ஐரோப்பா

ஸ்பெயினில் அடுத்தடுத்து பதிவாகிய நிலநடுக்கங்கள் – மூவர் காயம்

ஸ்பெயினின் தெற்கு கிரனாடா Granada மாகாணத்தில் இன்று 4 ரிக்டர் அளவுக்கு மேற்பட்ட மூன்று நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.

இதன்போது மூன்று பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிகப்பெரிய நிலநடுக்கம் 4.7 ரிக்டர் அளவில் ஏற்பட்டது என்றும், அதன் மையப்புள்ளி கிரனாடா நகருக்கு தெற்கே 10 கி.மீ தொலைவில் இருந்ததாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

நிலநடுக்கத்தை தொடர்ந்து வரலாற்றுச் சிறப்புமிக்க அல்ஹம்ப்ரா Alhambra  வளாகத்தின் சில பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்வதை அதிகாரிகள் தடைசெய்தனர்.

அதே நேரத்தில் கிரனாடா  Granada  மாகாண நிர்வாகம் நிர்வாகக் கட்டிடங்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் விளையாட்டு வசதிகளை மூடுவதாக அறிவித்துள்ளது.

மேலும் நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விபரங்களை அதிகாரிகள் மதிப்பாய்வு செய்து வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்