கரையை கடக்கும் பாவி புயல் – சீனாவில் 18 இலட்சம் மக்கள் வெளியேற்றம்
பாவி புயல் சீனாவின் வென்சோவை (Wenzhou) மாநிலத்தை சுற்றி கரையை கடக்கும் என முன்னுரைக்கப்பட்டுள்ள நிலையில் 18 இலடச்சம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
குறித்த புயல் காரணமாக சீனாவின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்துள்ளது.
அத்துடன் காற்றின் வேகமானது மணிக்கு 144 கி.மீ (90 மைல்) வேகத்தில் வீசியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீரற்ற வானிலை காரணமாக 18 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வெளியேற்றப்பட்டதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதற்கமைய வென்சோ அமைந்துள்ள ஜெஜியாங் (Zhejiang) மாகாணம் முழுவதும் 17 லட்சத்திற்கும் அதிகமான மக்களும், அண்டை மாகாணமான ஃபுஜியானில் (Fujian) 1 லட்சத்திற்கும் அதிகமான மக்களும் வெளியேற்றப்பட்டுள்ளதாக அரசு ஊடகங்கள் தெரிவித்தன.




