இலங்கை செய்தி

விமல் வீரவன்சவுக்குப் பிணை

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து இன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 05 இலட்சம் ரூபாய் பெறுமதியான 1 சரீரப் பிணையின் கீழ் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பத்தரமுல்லையில் உள்ள இராணுவ நினைவிடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இராணுவ வெற்றி கொண்டாட்டத்திற்கான ஒத்திகை நிகழ்வுக்கு இடையூறு ஏற்படுத்தியமை தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக தலங்கம பொலிஸ் நிலையத்தில் அவர் இன்று (25) முன்னிலையானார்.

வாக்குமூலம் வழங்கயதைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!