ஐரோப்பா செய்தி

லண்டனில் மே மாதத்தின் அதிகபட்ச வெப்பநிலை இன்று

  • May 25, 2026
  • 0 Comments

இங்கிலாந்தில் மே மாதத்தின் அதிகபட்ச வெப்பநிலை இன்று பதிவாகியுள்ளது. வானிலை ஆய்வு மையத்தின் தகவலுக்கமைய, லண்டனின் ஹீத்ரோ பகுதியில் 32.9°C வெப்பநிலை பதிவாகியுள்ளது. மே மாதத்தில் இதற்கு முன் 32.8°C வெப்பநிலை அதிகபட்சமான பதிவானது அதற்கும் முன்னர் தென்மேற்கு லண்டனிலுள்ள புஷி பார்க்கிலும் (Bushy Park) இதே அளவிலான வெப்பநிலை பதிவாகியிருந்தது. இதனிடையே, நேற்றிரவு இதுவரை இல்லாதளவில் அதிக வெப்பமான மே மாத இரவாகவும் அமைந்துள்ளது. இந்நிலையில் வெப்பமான வானிலை தொடர்பில் பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு […]

இலங்கை செய்தி

வவுணதீவில் முதியவர் சடலமாக மீட்பு: விசாரணை வேட்டை தீவிரம்!

  • May 25, 2026
  • 0 Comments

மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாவக்கொடிச்சேனை சிவன்கோவில் பாறைப் பகுதியில், உடம்பில் காயங்களுடன் முதியவர் ஒருவரின் சடலம் இன்று திங்கட்கிழமை காலை பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. உன்னிச்சை, நெடியமடுப் பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய கணவதிபிள்ளை யோகராசா என்ற முதியவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். இன்று காலை 8 மணியளவில் பாவக்கொடிச்சேனை சிவன் கோவில் பாறைப் பகுதியில், காயங்களுடன் நபர் ஒருவர் சடலமாகத் தரையில் கிடப்பதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள், அது குறித்து உடனடியாக வவுணதீவு பொலிஸாருக்குத் தகவல் […]

செய்தி தமிழ்நாடு

அதிமுக எம்எல்ஏக்கள் மூவர் ராஜினாமா -தவெகவில் இணைந்ததால் பரபரப்பு

  • May 25, 2026
  • 0 Comments

தமிழகத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் மூவர் தங்களது பதவியை ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளனர். மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா ஆகிய மூவரும் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர் சபாநாயகர் பிரபாகரை சந்தித்து 03 எம்எல்ஏக்களும் தங்கள் ராஜினாமா கடிதங்களை வழங்கியுள்ளனர் பின்னர் மூவரும் பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். அதிமுக ஏற்கெனவே இரண்டு அணிகளாக பிரிந்துள்ள நிலையில், வேலுமணி […]

இலங்கை கல்வி

விபத்தில் இளம் தாய் பலி: கிளிநொச்சியில் சோகம்!

  • May 25, 2026
  • 0 Comments

கிளிநொச்சி, உருத்திரபுரம் பகுதியில் இளைஞர் ஒருவரின் மோட்டார் சைக்கிள் மோதியதில், பாடசாலைக்குத் தனது பிள்ளையை அழைக்கச் சென்ற தாய் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விபத்துச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:- உருத்திரபுரம் – கரடிப்போக்குச் சந்திக்கு இடைப்பட்ட பிரதான வீதியில் இன்று இளைஞர்கள் குழுவினர் சிலர் தங்களது மோட்டார் சைக்கிள்களை அதிவேகமாகச் செலுத்தி, ஆபத்தான முறையில் சாகசங்களில் ஈடுபட்டுள்ளனர். வீதியால் பயணிக்கும் ஏனைய பொதுமக்களுக்குப் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் இந்தச் சாகசப் […]

இலங்கை செய்தி

இலங்கை ஏற்றுமதியில் 4.3% வளர்ச்சி – 5.78 பில்லியன் டொலர் வருவாய்

  • May 25, 2026
  • 0 Comments

2026 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் மொத்த ஏற்றுமதி வருவாய் சுமார் 5.78 பில்லியன் அமெரிக்க டொலரை எட்டியுள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி சபை (EDB) தெரிவித்துள்ளது. இந்த வருவாய் அதிகரிப்பு கடந்த ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடுகையில் 4.3% வளர்ச்சியென தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதத்தில் மாத்திரம் இலங்கை 1.38 பில்லியன் டொலர் ஏற்றுமதி வருவாயைப் பெற்றுள்ளது. கடந்த ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் 6% வளர்ச்சியென ஏற்றுமதி அபிவிருத்தி சபை (EDB) தெரிவித்துள்ளது. இதில் பொருட்கள் […]

இலங்கை செய்தி

விமல் வீரவன்சவுக்குப் பிணை

  • May 25, 2026
  • 0 Comments

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து இன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி 05 இலட்சம் ரூபாய் பெறுமதியான 1 சரீரப் பிணையின் கீழ் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். பத்தரமுல்லையில் உள்ள இராணுவ நினைவிடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இராணுவ வெற்றி கொண்டாட்டத்திற்கான ஒத்திகை நிகழ்வுக்கு இடையூறு ஏற்படுத்தியமை தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக தலங்கம பொலிஸ் நிலையத்தில் அவர் இன்று (25) முன்னிலையானார். வாக்குமூலம் வழங்கயதைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விமல் […]

ஐரோப்பா செய்தி

ஸ்கேன் அறிக்கை பணிக்கு தனியார் நிறுவனங்களை NHS அதிகம் நம்பும் நிலை – செலவு வேகமாக உயர்வு

  • May 25, 2026
  • 0 Comments

வைத்தியசாலைகளில் நோயறிதல் ஸ்கேன்களின் பகுப்பாய்வுக்காக தேசிய சுகாதார சேவை தனியார் நிறுவனங்களுக்கு செலுத்தும் தொகை அதிகரித்து வருவதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. CT மற்றும் MRI ஸ்கேன்களை மருத்துவ ரீதியாக ஆய்வு செய்து அறிக்கை வழங்கும் பணியை வெளி நிறுவனங்களுக்கு ஒப்படைப்பதால் செலவுகள் “கட்டுப்பாட்டை மீறி அதிகரித்து வருகிறது” என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இதனால் பல மருத்துவமனைகள் வெளிப்பணி சேவைகளை அதிகம் நம்ப வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு மட்டும் இத்தகைய சேவைகளுக்கு சுமார் 241 மில்லியன் […]

இலங்கை

40 நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு இலவச விசா வழங்கும் திட்டம் – இன்று முதல் அமுலுக்கு!

  • May 25, 2026
  • 0 Comments

இலங்கைக்கு வருகை தரும் 40 நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு இலவச விசா வழங்கும் திட்டம் இன்று முதல் அமுலுக்கு வந்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் சுற்றுலாப் பயணிகள் 90 நாட்களுக்குச் செல்லுபடியாகும் இலவச விசாவைப் பெற்றுக்கொள்ள முடியும் . அதன்படி, அவுஸ்திரேலியா, பிரான்ஸ், ஆஸ்திரியா, மலேசியா, சவுதி அரேபியா, ஜேர்மனி, நேபாளம், தென் கொரியா, பஹ்ரைன், இந்தியா, நெதர்லாந்து, ஸ்பெயின், பெலாரஸ், இந்தோனேசியா, நியூசிலாந்து, ஸ்வீடன், பெல்ஜியம், கனடா, சீனா, செக் குடியரசு, டென்மார்க், பின்லாந்து, ஈரான், […]

ஐரோப்பா

உக்ரைனுக்கு ஆதரவாக போரிட்ட பிரித்தானிய பிரஜை உயிரிழப்பு!

  • May 25, 2026
  • 0 Comments

உக்ரைனின் டொனெட்ஸ்க் பகுதியில் இடம்பெற்று வரும் போரில் பிரித்தானிய பிரஜையொருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 23 வயதான அய்ர்டன் ரெட்ஃபியர்ன் (Ayrton Redfearn) என அடையாளம் காணப்பட்டுள்ளார். ரெட்ஃபியர்ன், இதற்கு முன்னர் டார்குவே விமானப் படை மாணவராகவும், ராயல் ஏர் ஃபோர்ஸிலும் (RAF) பணியாற்றியுள்ளார். அவர் 2025 ஆம் ஆண்டில்  உக்ரைனிய இராணுவத்திற்கு ஆதரவளிக்கும் ஒரு சிறப்புப் பிரிவில் இணைந்திருந்தார். இதேவேளை அவரின் மரணத்தை வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளதுடன், இரங்கல் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலகம் செய்தி

ஈரான் சபாநாயகராக Qalibaf மீண்டும் தெரிவு!

  • May 25, 2026
  • 0 Comments

ஈரான் நாடாளுமன்றத்தின் சபாநாயகராக முகமது பாகர் கலிபாப் (Mohammad Bagher Qalibaf) இன்று திங்கட்கிழமை மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஈரான் அரச ஊடகம் மேற்படி தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. சபாநாயகர், பிரதி சபாநாயகர்கள், ஆறு செயலாளர்கள் மற்றும் மூன்று அவதானிப்பாளர்கள் (Observers) உட்பட நாடாளுமன்றத்தின் 12 நிர்வாகக் குழு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக தேர்தல் நடத்தப்பட்டது. நாடாளுமன்றப் பிரதிநிதிகள் ரகசிய வாக்குப்பதிவு மூலம் தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர் என ஈரான் நாட்டு ஊடகமான IRIB தெரிவித்துள்ளது. ஈரானின் மிக முக்கிய […]