அறிவியல் & தொழில்நுட்பம்

பொலிஸ் அவசர சேவைக்கு வரும் தேவையற்ற அழைப்புகளை கட்டுப்படுத்த உதவும் AI

  • August 18, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் பொலிஸ் அவசர சேவைக்கு வரும் தேவையற்ற அழைப்புகளை கட்டுப்படுத்த அல்லது துண்டிக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவுள்ளது. ஆண்டுதோறும் பெறப்படும் 20 மில்லியன் அழைப்புகளில் சுமார் 20 சதவீதம், உள்ளாட்சி மன்றங்கள் போன்ற காவல்துறை அல்லாத அமைப்புகளுக்கு உரியவை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்த புதிய செயற்கை நுண்ணறிவு அமைப்பு, அழைப்பிற்கான காரணத்தைக் கண்டறிந்து, அழைப்பாளர் வரிசையில் நுழைவதற்கு முன்பே, காவல்துறை அல்லாத விசாரணைகளைத் தானாகவே திசை திருப்பிவிடும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தொழில்நுட்பம் […]

ஐரோப்பா

ஸ்பெயினில் அடுத்தடுத்து பதிவாகிய நிலநடுக்கங்கள் – மூவர் காயம்

  • August 18, 2026
  • 0 Comments

ஸ்பெயினின் தெற்கு கிரனாடா Granada மாகாணத்தில் இன்று 4 ரிக்டர் அளவுக்கு மேற்பட்ட மூன்று நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இதன்போது மூன்று பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய நிலநடுக்கம் 4.7 ரிக்டர் அளவில் ஏற்பட்டது என்றும், அதன் மையப்புள்ளி கிரனாடா நகருக்கு தெற்கே 10 கி.மீ தொலைவில் இருந்ததாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். நிலநடுக்கத்தை தொடர்ந்து வரலாற்றுச் சிறப்புமிக்க அல்ஹம்ப்ரா Alhambra  வளாகத்தின் சில பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்வதை அதிகாரிகள் தடைசெய்தனர். அதே நேரத்தில் […]

உலகம்

சிரியாவில் உள்ள விமானப்படைத் தளத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் – அமெரிக்க தூதர் எச்சரிக்கை

  • August 18, 2026
  • 0 Comments

சிரியாவில் உள்ள அபு அல்-துஹூர் விமானப்படைத் தளத்தின் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தி தேவையற்ற பதற்றத்தை ஏற்படுவத்துவதாக அமெரிக்க சிறப்புத் தூதர் டாம் பராக் Tom Barrack எச்சரித்தார். இட்லிப் மாகாணத்தில் உள்ள விமானப்படைத் தளத்தின் ஓடுபாதையைக் குறிவைத்து எட்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், அவை பொருள் சேதத்தை ஏற்படுத்தியதே தவிர, உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் சிரிய அரசு தெரிவித்துள்ளது. டிசம்பர் 2024-ல் பஷார் அசாத்தின் ஆட்சி கவிழ்ந்ததைத் தொடர்ந்து, நீண்ட காலமாகப் பயன்பாட்டில் இல்லாத […]

செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகளைத் தொடர்ந்து அதுபற்றி நீதிமன்றத்துக்கு அறிக்கையிடப்படும் என்றும், நீதிமன்றத்தின் ஊடாகவே சாட்சியாளர்கள் விசாரிக்கப்படுவர் என்றும் அமைச்சரவைப் பேச்சாளரும், சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இலங்கை செய்தி

செம்மணி புதைகுழி: அகழ்வுப் பணி நாளையுடன் நிறுத்தம்: அடுத்து என்ன?

  • August 18, 2026
  • 0 Comments

செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகளைத் தொடர்ந்து அதுபற்றி நீதிமன்றத்துக்கு அறிக்கையிடப்படும் என்றும், நீதிமன்றத்தின் ஊடாகவே சாட்சியாளர்கள் விசாரிக்கப்படுவர் என்றும் அமைச்சரவைப் பேச்சாளரும், சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு செவ்வாய்க்கிழமை (18) கொழும்பிலுள்ள அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பில் தற்போது இடம்பெற்றுவரும் செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகள், இவ்விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கப்படவுள்ள எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் மரணதண்டனைக்கைதி லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்சவிடம் சாட்சியங்களைப் பெறல் என்பன […]

ஐரோப்பா முக்கிய செய்திகள்

லண்டனில் பேருந்து ஓட்டுநர்கள் பணிப்புறக்கணிப்பு – முழுமையான தகவல் இதோ

  • August 18, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் லண்டனில் 1500 பேருந்து ஓட்டுநர்கள் இந்த வாரத்தில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கடும் வெப்பமான காலநிலையில் நிலவும் பணிச்சூழல் காரணமாக  வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். யுனைட் தொழிற்சங்க உறுப்பினர்களின் இந்த வேலைநிறுத்தப் போராட்டம் இன்று காலை 4 மணிக்குத் தொடங்கி, ஆகஸ்ட் 21, வெள்ளிக்கிழமை அதிகாலை 4.30 மணி வரை விட்டுவிட்டு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக பின்வரும் சேவைகள் பாதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 19, 29, 34, 41, 66, 67, 76, 102, […]

செம்மணி மனிதப் புதைகுழியில், இருந்து இன்று (18) 10 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இலங்கை செய்தி

செம்மணியில் மேலும் 10 எலும்புக் கூடுகள் அடையாளம்

  • August 18, 2026
  • 0 Comments

செம்மணி மனிதப் புதைகுழியில், இருந்து இன்று (18) 10 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 55 வது நாளான இன்று 10 என்பு கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 08 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 109 நாள்கள் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது, 582 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டதுடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 573 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

உலகம்

சீனாவில் பிரபலமாகி வரும் செயற்கை சீற்றங்கள் – குவியும் சுற்றுலா பயணிகள்

  • August 18, 2026
  • 0 Comments

சீனாவில் இயற்கை சீற்றங்களை செயற்கையாக அனுபவிக்கும் புதுவித கலாச்சாரம் சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமாகி வருகிறது. ‘டார்க் டூரிசம் என அழைக்கப்படும் இந்த சாகசம் ஹங்சோ நகரில் அமைந்துள்ளது. பிரபல சீனப் பெண் மற்றும் ஆண் சாகசப் பயணிகளான சாங் சின்யு மற்றும் லியாங் ஹாங் ஆகியோரால் நிறுவப்பட்ட இந்த மையம், குறுகிய காலத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த மையத்தில் மணிக்கு 165 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் செயற்கைப் புயல், கனமழை, மற்றும் திடீர் நகர்ப்புற வெள்ளப்பெருக்கு […]

திருகோணமலை- குமாரபுரத்தில் 1996-ஆம் ஆண்டு 24 தமிழ் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், அனுராதபுரம் மேல்நீதிமன்றத்தால் ஆறு இராணுவத்தினர் விடுவிக்கப்பட்டது குறித்து மீள் விசாரணை நடத்த மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கை செய்தி

22வது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக உயர்நீதிமன்றில் மனுக்கள் தாக்கல்

  • August 18, 2026
  • 0 Comments

அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூலத்தை எதிர்த்து, ஐக்கிய மக்கள் சக்தி,   இலங்கை சங்கம் என்பன உயர்நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளன. ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டாரவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், சட்டமா அதிபர் எதிர்வாதியாகவும் குறிப்பிடப்பட்டுள்ளார். அரசியலமைப்பில் செய்யப்படும் எந்தவொரு திருத்தமும், நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பு, அதிகாரப் பகிர்வு மற்றும் மக்களின் உரிமைகள் ஆகியவற்றின் மீது ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தின் அடிப்படையில் கவனமாகப் பரிசீலிக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் […]

ஐரோப்பா

உக்ரைன் போரில் குதித்த பிரித்தானியா : எச்சரிக்கும் ரஷ்யா

  • August 18, 2026
  • 0 Comments

பிரித்தானியா தயாரித்த இரண்டு ட்ரோன்கள் ரஷ்யாவின் முக்கிய இலக்குகள் மீது தாக்குதல் நடத்த பயன்படுத்தப்பட்டுள்ளதாக ரஷ்ய தூதரகம் குற்றம்சாட்டியுள்ளது. பிரித்தானியா போரை மேலும் தீவிரப்படுத்துவதாகவும், ரத்தம் சிந்தும் தாக்குதல்களுக்கு உடந்தையாக செயல்படுவதாகவும் தூதரகம் தெரிவித்துள்ளது. குறிப்பாக பிரித்தானிய உதிரிபாகங்கள் மற்றும் தொழில்நுட்ப அமைப்புகளைப் பயன்படுத்திய ட்ரோன்கள் ரஷ்யாவின் ரோஸ்டோவ் பிராந்தியத்தில் உள்ள எரிபொருள் கிடங்கு உள்ளிட்ட இலக்குகளைத் தாக்கியதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜகரோவா கூறியுள்ளார். இந்நிலையில் ரஷ்யாவின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த பிரித்தானியா […]

உலகம்

நைஜீரியாவில் நள்ளிரவில் குடியிருப்புவாசிகள் மீது தாக்குதல் -25 பேர் பலி

  • August 18, 2026
  • 0 Comments

நைஜீரியாவின் மத்திய பிளாட்டோ மாநிலத்தில் உள்ள கிராமமொன்றின் மீது நேற்று நள்ளிரவில் நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டதாக மாநில அதிகாரிகளும், குடியிருப்புவாசிகளும் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம், பிளாட்டோ மாநிலத்தில் நிலவும் தொடர்ச்சியான பாதுகாப்பின்மையை எடுத்துக்காட்டுகிறது. அங்கு விவசாய சமூகங்களுக்கும் கால்நடை மேய்ப்பவர்களுக்கும் இடையிலான பதட்டங்கள் பெரும்பாலும் பழிவாங்கும் வன்முறையாக மாறி, மக்கள் இறப்பதற்கும், இடம்பெயர்வதற்கும், வீடற்றவர்களாக ஆவதற்கும் காரணமாகின்றன. தாக்குதல் நடத்தியவர்கள் வீடு வீடாகச் சென்று, அரிவாள்களால் குடியிருப்பாளர்களைக் கொன்றதாகவும், பெரும்பாலும் குழந்தைகளும், பெண்களும் […]