இலங்கை

அநுரவின் மகனுக்கு மட்டும் பரீட்சை எழுதாமல் ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸில் இணைய எப்படி வாய்ப்பு கிடைத்தது?

ஜனாதிபதி அநுரகுமாரவின் மகன், கசுன் திஸாநாயக்க ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்குள் நுழைவதற்கு எப்படி வாய்ப்புக் கிடைத்தது என்பதை விசாரிக்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தவறியுள்ளதாக விமல் வீரவன்ச குற்றம் சாட்டியுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர்,  யோஷித ராஜபக்ச கடற்படையில் இணைந்ததில் உள்ள தவறை மட்டும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தேடிக் கொண்டிருக்கின்றது.

அநுரகுமார நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துகொண்டு ராஜபக்ச அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்துக் கொண்டிருந்தபோது, அவருடைய மகன் கசுன் திஸாநாயக்க எவ்வித தகுதிப் பரீட்சைகளும் இன்றி மிஹின் லங்கா நிறுவனத்திற்குள் நுழைந்தார்.

பின்னர், மிஹின் லங்கா நிறுவனம் மூடப்படும் போது, கசுன் திஸாநாயக்கவிற்கு மாத்திரம் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தில் இணையும் வாய்ப்பு எவ்வாறு கிடைத்தது. இது குறித்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு ஆராயத் தவறியுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்