கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசியப் பேரவையின் பிரதிநிதிகள், தமிழகத்தின் பிரபல தமிழ்த் தேசிய அமைப்பான 'மே 17 இயக்கத்தின்' ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மற்றும் அந்த இயக்கத்தின் முக்கிய உறுப்பினர்களை நேரில் சந்தித்துக் கலந்துரையாடினர். செய்தி விளையாட்டு

மே 17 இயக்கத்துடனும் தமிழ்த் தேசியப் பேரவையினர் சென்னையில் பேச்சு

  • July 6, 2026
  • 0 Comments

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசியப் பேரவையின் பிரதிநிதிகள், தமிழகத்தின் பிரபல தமிழ்த் தேசிய அமைப்பான ‘மே 17 இயக்கத்தின்’ ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மற்றும் அந்த இயக்கத்தின் முக்கிய உறுப்பினர்களை நேரில் சந்தித்துக் கலந்துரையாடினர். இந்த விசேட சந்திப்பு நேற்று ஞாயிற்றுக்கிழமை தமிழகத் தலைநகர் சென்னையில் இடம்பெற்றது. இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் சமகால அரசியல் நெருக்கடிகள், சர்வதேச மட்டத்திலான மனித உரிமைப் போராட்டங்கள் மற்றும் தாயக – தமிழகத் தமிழர்களுக்கிடையிலான […]

உலகம்

எல் நினோ தாக்கம் : இலங்கை போன்ற பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள நாடுகளுக்கு ஆபத்து

  • July 6, 2026
  • 0 Comments

உலகம் முழுவதும் வெப்பமான வானிலையை ஏற்படுத்தும் எல் நினோ நிகழ்வு, ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையில் தீவிரமடைய வாய்ப்புள்ளது என்று உலக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. எல் நினோ வானிலை நிகழ்வுகள் பலவீனமான, மிதமான, வலுவான மற்றும் மிகவும் வலுவானது  என நான்கு நிலைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த முறை எல் நினோ நிகழ்வு மூன்றாவது உச்சநிலையாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய மற்றும் கிழக்கு பசிபிக் பெருங்கடல் பகுதியில் அசாதாரணமாக உயர்ந்த கடல் மேற்பரப்பு வெப்பநிலையின் இயற்கையான […]

ஆஸ்திரேலியா உலகம் செய்தி

பசுபிக் பொலிஸ் கூட்டணியை உருவாக்குகிறது ஆஸ்திரேலியா

  • July 6, 2026
  • 0 Comments

பிராந்திய பாதுகாப்பு அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் புதிய பசிபிக் பொலிஸ் கூட்டமைப்பு (Pacific policing bloc) வடிவமைக்கப்பட்டு வருகிறது. ஆஸ்திரேலியா முதன்முறையாக நியூயார்க்கில் நடத்தும் ஐ. நா. பொலிஸ் தலைவர்கள் மாநாட்டில் (UNCOPS) , ஆஸ்திரேலியா பெரடல் பொலிஸ் ஆணையாளர் கிறிஸ்ஸி பாரெட் (Krissy Barrett) இந்த திட்டம் குறித்து தனது கருத்துக்களை முன்வைக்க உள்ளார். அமெரிக்க FBI இயக்குநர் காஷ் படேல் மற்றும் நியூயார்க் பொலிஸ் (NYPD) தலைவர் ஜெசிகா டிஷ் ஆகியோரையும் சந்திக்கவுள்ள ஆஸ்திரேலியா பெரடல் […]

உலகம்

ஒபெக் கூட்டமைப்பின் முக்கிய தீர்மானம் – கச்சா எண்ணெய் விலையில் சரிவு

  • July 6, 2026
  • 0 Comments

உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலைகள் மேலும் சரிந்துள்ளன. ஆகஸ்ட் மாதத்திற்கான தனது உற்பத்தி இலக்குகளை ஒபெக்+ (OPEC+) கூட்டமைப்பு அதிகரித்துள்ளதால், எண்ணெய் விலை சரிந்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கமைய  ஒரு பேரல் பிரென்ட் கச்சா எண்ணெயின் விலை 71.78 அமெரிக்க டொலராக சரிந்துள்ளது, அதே நேரத்தில் ஒரு பேரல் அமெரிக்க WTI கச்சா எண்ணெய் 68.48 அமெரிக்க டொலராகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.” ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இயல்பான எண்ணெய் ஏற்றுமதி மீண்டும் தொடங்கியுள்ளதால், உலகளாவிய விநியோகம் அதிகரித்துள்ளதாகவும் […]

பிரேசில் தேசத்திற்காக மொத்தம் 129 போட்டிகளில் விளையாடி, 80 கோல்களை அடித்துள்ள நெய்மர், அந்த நாட்டின் வரலாற்றிலேயே அதிக கோல்களை அடித்த வீரர் (All-time leading scorer) என்ற பெருமையுடன் விடைபெறுகிறார். செய்தி விளையாட்டு

16 ஆண்டுகால பயணம் நிறைவு: கண்ணீருடன் விடைபெற்றார் நெய்மர்

  • July 6, 2026
  • 0 Comments

நார்வே அணியிடம் பிரேசில் அதிர்ச்சித் தோல்வி அடைந்து வெளியேறியதைத் தொடர்ந்து, பிரேசில் கால்பந்து வரலாற்றின் மிகச் சிறந்த வீரர்களில் ஒருவரான நெய்மர் ஜூனியர் (Neymar Jr.) சர்வதேச கால்பந்திலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதன் மூலம் அவரது 16 ஆண்டுகால புகழ்பெற்ற சர்வதேச கால்பந்து பயணம் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்துள்ளது. பிரேசில் தேசத்திற்காக மொத்தம் 129 போட்டிகளில் விளையாடி, 80 கோல்களை அடித்துள்ள நெய்மர், அந்த நாட்டின் வரலாற்றிலேயே அதிக கோல்களை அடித்த வீரர் (All-time leading […]

நார்வே அணியின் நட்சத்திர ஸ்ட்ரைக்கர் எர்லிங் ஹாலாண்ட் (Erling Haaland) இரண்டாம் பாதியில் அடித்த இரண்டு அதிரடி கோல்கள் இந்த வெற்றிக்கு வழிவகுத்தன. செய்தி முக்கிய செய்திகள் விளையாட்டு

அசுர பல அணியை வீழ்த்தி வரலாற்றில் இடம்பிடித்தது நோர்வே

  • July 6, 2026
  • 0 Comments

ஐந்து முறை உலக சாம்பியனான பிரேசில் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி நார்வே அணி முதன்முறையாக காலிறுதிச் சுற்றுக்கு (Quarter-finals) தகுதி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. நார்வே அணியின் நட்சத்திர ஸ்ட்ரைக்கர் எர்லிங் ஹாலாண்ட் (Erling Haaland) இரண்டாம் பாதியில் அடித்த இரண்டு அதிரடி கோல்கள் இந்த வெற்றிக்கு வழிவகுத்தன. ஆட்டத்தின் முதல் பாதியில் பிரேசில் வீரர் புருனோ கைமரேஸ் (Bruno Guimaraes) தவறவிட்ட பெனால்டி வாய்ப்பு அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக […]

இலங்கை

அநுரவின் மகனுக்கு மட்டும் பரீட்சை எழுதாமல் ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸில் இணைய எப்படி வாய்ப்பு கிடைத்தது?

  • July 5, 2026
  • 0 Comments

ஜனாதிபதி அநுரகுமாரவின் மகன், கசுன் திஸாநாயக்க ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்குள் நுழைவதற்கு எப்படி வாய்ப்புக் கிடைத்தது என்பதை விசாரிக்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தவறியுள்ளதாக விமல் வீரவன்ச குற்றம் சாட்டியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர்,  யோஷித ராஜபக்ச கடற்படையில் இணைந்ததில் உள்ள தவறை மட்டும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தேடிக் கொண்டிருக்கின்றது. அநுரகுமார நாடாளுமன்ற உறுப்பினராக […]

ஐரோப்பா

புட்டின் – ட்ரம்பிடையே ஒரு மணிநேரம் தொலைபேசி உரையாடல்

  • July 5, 2026
  • 0 Comments

உக்ரைனில் நடைபெற்று வரும் போர் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்னிடம் சுமார் ஒரு மணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதன்போது உக்ரைன் போர்க்களத்தின் உண்மையான நிலவரத்தை புட்டின் விவரித்ததாக தெரியவருகிறது. அத்துடன் நேட்டோ (NATO) உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்கான அமெரிக்க அதிபரின் திட்டங்களின் பின்னணி உட்பட, உக்ரைன் விவகாரம் குறித்து  விவாதித்தாக கூறப்படுகிறது. உக்ரைனில் அரசியல் மற்றும் ராஜதந்திர ரீதியிலான தீர்வுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதையும் புட்டின் இதன்போது எடுத்துரைத்துள்ளார். ஆனால் அது ரஷ்யாவின் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலையுடன் கூடிய புறக்கோள் கண்டுப்பிடிப்பு

  • July 5, 2026
  • 0 Comments

பிரபஞ்சத்தில் உயிர்கள் வாழ்வதற்கு ஏற்றதாக இருக்கக்கூடிய மற்றொரு தனித்துவமான புறக்கோளை வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பூமியின் “அருகிலுள்ள அண்டைக்கோள்” என்று அழைக்கப்படும் இந்தக் கோளுக்கு GJ 3378b எனப் பெயரிடப்பட்டுள்ளது. இது 25 ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. வேற்றுக்கிரக உயிர்களைத் தேடும் முயற்சியில் கண்டறியப்பட்ட மிகவும் நம்பிக்கைக்குரிய கோள்களில் ஒன்றாக இது காணப்படுவதாகவும் விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். பூமியை விட இரண்டு மடங்குக்கும் அதிகமான அளவுள்ள இந்தக் கோள், சூப்பர்-எர்த் வகையைச் சேர்ந்தது. இது சிவப்பு குள்ளன் எனப்படும் […]

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் இதுவரை இருவர் உயிரிழந்துள்ளனர். இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

சிறைச்சாலை கலவரம் – இருவர் பலி: 33 பேர் காயம்

  • July 5, 2026
  • 0 Comments

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் இதுவரை இருவர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், காயமடைந்த 33 கைதிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இவருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பட்டுள்ளனர். சிறைக்குள் இன்று பிற்பகல் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர உதவுவதற்காக காவல்துறை சிறப்பு அதிரடிப்படையை அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அருகில் உள்ள பொலிஸ்நிலையங்களின் பொலிஸாரும் வரவழைக்கப்பட்டனர். கைதிகளின் உறவினர்கள் தற்போது சிறைச்சாலை வளாகத்தில் குவிந்துள்ளனர். அதேவேளை, […]