்பும் அபாயத்தில் உள்ளதாக சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் எச்சரித்துள்ளார். சீனாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள புட்டின் ஜனாதிபதி ஷி ஜின்பிங்கை இன்று சந்தித்தார். இதன்போது இரு நாட்டுத் தலைவர்களும் தங்கள் நாடுகளின் உறவு குறித்து அன்பான வார்த்தைகளைப் பரிமாறிக்கொண்டனர், மேலும் மூலோபாய உறவுகளை ஆழப்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டது. அத்துடன் இருநாட்டு தலைவர்களும் நட்புறவு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நீட்டிக்க முறைப்படி ஒப்புக்கொண்டனர். வேகமாக மாறிவரும் உலகளாவிய சூழலில் இந்த ஒப்பந்தத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய ஷி […]

உலகம்

சீனாவில் உணவகம் ஒன்றில் கத்தி குத்து தாக்குதல் – ஜப்பானிய பிரஜைகள் இருவர் காயம்!

  • May 20, 2026
  • 0 Comments

சீனா – ஷாங்காயில் (Shanghai) உள்ள உணவகம் ஒன்றில் நேற்று கத்தி குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இந்த  தாக்குதலில் இரண்டு ஜப்பானிய ஆண்களும் சீனாவைச் சேர்ந்த பெண் ஒருவரும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, தாக்குதல்தாரி 59 வயதுடையவர் என்றும் அவர் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜப்பானின் தலைமை அமைச்சரவைச் செயலாளர் மினோரு கிஹாரா (Minoru Kihara) சம்பவம் குறித்து சீன அரசாங்கத்திடம் விளக்கம் கோரியுள்ளார். இதேவேளை இந்த சம்பவம் குறித்த விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இலங்கை செய்தி

மட்டக்களப்பு பொது நூலகத்தின் புதிய கட்டிடம் கையளிப்பு!

  • May 20, 2026
  • 0 Comments

மட்டக்களப்பு மாநகர சபை பொது நூலகத்தின் புதிய கட்டிடம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பங்கேற்புடன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனால் இன்று (20) முற்பகல் திறந்து வைக்கப்பட்டது. தடைப்பட்டிருந்த இந்த நூலகத்தின் நிர்மாணப் பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்ததைக் காண்பதில் மகிழ்ச்சியடைவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இங்கு குறிப்பிட்டார். இதற்கு இணையாக, பொது நூலகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமும் ஜனாதிபதியினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இந்தப் புதிய நூலகக் கட்டிடத்தில், சிறுவர்களுக்கான விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப […]

இலங்கை

கச்சத்தீவு இலங்கையின் சொத்து : உண்மைக்கு புறம்பான விடயங்களை பேச வேண்டாம்!!

  • May 20, 2026
  • 0 Comments

கச்சத்தீவு மீட்பு வாக்குறுதியை தேர்தல் கால வாக்குறுதியாக கலைந்துவிட வேண்டும். இல்லையேல்,  தமிழக முதல்வர் விஜய்க்கு எதிராக போராட தயங்க மாட்டோம் என யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சம்மேளனப் பிரதிநிதி செல்லதுரை நற்குணம் தெரிவித்தார். தமிழக அரசியல் களத்தில் மீனவர் பிரச்சினை முக்கிய இடம்பிடித்துள்ளதுடன், விஜய் கச்சத்தீவை மீட்பது பற்றி அறிவித்திருந்தார். இந்நிலையில் இது தொடர்பில் நேற்று  யாழில் உள்ள கடற்றொழிலாளர் கூட்டுறவு சமாசத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் […]