ஈரான்மீது இன்றிரவும் தாக்குதல் – ட்ரம்ப் எச்சரிக்கை
ஈரான் மீது புதன்கிழமையான இன்று இரவும் அமெரிக்கா தாக்குதல் நடத்தும் என்று ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஹோர்முஸ் நீரிணையில். கப்பல்கள் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈரான் மீது அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்களுக்குப் பிறகு, டிரம்ப் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
நேட்டோ மாநாட்டில் பங்கேற்றுள்ள ட்ரம்ப், உக்ரைன் ஜனாதிபதியுடன் பேச்சு நடத்தினார்.
இதன்போது இது பற்றி கருத்து வெளியிட்ட ட்ரம்ப்,
“கடந்த இரவில் நாம் அவர்கள் மீது மிகக் கடுமையான தாக்குதலை நடத்தினோம். இன்று இரவும் அவர்கள் மீது மிக மிக அநேகமாக பலத்த தாக்குதலை நடத்துவோம்.
அவர்களுக்கு ஒரு சிறிய முன்னெச்சரிக்கையை நான் வழங்குகிறேன். இன்று இரவு நாம் அவர்கள் மீது பலமாகத் தாக்குவோம்” என்று குறிப்பிட்டார்.




