சிறைச்சாலை வன்முறை : மற்றுமொரு காவலர் உயிரிழப்பு
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் படுகாயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறைக்காவலர் ஒருவர் இன்று உயிரிழந்தார்.
அதன்படி, மோதலில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் வெடித்த மோதல்களின் காரணமாக, காயமடைந்த 100க்கும் மேற்பட்டோர் நீர்கொழும்பு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களில் 20 பேர் ஆபத்தான நிலையில் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
இதற்கிடையில், மோதலில் உயிரிழந்த 7 சிறை அதிகாரிகளின் உடல்கள் இறுதி அஞ்சலிக்காக இன்று காலை (08) வெலிக்கடை சிறைச்சாலைக்குக் கொண்டுவரப்பட்டன.
இறுதி அஞ்சலி செலுத்திய பின்னர், உடல்கள் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




