விமல் வீரவன்சவுக்குப் பிணை
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து இன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 05 இலட்சம் ரூபாய் பெறுமதியான 1 சரீரப் பிணையின் கீழ் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
பத்தரமுல்லையில் உள்ள இராணுவ நினைவிடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இராணுவ வெற்றி கொண்டாட்டத்திற்கான ஒத்திகை நிகழ்வுக்கு இடையூறு ஏற்படுத்தியமை தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக தலங்கம பொலிஸ் நிலையத்தில் அவர் இன்று (25) முன்னிலையானார்.
வாக்குமூலம் வழங்கயதைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.




