கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல – ட்ரம்பிற்கு நினைவூட்டல்
நேட்டோ உச்சிமாநாட்டில் கலந்துகொண்ட ட்ரம்ப், கிரீன்லாந்து வொஷிங்டனின் கட்டுப்பாட்டில் தான் இருக்க வேண்டும் எனக் கூறியமைக்கு டென்மார்க் பதிலளித்துள்ளது.
கிரீன்லாந்து “விற்பனைக்கு அல்ல” என்று டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் மீண்டும் ஒருமுறை உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
துருக்கியில் நடைபெறவுள்ள நேட்டோ உச்சி மாநாட்டிற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ஃபிரடெரிக்சன், அமெரிக்காவின் நிலைப்பாடு மேலும் மேலும் வெளிப்படையாகி வருவதாக தெரிவித்தார்.
“நேற்று அமெரிக்க அதிபர் பேசியதைக் கேட்டேன், துரதிர்ஷ்டவசமாக இந்த விஷயத்தில் அமெரிக்காவின் நிலைப்பாடு மிகவும் தெளிவாக உள்ளது என்று நான் நினைக்கிறேன். எங்களின் நிலைப்பாடு ஆரம்பம் முதலே தெளிவாக உள்ளது. கிரீன்லாந்து, நிச்சயமாக, விற்பனைக்கு அல்ல,” எனத் தெரிவித்தார்.
டென்மார்க்கும் கிரீன்லாந்தும் தங்கள் நட்பு நாடுகள். அந்தத் தீவின் எதிர்காலத்தை மதிக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும், அனைவரும், கிரீன்லாந்து மக்களின் சுயநிர்ணய உரிமையை மதிப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்றும் ஃபிரடெரிக்சன் தெரிவித்துள்ளார்.
டென்மார்க்கின் இறையாண்மையை வலியுறுத்திய அவர், “நாங்கள் இறையாண்மை கொண்ட நாடுகள், மேலும் அனைவரும் எங்கள் பிராந்திய ஒருமைப்பாட்டையும் இறையாண்மையையும் மதிக்க வேண்டும்” என்றும் வலியுறுத்தினார்.
“எங்கள் சொந்தப் பிரதேசம் உட்பட நேட்டோவின் ஒவ்வொரு அங்குலத்தையும் பாதுகாக்க டென்மார்க் தயாராக உள்ளது” என்றும், கூட்டணியின் சக உறுப்பினர்கள் தங்களின் கூட்டுப் பாதுகாப்பு உறுதிமொழிகளை நிறைவேற்றுவார்கள் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கிரீன்லாந்தின் எதிர்காலம் குறித்து டென்மார்க்கிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே தொடரும் கருத்து வேறுபாட்டை இந்தக் கருத்துக்கள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.




