ட்ரோன் பட்டாலியனை உருவாக்குவது தொடர்பில் சுவிட்ஸர்லாந்து கரிசனை
ஐரோப்பா முழுவதும் மறு ஆயுதமயமாக்கல் போக்கு நிலவி வரும் நிலையில், சுவிட்சர்லாந்து ஒரு இராணுவ ட்ரோன் பட்டாலியனை உருவாக்குவது குறித்து கவனம் செலுத்தி வருகிறது.
இது தொடர்பான அறிவிப்புகளை பாதுகாப்பு அமைச்சகம் நேற்று வெளியிட்டது.
இதற்கமைய “2028 முதல், இராணுவம் தனது சொந்த ட்ரோன் பட்டாலியனை உளவு, செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்புக்காகப் பயன்படுத்தும்,” என்று தெரிவித்துள்ளது.
இந்தப் பட்டாலியனுக்கு ஒரு சிறப்பு ஆட்சேர்ப்பு மற்றும் பயிற்சித் திட்டம் ஆதரவளிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ட்ரோன்கள் மற்றும் ரோபோட்டிக்ஸுக்கான ஒரு சிவிலியன்-இராணுவ மையத்திற்கான திட்டங்களை அமைச்சகம் கோடிட்டுக் காட்டியது. இது ஒரு தொழில்நுட்ப மையம் மற்றும் ஒரு இராணுவக் கட்டளை மையத்தைக் கொண்டிருக்கும்.
புதிய தீர்வுகள் கூட்டாக உருவாக்கப்பட்டு, சோதிக்கப்பட்டு, இராணுவப் பயன்பாட்டிற்கு விரைவாகக் கொண்டுவரப்படும்,” என்றும் அமைச்சகம் கூறியுள்ளது.
இராணுவ மற்றும் முக்கிய உள்கட்டமைப்புகளுக்கு மேல் ட்ரோன்கள் பறப்பது அதிகரித்துள்ளதாக சுவிஸ் பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.




