ஈரான் மீதான புதிய தாக்குதல்கள் முற்றிலும் அவசியமானவை – மார்க் ரூட்டே
ஈரான் மீதான அமெரிக்காவின் புதிய தாக்குதல்கள் “முற்றிலும் அவசியமானவை” என்று நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே (Mark Rutte) இன்று தெரிவித்துள்ளார்.
ஹோர்முஸ் ஜலசந்தியில் மூன்று எண்ணெய்க் கப்பல்கள் எறிகணைகளால் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்க இராணுவம் ஈரான் மீதான தாக்குதல்களை முடக்கிவிட்டுள்ளது.
தெஹ்ரான் எண்ணெய் விற்பனை செய்வதற்கான உரிமத்தையும் ரத்து செய்தது. இது ஏற்கனவே பலவீனமாக இருந்த போர்நிறுத்தத்தின் மீது மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அங்காராவில் நடைபெற்ற நேட்டோ தலைவர்களின் உச்சி மாநாட்டிற்கு முன்பு பேசிய மார்க் ரூட்டே, “ஒரு போர்நிறுத்தம் இருக்கும்போது, ஈரான் அடிப்படையில் அந்தப் போர்நிறுத்தத்தை மீறினால், அமெரிக்கா வலுவாகப் பதிலடி கொடுப்பது முற்றிலும் இன்றியமையாதது என்று நான் நினைக்கிறேன், எனத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் நேட்டோவிற்கு அமெரிக்காவின் முழுமையான அர்ப்பணிப்பு” குறித்து எந்த சந்தேகமும் இருக்க முடியாது எனத் தெரிவித்த அவர், ஐரோப்பிய நாடுகள் பாதுகாப்பு செலவீணத்தை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.




