ஐரோப்பா

புட்டின் – ட்ரம்பிடையே ஒரு மணிநேரம் தொலைபேசி உரையாடல்

உக்ரைனில் நடைபெற்று வரும் போர் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்னிடம் சுமார் ஒரு மணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இதன்போது உக்ரைன் போர்க்களத்தின் உண்மையான நிலவரத்தை புட்டின் விவரித்ததாக தெரியவருகிறது.

அத்துடன் நேட்டோ (NATO) உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்கான அமெரிக்க அதிபரின் திட்டங்களின் பின்னணி உட்பட, உக்ரைன் விவகாரம் குறித்து  விவாதித்தாக கூறப்படுகிறது.

உக்ரைனில் அரசியல் மற்றும் ராஜதந்திர ரீதியிலான தீர்வுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதையும் புட்டின் இதன்போது எடுத்துரைத்துள்ளார்.

ஆனால் அது ரஷ்யாவின் கொள்கை ரீதியான அணுகுமுறைகளைக் கருத்தில் கொண்டு அமைய வேண்டும் என்றும்,
  சமரச முயற்சிகளை விட்காஃப் (Witkoff) மற்றும் குஷ்னர் (Kushner) ஆகியோர் தொடர்ந்து மேற்கொள்வார்கள் எனவும் புட்டின் தெரிவித்துள்ளார்.
மேலும் உக்ரைன் மோதல் முடிந்தவுடன் ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே திறக்கப்படும் ஒத்துழைப்புக்கான மகத்தான வாய்ப்புகள் குறித்தும் இருதரப்பு உரையாடலில் கவனம் செலுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்