மூன்றாவது முறையாக ட்ரோனை சுட்டு வீழ்த்திய ருமேனியா
ரஷ்யாவின் ஆளில்லா விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தியதாக ருமேனியா இன்று அறிவித்துள்ளது. இதற்கமைய ருமேனியாவானது மூன்றாவது ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஜனாதிபதி நிகுசர் டான் (Nicusor Dan), “இந்நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் சகித்துக்கொள்ள முடியாதது” என்று குறிப்பிட்டுள்ளார்.
ருமேனியா, உக்ரைனுடன் 650 கி.மீ (400 மைல்) நில எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் உக்ரைன் போரின் போது, ரஷ்ய ஆளில்லா விமானங்கள் அதன் வான்வெளியை ஊடுருவி வருகின்றன.
இதுவரை எந்த ட்ரோனையும் சுட்டு வீழ்த்தியது இல்லை என்றாலும், கடந்த மூன்று நாட்களாக இந்த விமானங்களை சுட்டு வீழ்த்து நடவடிக்கையை அந்நாடு மேற்கொண்டு வருகிறது.




