ஐரோப்பா

சவுத்தாம்ப்டனில் பொது அமைதி சீர்குலைவு : இருவர் மீது சட்ட நடவடிக்கை!

  • June 4, 2026
  • 0 Comments

இறக்கும் தருவாயில் கைவிலங்கிடப்பட்ட ஹென்றி நோவாக்கின் மரணம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் சவுத்தாம்ப்டனில் (Southampton) பொது அமைதி சீர்குலைந்தது. குறித்த பகுதியில் கலவரம் வெடித்த நிலையில் பொலிஸார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது பொலிஸாரை தாக்கிய சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் மீது வன்முறை, கலவரத்தை ஏற்படுத்துதல், ஆயுதம் வைத்திருந்தல், பொலிஸாரை தாக்கியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. 50 வயதான மாட் ஸ்டைலர் (Matt Styler) மற்றும் 44 வயதான டேனியல் ஃப்ராஸ்ட் (Daniel Frost) […]

ஐரோப்பா

வேல்ஸில் உள்ள ஸ்டீல் ஆலையில் தீ விபத்து – பிரதேசவாசிகளிடம் விசேட கோரிக்கை!

  • June 4, 2026
  • 0 Comments

வேல்ஸில் உள்ள ஸ்டீல் ஆலையொன்றில் நேற்று இரவு தீவிபத்து ஏற்பட்டுள்ளது. மத்திய மற்றும் மேற்கு வேல்ஸ் தீயணைப்பு வீரர்கள் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் ஆலையில் பணிப்புரிந்த ஊழியர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை தீவிபத்தால் அப்பகுதியை புகைமூட்டம் சூழ்ந்துள்ளது. இந்நிலையில் ஆலைக்கு அருகில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் ஜன்னல்கள் மற்றும் கதவுகளை மூடி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். மேலும் தீ விபத்துக்கான காரணத்தை அறிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் செய்தி

காசாவில் இஸ்ரேல் தாக்குதல்: 9 பேர் பலி!

  • June 4, 2026
  • 0 Comments

காசாவில் இஸ்ரேல் இன்று நடத்திய வான்வழித் தாக்குதல்களில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் உட்பட ஒன்பது பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பாலஸ்தீன சுகாதார அமைச்சு இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்தின் வீடு உட்பட நான்கு குடியிருப்புகளை இலக்கு வைத்து இன்று அதிகாலை இஸ்ரேலிய போர் விமானங்கள் மேற்படி தாக்குதல்களை நடத்தியுள்ளன. இந்தத் தாக்குதல்களில் மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர் என்று சுகாதார பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், இந்தத் தாக்குதல்கள் குறித்து இஸ்ரேல் ராணுவ தரப்பில் இருந்து […]

இலங்கை செய்தி

வடக்கு கல்வித்துறையை மேம்படுத்துவது குறித்து ஆராய்வு!

  • June 4, 2026
  • 0 Comments

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் , இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று (04.06.2026) ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பின்போது, ஆசிரியர்களின் இடமாற்றங்கள் தொடர்பில் நிலவும் பிரச்சினைகள் குறித்தும், வடக்கு மாகாணத்தின் கல்வித்துறையை மேலும் மேம்படுத்துவதற்கான பல்வேறு அபிவிருத்திச் செயற்பாடுகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டன. இந்தக் கலந்துரையாடலில் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் சார்பில் அதன் ஆலோசகர், தலைவர் மற்றும் முக்கிய உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

ஐரோப்பா செய்தி

மாற்றமின்றி நீடிக்கும் பவுண்ட் மதிப்பு!

  • June 4, 2026
  • 0 Comments

ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகளில் நிலவும் நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியிலும், பிரிட்டிஷ் பவுண்ட் மதிப்பு பாரிய மாற்றமின்றி நிலைபெற்றுள்ளது. இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே போர்நிறுத்தம் ஏற்பட்டாலும், மத்திய கிழக்கில் தொடரும் இராணுவ மோதல்கள் பணச் சந்தையில் ஒருவித பதற்றத்தைத் தக்கவைத்துள்ளன. அமெரிக்க டாலர் ஒரு பாதுகாப்பான முதலீடாக வலுப்பெற்று வரும் நிலையில், பிரிட்டனின் உள்நாட்டு அரசியல் குழப்பங்கள் மற்றும் வட்டி விகித மாற்றங்கள் குறித்த எதிர்பார்ப்புகள் நாணயத்தின் மதிப்பை ஊசலாடச் செய்கின்றன. குறிப்பாக வர்த்தகர்கள் […]

ஐரோப்பா செய்தி

மரண தண்டனைக்கு ஆதரவு!!! இங்கிலாந்து மாணவர்களின் மனநிலையில் மாற்றம்!

  • June 4, 2026
  • 0 Comments

பிரித்தானிய மாணவர்களில் ஏறக்குறைய பாதி பேர் மரண தண்டனை மீண்டும் கொண்டுவரப்படுவதை ஆதரிப்பதாக கணக்கெடுப்பொன்று வெளிப்படுத்தியுள்ளது. 18 முதல் 21 வயதுக்குட்பட்ட இளங்கலைப் பட்டதாரிகளிடம் மேற்கொள்ளப்பட்ட இந்த கணக்கெடுப்பில்,   47 சதவீதமானோர் மீண்டும் மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். அதேநேரம்  46 சதவீதத்தினர் எந்தவொரு குற்றத்திற்கும் அதை எதிர்ப்பதாக கூறியுள்ளனர். 1969 ஆம் ஆண்டின் இறுதியில் மரண தண்டனை முறை ஒழிக்கப்பட்டது. பீட்டர் அந்தோனி ஆலன் (Peter Anthony Allen)  மற்றும் க்வின் ஓவன் எவன்ஸ் […]

இந்தியா செய்தி

இந்தியாவில் மிக நீண்டகாலம் பதவி வகித்த பிரதமர்: சாதனை படைக்கிறார் மோடி!

  • June 4, 2026
  • 0 Comments

இந்தியா வரலாற்றிலேயே தொடர்ச்சியாக மிக நீண்ட காலம் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் என்ற அரசியல் சாதனையை பிரதமர் மோடி படைக்கவுள்ளார். இந்தியாவின் பிரதமராக 2014 மே 26ஆம் திகதி நரேந்திர மோடி பதவியேற்றார். அன்று முதல் இன்றுவரை மக்கள் ஆணையுடன் பதவியில் நீடிக்கின்றார். இந்நிலையில் பதவியில் எதிர்வரும் ஜூன் 10 ஆம் திகதி தொடர்ச்சியாக 4,399 நாட்களை பிரதமர் பதவியில் அவர் நிறைவு செய்யவுள்ளார். இதன்மூலம் இந்தியாவின் முதல் பொதுத் தேர்தலுக்குப் பிறகு 1952 மே […]

இலங்கை

முதியோர் இல்ல தீவிபத்து – மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

  • June 4, 2026
  • 0 Comments

ஹொரணை முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. இச்சம்பவத்தில் படுகாயமடைந்த மேலும் ஆறு பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் இன்றைய தினம் தீவிபத்து தொடர்பான நீதான் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இச்சம்பவம் நடந்த நேரத்தில் முதியோர் இல்லத்தில் 71 பேர் தங்கியிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர்களில் 50 இற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். தற்போது அவர்கள் அனைவரும்  இராணுவத்தினரின் உதவியுடன் மற்றுமொரு முதியோர் இல்லத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை செய்தி

எழுச்சி பாடல்: கிளிநொச்சி சொல்லிசை கலைஞருக்கு விளக்கமறியல்!

  • June 4, 2026
  • 0 Comments

எழுச்சி பாடல்களைப் பாடி, சமூக ஊடங்களில் பதிவிட்ட  கிளிநொச்சியைச் சேர்ந்த இளம் பாடகர், பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். விடுதலைப் புலிகளை மீளுருவாக்க முனைவதாக அவர்மீது காவல்துறையால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், நாவற்குழி பகுதியில் ஆலய திருவிழாவில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியில்,  கிளிநொச்சியை சேர்ந்த சொல்லிசை கலைஞரான சங்கீதன், பக்தி மற்றும் திரையிசைப் பாடல்களைப் பாடியிருந்தார். அதனையடுத்து, இசை நிகழ்வில்  தான் பாடிய குறித்த பாடல் காணொளிகளுக்கு, ஏற்கனவே தனது இசைச் சேகரிப்பில், பாடிய சொல்லிசை எழுச்சி […]

இலங்கை செய்தி

இலங்கையில் அடை மழை: 16 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிப்பு!

  • June 4, 2026
  • 0 Comments

இரத்தினபுரி, கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் வவுனியா உட்பட 8 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் 16 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அடை மழை, கடும் காற்று மற்றும் வெள்ளம் காரணமாக 4 ஆயிரத்து 291 குடும்பங்களைச் சேர்ந்த 16 ஆயிரத்து 733 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 4 வீடுகள் முழுமையாகவும், 973 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளன. ஒருவர் உயிரிழந்துள்ளார் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எனினும், இன்று காலை ஆட்டோமீது […]